என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
படுதோல்வி பாகிஸ்தான் கிரிக்கெட்டின் பெருமையை காயப்படுத்தி விட்டது: பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி
Byமாலை மலர்6 Dec 2019 1:52 PM GMT (Updated: 6 Dec 2019 1:52 PM GMT)
ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை 0-2 என மோசமான வகையில் இழந்தது, பாகிஸ்தான் கிரிக்கெட் பெருமையயை காயப்படுத்தி விட்டது அசார் அலி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இரண்டு போட்டிகளிலும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சால் ஆஸ்திரேலியாவுக்கு பாகிஸ்தானால் ஈடுகொடுக்க முடியவில்லை.
இரண்டு போட்டிகளிலும் இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் தோல்வியடைந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் பெருமையை காயப்படுத்தி விட்டது என அந்த அணியின் கேப்டன் அசார் அலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அசார் அலி கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு போட்டிகளிலும் நாங்கள் பெற்ற தோல்வியின் விதம் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. ஆஸ்திரேலியா மண்ணில் தோற்றது எங்களது கிரிக்கெட் பெருமையை புண்படுத்தியுள்ளது. இதை ஏற்றுக்கொள்ள கஷ்டமாக உள்ளது.
நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு சரியான தயார்படுத்துதலுடனும், நேர்மறையான மனநிலையுடனும்தான் சென்றோம். இரண்டு போட்டிகளிலும் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. இதற்காக நான் சாக்குபோக்கு சொல்ல விரும்பவில்லை’’ என்றார்.
இரண்டு போட்டிகளிலும் இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் தோல்வியடைந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் பெருமையை காயப்படுத்தி விட்டது என அந்த அணியின் கேப்டன் அசார் அலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அசார் அலி கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு போட்டிகளிலும் நாங்கள் பெற்ற தோல்வியின் விதம் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. ஆஸ்திரேலியா மண்ணில் தோற்றது எங்களது கிரிக்கெட் பெருமையை புண்படுத்தியுள்ளது. இதை ஏற்றுக்கொள்ள கஷ்டமாக உள்ளது.
நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு சரியான தயார்படுத்துதலுடனும், நேர்மறையான மனநிலையுடனும்தான் சென்றோம். இரண்டு போட்டிகளிலும் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. இதற்காக நான் சாக்குபோக்கு சொல்ல விரும்பவில்லை’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X