என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவுடன் இரண்டு டே-நைட் டெஸ்டில் விளையாட விரும்பும் ஆஸ்திரேலியா
Byமாலை மலர்6 Dec 2019 9:44 AM GMT (Updated: 6 Dec 2019 9:44 AM GMT)
இந்தியாவிடம் இரண்டு டே-நைட் டெஸ்டில் விளையாட வலியுறுத்த இருக்கிறது ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு.
ஆஸ்திரேலியா அணி முதன்முதலாக அடிலெய்டு மைதானத்தில் டே-நைட் டெஸ்ட் போட்டியை நடத்தியது. அதில் நியூசிலாந்து அணிக்கெதிராக விளையாடியது.
அதன்பின் ஆஸ்திரேலியா செல்லும் எல்லா நாடுகளுக்கும் எதிராக டே-நைட் போட்டியை நடத்தியது. ஆனால் இந்தியா கடந்த முறை சென்றபோது விளையாட மறுத்துவிட்டது.
பிசிசிஐ தலைவராக கங்குலி நியமிக்கப்பட்ட பின் இந்தியா வங்காளதேச அணிக்கெதிராக முதல்முதலாக டே-நைட் போட்டியில் விளையாடியது.
ஒவ்வொரு தொடரிலும் இந்தியா பிங்க் பந்தில் விளையாட வேண்டும் என கங்குலி தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார்.
இதனால் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் செய்யும்போது இந்தியா டே-நைட் டெஸ்டில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா டே-நைட் போட்டியில் விளையாட வேண்டும் என விரும்புகிறது. இதுகுறித்து பிசிசிஐ-யிடம் வலியுறுத்த இருக்கிறது.
பிரிஸ்பேன், பெர்த் அல்லது அடிலெய்டில் பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் விளையாடவும் மெல்போர்ன் மற்றும் சிட்னியில் வழக்கமான டெஸ்ட் போட்டிகளை நடத்த விரும்புகிறது.
அதன்பின் ஆஸ்திரேலியா செல்லும் எல்லா நாடுகளுக்கும் எதிராக டே-நைட் போட்டியை நடத்தியது. ஆனால் இந்தியா கடந்த முறை சென்றபோது விளையாட மறுத்துவிட்டது.
பிசிசிஐ தலைவராக கங்குலி நியமிக்கப்பட்ட பின் இந்தியா வங்காளதேச அணிக்கெதிராக முதல்முதலாக டே-நைட் போட்டியில் விளையாடியது.
ஒவ்வொரு தொடரிலும் இந்தியா பிங்க் பந்தில் விளையாட வேண்டும் என கங்குலி தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார்.
இதனால் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் செய்யும்போது இந்தியா டே-நைட் டெஸ்டில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா டே-நைட் போட்டியில் விளையாட வேண்டும் என விரும்புகிறது. இதுகுறித்து பிசிசிஐ-யிடம் வலியுறுத்த இருக்கிறது.
பிரிஸ்பேன், பெர்த் அல்லது அடிலெய்டில் பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் விளையாடவும் மெல்போர்ன் மற்றும் சிட்னியில் வழக்கமான டெஸ்ட் போட்டிகளை நடத்த விரும்புகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X