
இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. மதிய உணவு இடைவேளைக்கு முன் நியூசிலாந்து வேகபந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் விலா எலும்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமான வெறியேறினார்.
உணவு இடைவேளைக்குப்பின் களம் இறங்குவார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் டிரென்ட் போல்ட் போட்டி முடியும் வரை களம் இறங்கவில்லை.
காயத்தின் தன்மையை துல்லியமாக கண்டறிய நாளை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்பின் காயம் குறித்த முழுத்தகவல் தெரிய வரும்.
இதனால் ஹாமில்டனில் 29-ந்தேதி தொடங்கும் 2-வது டெஸ்டில் விளையாடுவது சந்தேகம்தான் எனக் கூறப்படுகிறது.
முதல் இன்னிங்சில் 1 விக்கெட் மட்டுமே வீழ்த்திய போல்ட், 2-வது இன்னிங்சில் 6 ஓவர்கள் மட்டுமே வீசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.