என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பகல்-இரவு டெஸ்ட்: கங்குலியால் வரலாற்று பெருமை
Byமாலை மலர்21 Nov 2019 8:48 AM GMT (Updated: 21 Nov 2019 8:48 AM GMT)
பகல்-இரவு டெஸ்ட் போட்டி தொடங்கி 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி தற்போது இதில் விளையாடுகிறது. இந்த வரலாற்று பெருமைக்கு கங்குலிதான் முக்கிய காரணமாகும்.
பகல்-இரவு டெஸ்ட் 2015-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டாலும் 4 ஆண்டுகளுக்கு பிறகுதான் இந்திய அணி தற்போது அதில் விளையாடுகிறது. இந்த வரலாற்று பெருமைக்கு எல்லாம் கங்குலிதான் காரணம்.
பகல்-இரவு டெஸ்டில் விளையாடுவதிலும், அந்த போட்டியை நடத்துவதிலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) விருப்பம் இல்லாமலேயே இருந்தது. முன்னாள் கேப்டனான கங்குலி கடந்த 1 மாதத்துக்கு முன்புதான் பி.சி.சி.ஐ.யின் புதிய தலைவராக பொறுப்பேற்றார். அவரது தீவிர முயற்சியால் இந்தியாவில் முதல் முறையாக பகல்-இரவு டெஸ்ட் நடத்தப்படுகிறது.
வங்காளதேச கிரிக்கெட் வாரியத்துடன் பேசி அந்நாட்டை இதில் விளையாட சம்மதிக்க வைத்தார். இந்திய அணி கேப்டன் விராட்கோலி 3 வினாடியில் இதை ஏற்றுக் கொண்டதாக கங்குலி தெரிவித்து இருந்தார். அவரது கிரிக்கெட் நிர்வாகத்தில் இந்த பகல்-இரவு டெஸ்ட் புதிய மைல் கல்லாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X