என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஷஸ் தொடரை விட இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டிதான் பெரியது: முஷ்டாக் அகமது
Byமாலை மலர்19 Nov 2019 11:12 AM GMT (Updated: 19 Nov 2019 11:12 AM GMT)
இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் கிரிக்கெட் விளையாட்டு நடைபெற வேண்டும். இது ஆஷஸ் தொடரை விட பெரியது என முஷ்டாக் அகமது தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருநாட்டு கிரிக்கெட் தொடர் 2012-க்குப் பிறகு நடைபெறவில்லை. இரு அணிகளும் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் கடைசியாக 2012-ல் மோதியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 2007-ல் மோதியது.
ஐசிசி நடத்தும் தொடர்களிலும், ஆசிய கோப்பையிலும் விளையாடி வருகின்றன. இந்நிலையில் இருநாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் மீண்டும் நடைபெற வேண்டும். இது ஆஷஸ் தொடரை விட மிகப்பெரியது என்று பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முஷ்டாக் அகமது தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முஷ்டாக் அகமது கூறுகையில் ‘‘இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருதரப்பு கிரிக்கெட் தொடர் மீண்டும் நடைபெற வேண்டும். கிரிக்கெட்டால் இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்பு முன்னேற்றம் அடையும் என நினைக்கிறேன். கிரிக்கெட் அன்பை கொடுக்கும். அது சந்தோசத்தையும் மகிழ்ச்சியையும் ரசிகர்களுக்கு வழங்குகிறது.
ஒவ்வொருவரை எதிர்த்து விளையாடுவது இரண்டு அணிகளுக்கும் முக்கியமானது. ஏனென்றால், அவர்கள் விளையாடுவதை ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போதெல்லாம் கிரிக்கெட் மிகப்பெரிய போட்டியாக விளங்குகிறது. உண்மையிலேயே ஆஷஸ் தொடரை விட இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மிகப்பெரியது’’ என்றார்.
ஐசிசி நடத்தும் தொடர்களிலும், ஆசிய கோப்பையிலும் விளையாடி வருகின்றன. இந்நிலையில் இருநாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் மீண்டும் நடைபெற வேண்டும். இது ஆஷஸ் தொடரை விட மிகப்பெரியது என்று பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முஷ்டாக் அகமது தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முஷ்டாக் அகமது கூறுகையில் ‘‘இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருதரப்பு கிரிக்கெட் தொடர் மீண்டும் நடைபெற வேண்டும். கிரிக்கெட்டால் இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்பு முன்னேற்றம் அடையும் என நினைக்கிறேன். கிரிக்கெட் அன்பை கொடுக்கும். அது சந்தோசத்தையும் மகிழ்ச்சியையும் ரசிகர்களுக்கு வழங்குகிறது.
ஒவ்வொருவரை எதிர்த்து விளையாடுவது இரண்டு அணிகளுக்கும் முக்கியமானது. ஏனென்றால், அவர்கள் விளையாடுவதை ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போதெல்லாம் கிரிக்கெட் மிகப்பெரிய போட்டியாக விளங்குகிறது. உண்மையிலேயே ஆஷஸ் தொடரை விட இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மிகப்பெரியது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X