search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணி  வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்ட காட்சி
    X
    இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்ட காட்சி

    பகல்-இரவு டெஸ்ட்: இந்திய வீரர்கள் இந்தூரில் பயிற்சி

    இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதும் பகல் இரவு டெஸ்ட் போட்டி வருகிற 22-ந் தேதி நடக்கவுள்ள நிலையில் இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.
    இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 22-ந் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் வரலாற்றின் முதன் முறையாக பகல்- இரவாக இந்த டெஸ்ட் நடக்கிறது.

    இதற்காக இந்திய வீரர்கள் நேற்று இந்தூரில் மின்னொளியில் பயிற்சி பெற்றனர். முதல் டெஸ்ட் போட்டி 3 நாளிலேயே முடிந்து விட்டதால் வீரர்கள் அங்கு பயிற்சி பெற்றனர்.

    கேப்டன் விராட் கோலி, ரோகித்சர்மா மற்றும் வேகப்பந்து வீரர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்கவில்லை.
    Next Story
    ×