என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐஎஸ்எல் கால்பந்து - ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி மூன்றாவது வெற்றி பெற்றது கொல்கத்தா
Byமாலை மலர்9 Nov 2019 4:48 PM GMT (Updated: 9 Nov 2019 4:48 PM GMT)
கொல்கத்தாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கொல்கத்தா அணி ஜாம்ஷெட்பூர் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
கொல்கத்தா;
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் கோல் அடிக்க முயன்றன. ஆனாலும் யாரும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியின் முடிவில் 0- 0 என இரு அணிகளும் சமனிலை வகித்தன.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 57 மற்றும் 71வது நிமிடங்களில் கொல்கத்தா அணி வீரர் ராய் கிருஷ்ணா இரு கோல்கள் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.
ஆட்டத்தின் இறுதியில் 85-வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணி வீரர் செர்ஜியோ கேசில் ஒரு கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகக் 94-வது நிமிடத்தில் எடு கார்சியா ஒரு கோல் அடித்தார்.
இறுதியில், கொல்கத்தா அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை தோற்கடித்தது, இதன்மூலம் மூன்றாவது வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X