என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒன்றிரண்டு போட்டியோடு யாரும் வெளியேற விரும்பமாட்டார்கள்: சாஹல் சொல்கிறார்
Byமாலை மலர்6 Nov 2019 3:15 PM GMT (Updated: 6 Nov 2019 3:15 PM GMT)
இந்திய அணிக்காக ஒன்றிரண்டு போட்டிகளில் விளையாடியதோடு வெளியேற எந்தவொரு வீரரும் விரும்பமாட்டார் என சாஹல் தெரிவித்துள்ளார்.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் வெற்றி பெற்றது.
இந்திய அணி இளம் வீரர்களை கொண்டு விளையாடி வருகிறது. தோல்வியடைந்தாலும் அணி நிர்வாகத்திடம் இருந்து நெருக்கடி ஏதுமில்லை என்று சாஹல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுழற்பந்து வீச்சாளர் சாஹல் கூறுகையில் ‘‘ஒன்றிரண்டு போட்டிகள் தவறாக செல்லலாம். ஆனால், நிர்வாகத்தில் இருந்து எந்தவித நெருக்கடியும் வரவில்லை. ஒரு விஷயம் என்னவெனில், ஒரு குறிப்பிட்ட போட்டியில் செய்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என்பதுதான்.
தற்போது அணியில் 11 பேர் களத்தில் விளையாடுகிறார்கள். இவர்கள் 15 பேர் கொண்ட அணியில் உள்ளவர்கள். அவர்களுக்கு தங்களுடைய பணி என்ன? என்பது தெரியும். யாராக இருந்தாலும் ஒன்றிரண்டு அல்லது இரண்டு போட்டிகளில் விளையாடிய பின்னர், அணியில் இருந்து வெளியேற விரும்பமாட்டார்கள்.
வங்காளதேச அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் நாங்கள் தோல்வியடைந்தாலும் நேர்மறையான சிந்தனையோடு இருக்கிறோம். இதற்கு முன் நாங்கள் முதல் போட்டியில் தோல்வியடைந்த பின்னர், தொடரை வெற்றிருக்கிறோம்.
முதல் போட்டி முடிந்துவிட்டது. கடைசி போட்டி பற்றி சிந்தித்தால் எதிர்மறையான சிந்தனை மனதிற்குள் வந்து விடும். நாங்கள் ராஜ்கோட்டிற்கு வருவதற்கு முன், தோல்வியடைந்த போட்டியை பற்றி மறந்து விட்டோம்.
15 பேர் கொண்ட ஒட்டுமொத்த அணியும் புதிதாக போட்டியை தொடங்கும் நேர்மறையுடன் உள்ளோம். நாளைய போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது’’என்றார்.
இந்திய அணி இளம் வீரர்களை கொண்டு விளையாடி வருகிறது. தோல்வியடைந்தாலும் அணி நிர்வாகத்திடம் இருந்து நெருக்கடி ஏதுமில்லை என்று சாஹல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுழற்பந்து வீச்சாளர் சாஹல் கூறுகையில் ‘‘ஒன்றிரண்டு போட்டிகள் தவறாக செல்லலாம். ஆனால், நிர்வாகத்தில் இருந்து எந்தவித நெருக்கடியும் வரவில்லை. ஒரு விஷயம் என்னவெனில், ஒரு குறிப்பிட்ட போட்டியில் செய்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என்பதுதான்.
தற்போது அணியில் 11 பேர் களத்தில் விளையாடுகிறார்கள். இவர்கள் 15 பேர் கொண்ட அணியில் உள்ளவர்கள். அவர்களுக்கு தங்களுடைய பணி என்ன? என்பது தெரியும். யாராக இருந்தாலும் ஒன்றிரண்டு அல்லது இரண்டு போட்டிகளில் விளையாடிய பின்னர், அணியில் இருந்து வெளியேற விரும்பமாட்டார்கள்.
வங்காளதேச அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் நாங்கள் தோல்வியடைந்தாலும் நேர்மறையான சிந்தனையோடு இருக்கிறோம். இதற்கு முன் நாங்கள் முதல் போட்டியில் தோல்வியடைந்த பின்னர், தொடரை வெற்றிருக்கிறோம்.
முதல் போட்டி முடிந்துவிட்டது. கடைசி போட்டி பற்றி சிந்தித்தால் எதிர்மறையான சிந்தனை மனதிற்குள் வந்து விடும். நாங்கள் ராஜ்கோட்டிற்கு வருவதற்கு முன், தோல்வியடைந்த போட்டியை பற்றி மறந்து விட்டோம்.
15 பேர் கொண்ட ஒட்டுமொத்த அணியும் புதிதாக போட்டியை தொடங்கும் நேர்மறையுடன் உள்ளோம். நாளைய போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது’’என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X