என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோகித் சர்மா
    X
    ரோகித் சர்மா

    ‘பிங்க்’ பந்தில் விளையாட இன்னும் அதிகமான அனுபவம் தேவை: ரோகித் சர்மா

    ‘பிங்க்’ பந்தில் விளையாட இன்னும் அதிகமான அனுபவம் தேவை என இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான கொல்கத்தா டெஸ்ட் பகல்-இரவு டெஸ்ட் போட்டியாக நடத்தப்பட இருக்கிறது.

    இந்திய அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் பகல்-இரவு டெஸ்டில் பயன்படுத்தப்படும் ‘பிங்க்’ பந்தில் விளையாடியது கிடையாது. ரோகித் சர்மா ஒரேயொரு போட்டியில்தான் விளையாடியுள்ளார்.

    ரோகித் சர்மா ‘பிங்க்’ பால் டெஸ்ட் குறித்து கூறுகையில் ‘‘துலீப் டிராபி தொடரில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே ‘பிங்க்’ பந்தில் விளையாடியுள்ளேன். இந்த பந்தில் விளையாடிய அதிகப்படியான அனுபவம் தேவை. ஆனால், பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட இது சரியான நேரம்’’ என்றார்.
    Next Story
    ×