என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நான் ஃபார்ம் அவுட் இல்லை, ஜஸ்ட் அவுட் ஆஃப் ரன்ஸ் என்கிறார் டேவிட் வார்னர்
Byமாலை மலர்25 Oct 2019 3:23 PM GMT (Updated: 25 Oct 2019 3:23 PM GMT)
ஆஷஸ் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் கிடைக்கும் நம்பிக்கையில் உள்ளார் டேவிட் வார்னர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் டேவிட் வார்னர். ஓராண்டு தடைக்குப்பின் மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார்.
சமீபத்தில் முடிவடைந்த ஆஷஸ் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐந்து டெஸ்ட் போட்டியிலும் அவரது சராசரி 9.50 ஆகும். இதனால் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் வார்னருக்கு இடம் கிடைக்குமா? என்பது உறுதியாக தெரியவில்லை.
ஆனால் நம்பிக்கையுடன் இருக்கும் வார்னர், நான் ஃபார்ம் அவுட் ஆகவில்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து டேவிட் வார்னர் கூறுகையில் ‘‘நான் ஃபார்ம் அவுட் இல்லை, ஜஸ்ட் அவுட் ஆஃப் ரன்ஸ்தான். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டால் சிறப்பாக விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆஷஸ் தொடருக்குப்பின் கப்பாவில் சதம் அடித்துள்ளேன். என்னைப் பொறுத்த வரைக்கும் களம் இறங்கி தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் நோக்கம்.
என்னுடைய நம்பிக்கை எப்போதுமே உயர்வானதாகவே இருக்கும். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் முதன்முறையாக நெருக்கடிக்கு ஆளாகி ரன்கள் சேர்க்க முடியாமல் திணறியுள்ளேன். நாங்கள் சொந்த மண்ணுக்கு திரும்பிய பின்னர், சில போட்டிகளில் ரன்கள் அடித்துள்ளேன்’’ என்றார்.
சமீபத்தில் முடிவடைந்த ஆஷஸ் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐந்து டெஸ்ட் போட்டியிலும் அவரது சராசரி 9.50 ஆகும். இதனால் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் வார்னருக்கு இடம் கிடைக்குமா? என்பது உறுதியாக தெரியவில்லை.
ஆனால் நம்பிக்கையுடன் இருக்கும் வார்னர், நான் ஃபார்ம் அவுட் ஆகவில்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து டேவிட் வார்னர் கூறுகையில் ‘‘நான் ஃபார்ம் அவுட் இல்லை, ஜஸ்ட் அவுட் ஆஃப் ரன்ஸ்தான். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டால் சிறப்பாக விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆஷஸ் தொடருக்குப்பின் கப்பாவில் சதம் அடித்துள்ளேன். என்னைப் பொறுத்த வரைக்கும் களம் இறங்கி தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் நோக்கம்.
என்னுடைய நம்பிக்கை எப்போதுமே உயர்வானதாகவே இருக்கும். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் முதன்முறையாக நெருக்கடிக்கு ஆளாகி ரன்கள் சேர்க்க முடியாமல் திணறியுள்ளேன். நாங்கள் சொந்த மண்ணுக்கு திரும்பிய பின்னர், சில போட்டிகளில் ரன்கள் அடித்துள்ளேன்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X