search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி மற்றும் கங்குலி (பழைய படம்)
    X
    பிரதமர் மோடி மற்றும் கங்குலி (பழைய படம்)

    இந்தியா - வங்காளதேசம் கிரிக்கெட் போட்டி: பிரதமர் மோடியை அழைக்க கங்குலி திட்டம்

    இந்தியா - வங்காளதேசம் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை காண்பதற்காக ஷேக் ஹசினா கொல்கத்தா வரும் நிலையில் பிரதமர் மோடிக்கும் அழைப்பு விடுக்க கங்குலி தீர்மானித்துள்ளார்.
    கொல்கத்தா: 

    வங்காளதேச கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்திய அணிக்கு எதிராக  மூன்று டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. 

    2-வது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் அடுத்த மாதம் 22ம் தேதி நடைபெற உள்ளது.  இந்த போட்டியை காண வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு பெங்கால் கிரிக்கெட் வாரியம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.  பிரதமர் ஷேக் ஹசினா அந்த அழைப்பை ஏற்று போட்டியை காண ஒப்புதல் அளித்துள்ளார்.

    இந்நிலையில், இந்த போட்டியை காண பிரதமர் நரேந்திர மோடியை தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுப்பேன் என பெங்கால்  கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 

    வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினா

    இது குறித்து கங்குலி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், இந்தியா வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள 2வது  டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை காண வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அழைப்பை ஏற்று  போட்டியை காண வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 21ம் தேதி அவர் கொல்கத்தா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    நவம்பர் 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கொல்கத்தா வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  அப்போது இந்த போட்டியை காண வருமாறு பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுப்பேன் என தெரிவித்தார். 

    ‘எல்லாம் சரியாக நடந்தால், இருநாட்டு பிரதமர்கள் மற்றும் மேற்கு வங்காளம் முதல்வர் மம்தா பானர்ஜி மூவரும் ஈடன் கார்டனில்  கிரிக்கெட்டைப் பார்ப்பார்கள்’ என மற்றொரு அதிகாரி கூறினார்.  

    இதற்கிடையில், வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களது  கோரிக்கைகள் நிறைவேறும் வரை சர்வதேச போட்டிகள் உள்பட எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடப் போவதில்லை என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×