என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட்- இந்தியா பேட்டிங்
Byமாலை மலர்10 Oct 2019 4:19 AM GMT (Updated: 10 Oct 2019 4:19 AM GMT)
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்கிறது.
புனே:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்டில் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி புனேவில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக ரோகித் சர்மா, மயங்க் அகர்வால் களமிறங்கினர். புனேவில் மழை பெய்ததால் முதல் நாள் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியில் ஹனுமா விகாரிக்கு பதிலாக கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்க அணியில் நோர்ட்ஜே அறிமுகம் ஆகிறார்.
முதல் டெஸ்ட் போட்டியைப் போன்று இந்த டெஸ்டிலும் ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இதுதவிர கேப்டன் கோலி, புஜாரா, ரஹானே ஆகியோர் கொண்ட வலுவான பேட்டிங் வரிசை உள்ளது.
இந்திய அணி வீரர்கள்: ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி, ரகானே, சகா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ்.
தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள்: எல்கர், மார்க்ரம், புரூயின், பவுமா, டு பிளசிஸ், குயின்டன் டி காக், முத்துசாமி, பிலாண்டர், மகராஜ், ரபாடா, நோர்ட்ஜே.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்டில் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி புனேவில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக ரோகித் சர்மா, மயங்க் அகர்வால் களமிறங்கினர். புனேவில் மழை பெய்ததால் முதல் நாள் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியில் ஹனுமா விகாரிக்கு பதிலாக கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்க அணியில் நோர்ட்ஜே அறிமுகம் ஆகிறார்.
முதல் டெஸ்ட் போட்டியைப் போன்று இந்த டெஸ்டிலும் ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இதுதவிர கேப்டன் கோலி, புஜாரா, ரஹானே ஆகியோர் கொண்ட வலுவான பேட்டிங் வரிசை உள்ளது.
இந்திய அணி வீரர்கள்: ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி, ரகானே, சகா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ்.
தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள்: எல்கர், மார்க்ரம், புரூயின், பவுமா, டு பிளசிஸ், குயின்டன் டி காக், முத்துசாமி, பிலாண்டர், மகராஜ், ரபாடா, நோர்ட்ஜே.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X