search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாயிண்ட் எடுக்கும் முயற்சியில் ஜெய்ப்பூர் அணி வீரர்
    X
    பாயிண்ட் எடுக்கும் முயற்சியில் ஜெய்ப்பூர் அணி வீரர்

    புரோ கபடி லீக்: பெங்களூருவை வீழ்த்தி பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்கவைத்தது ஜெய்ப்பூர்

    புரோ கபடி லீக் தொடரில் அரியானாவில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்திய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துள்ளது.
    சண்டிகர்:

    7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் அரியானாவின் பஞ்ச்குலாவில் இன்று இரவு நடந்த 120-வது லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் புள்ளிகளை குவித்தன. இரு அணிகளும் போராடி புள்ளிகளை குவித்தன. 

    இறுதியில், 41-34 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி பிளே ஆப் சுற்றை தக்கவைத்துக் கொண்டது.

    21-வது ஆட்டத்தில் ஆடிய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி பெற்ற 9-வது வெற்றி இதுவாகும். அத்துடன் புள்ளிப் பட்டியலில் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது. 21-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு புல்ஸ் அணி சந்தித்த 9-வது தோல்வி இதுவாகும்.

    பஞ்ச்குலாவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் தெலுங்கு டைட்டன்சை 52-32 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது அரியானா ஸ்டீலர்ஸ் அணி.
    Next Story
    ×