என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால்?, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எச்சரிக்கை விடும் டு பிளிசிஸ்
Byமாலை மலர்1 Oct 2019 11:18 AM GMT (Updated: 1 Oct 2019 11:18 AM GMT)
ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால்?... அவ்வளவுதான் என இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் டு பிளிசிஸ்.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. கடந்த முறை தென்ஆப்பிரிக்கா இந்தியாவில் விளையாடும்போது ஆடுகளங்கள் முதல் ஓவரில் இருந்து சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
டி வில்லியர்ஸ், டு பிளிசிஸ், அம்லா போன்ற ஜாம்பவான்களே கடுமையாக திணறினார்கள். அரைசதம் அடித்தாலே மிகப்பெரியதாக பார்க்கப்பட்டது. இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா விக்கெட்டுக்களை அள்ளினர். அதேவேளையில் தென்ஆப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர்களால் சாதிக்க முடியவில்லை.
ஆனால் இந்த முறை இடது கை சுழற்பந்து வீச்சாளரான கேசவ் மகாராஜ்-யை மிகப்பெரிய ஆயுதமாக உபயோகிக்க தென்ஆப்பிரிக்கா தயாராக உள்ளது.
வேகப்பந்து வீச்சை நாங்கள் முதுகெலும்பாக கொண்டுள்ளோம். ஒருவேளை ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்போம் என டு பிளிசிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து டு பிளிசிஸ் கூறுகையில் ‘‘கடந்த தொடரில் ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. எங்களுடைய சுழற்பந்து வீச்சாளரான மகாராஜ், உலகளில் உள்ள சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்கிறார். ஆகவே, சுழற்பந்து வீச்சுக்கு சாதமாக ஆடுகளம் கொடுக்கப்பட்டால் இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு அவர் கடும் சவாலாக திகழ்வார்.
நாங்கள் எப்போதுமே வேகப்பந்து வீச்சை பலமாக கொண்டவர்கள். ஆனால், துல்லியமான வேகத்தால் அதை உறுதி செய்வது முக்கியமானதாகும்’’ என்றார்.
டி வில்லியர்ஸ், டு பிளிசிஸ், அம்லா போன்ற ஜாம்பவான்களே கடுமையாக திணறினார்கள். அரைசதம் அடித்தாலே மிகப்பெரியதாக பார்க்கப்பட்டது. இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா விக்கெட்டுக்களை அள்ளினர். அதேவேளையில் தென்ஆப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர்களால் சாதிக்க முடியவில்லை.
ஆனால் இந்த முறை இடது கை சுழற்பந்து வீச்சாளரான கேசவ் மகாராஜ்-யை மிகப்பெரிய ஆயுதமாக உபயோகிக்க தென்ஆப்பிரிக்கா தயாராக உள்ளது.
வேகப்பந்து வீச்சை நாங்கள் முதுகெலும்பாக கொண்டுள்ளோம். ஒருவேளை ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்போம் என டு பிளிசிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து டு பிளிசிஸ் கூறுகையில் ‘‘கடந்த தொடரில் ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. எங்களுடைய சுழற்பந்து வீச்சாளரான மகாராஜ், உலகளில் உள்ள சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்கிறார். ஆகவே, சுழற்பந்து வீச்சுக்கு சாதமாக ஆடுகளம் கொடுக்கப்பட்டால் இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு அவர் கடும் சவாலாக திகழ்வார்.
நாங்கள் எப்போதுமே வேகப்பந்து வீச்சை பலமாக கொண்டவர்கள். ஆனால், துல்லியமான வேகத்தால் அதை உறுதி செய்வது முக்கியமானதாகும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X