என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பயிற்சி ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சை பரிசோதித்த இந்தியா: ஆடும் லெவனில் ஒருவரா? இருவரா?
Byமாலை மலர்29 May 2019 9:51 AM GMT (Updated: 29 May 2019 9:51 AM GMT)
நியூசிலாந்து மற்றும் வங்காளதேசத்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்களை சிறப்பான முறையில் பரிசோதித்துள்ளது.
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நாளை (மே 30-ந்தேதி) தொடங்குகிறது. இதற்குமுன் 10 அணிகளும் தலா இரண்டு பயிற்சி ஆட்டங்களில் மோதின.
முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 179 ரன்னில் சுருண்டது, பின்னர் விளையாடிய நியூசிலாந்து 37.1 ஓவரில் 180 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார், முகமது சமி, பும்ரா ஆகியோர் தலா நான்கு ஓவர்கள் மட்டுமே வீசினார்கள். இந்த அணியின் சுழற்பந்து வீச்சு குறித்து சில சந்தேகம் உள்ளது. இதனால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்து, அவர்களுக்கு நம்பிக்கையூட்ட கேப்டன் விராட் கோலி முடிவு செய்ததார்.
இந்தியா 37.1 ஓவர்கள் வீசியது, இதில் சாஹல் (6), குல்தீப் யாதவ் (8.1) மற்றும் ஜடேஜா (7) ஆகியோர் 21.1 ஓவர்கள் வீசினர். அதேபோல் நேற்றைய வங்காளதேச அணிக்கெதிரான ஆட்டத்தில் மூன்று பேரும் இணைந்து 29.3 ஓவர்கள் வீசினர். சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் தலா மூன்று விக்கெட்டுக்களும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் கடும் சோதனைக்கு உள்ளாகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா சுழற்பந்து வீச்சாளர்களை சிறப்பான முறையில் பரிசோதித்துள்ளது.
ஆடும் லெவனில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெறுவார்களா? அல்லது ஒரு சுழற்பந்து வீச்சாளர், ஆல்ரவுண்டர கேதர் ஜாதவ் ஆகியோருடன் இந்தியா களம் இறங்குமா? என்பது தென்ஆப்பிரிக்கா போட்டியின்போதுதான் தெரியவரும்.
முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 179 ரன்னில் சுருண்டது, பின்னர் விளையாடிய நியூசிலாந்து 37.1 ஓவரில் 180 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார், முகமது சமி, பும்ரா ஆகியோர் தலா நான்கு ஓவர்கள் மட்டுமே வீசினார்கள். இந்த அணியின் சுழற்பந்து வீச்சு குறித்து சில சந்தேகம் உள்ளது. இதனால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்து, அவர்களுக்கு நம்பிக்கையூட்ட கேப்டன் விராட் கோலி முடிவு செய்ததார்.
இந்தியா 37.1 ஓவர்கள் வீசியது, இதில் சாஹல் (6), குல்தீப் யாதவ் (8.1) மற்றும் ஜடேஜா (7) ஆகியோர் 21.1 ஓவர்கள் வீசினர். அதேபோல் நேற்றைய வங்காளதேச அணிக்கெதிரான ஆட்டத்தில் மூன்று பேரும் இணைந்து 29.3 ஓவர்கள் வீசினர். சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் தலா மூன்று விக்கெட்டுக்களும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் கடும் சோதனைக்கு உள்ளாகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா சுழற்பந்து வீச்சாளர்களை சிறப்பான முறையில் பரிசோதித்துள்ளது.
ஆடும் லெவனில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெறுவார்களா? அல்லது ஒரு சுழற்பந்து வீச்சாளர், ஆல்ரவுண்டர கேதர் ஜாதவ் ஆகியோருடன் இந்தியா களம் இறங்குமா? என்பது தென்ஆப்பிரிக்கா போட்டியின்போதுதான் தெரியவரும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X