search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எனது சிறந்த இன்னிங்ஸில் இதுவும் ஒன்று: 58 ரன்கள் குவித்த எம்எஸ் டோனி பெருமிதம்
    X

    எனது சிறந்த இன்னிங்ஸில் இதுவும் ஒன்று: 58 ரன்கள் குவித்த எம்எஸ் டோனி பெருமிதம்

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக 58 ரன்கள் குவித்த எம்எஸ் டோனி, எனது சிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்று என தெரிவித்துள்ளார். #IPL2019 #RRvCSK
    12-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன் எடுத்தது. பட்லர் 23 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 28 ரன்னும், கோபால் 19 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சென்னைக்கு ஆரம்பம் அதிர்ச்சியாக இருந்தது. 24 ரன்னுக்குள் 4 விக்கெட்டை (5.5 ஓவர்) இழந்தது. அதன்பின் டோனி - அம்பதி ராயுடு ஜோடி சிறப்பாக விளையாடியது.

    அம்பதி ராயுடு 57 ரன்னில் அவுட் ஆனார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 95 ரன் சேர்த்தது. கடைசி ஓவரில் சென்னை வெற்றிக்கு 18 ரன் தேவைப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் வீசிய அந்த ஓவரில் 3-வது பந்தில் டோனி (58 ரன்) அவுட் ஆனார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



    கடைசி பந்தில் 3 ரன் தேவைப்பட்ட நிலையில் சான்ட்னெர் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 6-வது வெற்றி (7 ஆட்டம்) இதுவாகும். ராஜஸ்தான் 5-வது தோல்வியை (6 ஆட்டம்) சந்தித்தது.

    வெற்றி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறியதாவது:-

    கடைசி கட்டத்தில் எங்களுக்கு அவர்கள் (ராஜஸ்தான்) நெருக்கடியை உருவாக்கினர். இதுபோன்ற வெற்றியை பெறும்போது நிறைய வி‌ஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். இந்த வெற்றியை கொண்டாடும்போது எதிர்மறை சம்பவங்களில் இருந்து நாம் வெளிவருவது முக்கியம். இல்லாவிட்டால் பின்னர் அது எங்களுக்கு போட்டி தொடரில் காயத்தை ஏற்படுத்தி விடும். கடைசி 2 ஓவர்களில் இரண்டு பெரிய ஷாட் அடிக்க வேண்டும் என்று கருதினேன்.

    இங்கு (ஜெய்ப்பூர்) எங்களுக்கு ரசிகர்கள் அதிகளவு ஆதரவு அளித்தனர். அவர்களுக்கு நன்றி. எனது சிறந்த இன்னிங்சில் இதுவும் ஒன்று என்பதை மறக்கமாட்டேன். அதனால் இந்த மைதானம் எனக்கு சிறப்பு வாய்ந்தது. இந்த வெற்றி மூலம் அடுத்த ஆட்டங்களில் சில புதிய பந்து வீச்சாளர்களை பரிசோதித்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×