search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடால் ஆட்டத்தை பார்த்து ரசித்த ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக்
    X

    நடால் ஆட்டத்தை பார்த்து ரசித்த ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக்

    அடிலெய்டு ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற சந்தோசத்தோடு ரோகித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் நடால் ஆட்டத்தை கண்டு ரசித்துள்ளனர். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.  2-வது போட்டி அடிலெய்டில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தற்போது மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. அடிலெய்டு ஆட்டம் முடிந்த பின்னர் இந்திய அணி மெல்போர்ன் வந்தடைந்தது. அப்போது ஓய்வு நேரத்தில் ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் நடால் - மேத்யூ எப்டன் மோதிய 2-வது சுற்று ஆட்டத்தை பார்த்து ரசித்தனர். இதில் நடால் 6-3, 6-2, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    நடால் போட்டியை பார்த்த போட்டோவை ரோகித் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×