என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிட்னி டெஸ்ட்: கடைசி நாள் முழுவதும் நின்று தோல்வியை தவிர்க்குமா ஆஸ்திரேலியா?
Byமாலை மலர்6 Jan 2019 9:33 AM GMT (Updated: 6 Jan 2019 9:33 AM GMT)
சிட்னி டெஸ்டில் கடைசி நாள் முழுவதும் பேட்டிங் செய்தால்தான் தோல்வியை தவிர்க்க முடியும் என்பதால் நெருக்கடியில் உள்ளது ஆஸ்திரேலியா. #AUSvIND
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது.
322 ரன்கள் முன்னிலைப் பெற்ற இந்தியா, பாலோ-ஆன் வழங்கியது. இதனால் ஆஸ்திரேலியா தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது.
இன்றைய 4-வது நாள் ஆட்டத்தின் முதல் செசன் மழையால் முழுவதும் தடைபட்டது. உணவு இடைவேளைக்குப்பிறகு 2-வது செசனில் இந்தியா சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலியாவை ஆல்அவுட் செய்தது. தேனீர் இடைவேளைக்குப்பிறகு போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருக்கும்போது நிறுத்தப்பட்டது. அத்துடன் 4-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.
தற்போது வரை ஆஸ்திரேலியா 316 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. நாளை ஒருநாள் முழுவதும் உள்ளது. மழை பெய்யாமல் இருந்தால் ஆஸ்திரேலியா தோல்வியை தவிர்க்க கடுமையாக போராட வேண்டும். அதேசமயம் வாய்ப்பு கிடைக்கும் நேரத்தை பயன்படுத்தி இந்தியா வெற்றி பெற முயற்சி செய்யும்.
இந்த போட்டியில் இந்தியா தோல்வியடைவதற்கான சாத்தியமே இல்லை. ஏற்கனவே 2-1 என முன்னிலையில் இருப்பதால் தொடரை வெல்வது உறுதியாகிவிட்டது.
322 ரன்கள் முன்னிலைப் பெற்ற இந்தியா, பாலோ-ஆன் வழங்கியது. இதனால் ஆஸ்திரேலியா தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது.
இன்றைய 4-வது நாள் ஆட்டத்தின் முதல் செசன் மழையால் முழுவதும் தடைபட்டது. உணவு இடைவேளைக்குப்பிறகு 2-வது செசனில் இந்தியா சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலியாவை ஆல்அவுட் செய்தது. தேனீர் இடைவேளைக்குப்பிறகு போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருக்கும்போது நிறுத்தப்பட்டது. அத்துடன் 4-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.
தற்போது வரை ஆஸ்திரேலியா 316 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. நாளை ஒருநாள் முழுவதும் உள்ளது. மழை பெய்யாமல் இருந்தால் ஆஸ்திரேலியா தோல்வியை தவிர்க்க கடுமையாக போராட வேண்டும். அதேசமயம் வாய்ப்பு கிடைக்கும் நேரத்தை பயன்படுத்தி இந்தியா வெற்றி பெற முயற்சி செய்யும்.
இந்த போட்டியில் இந்தியா தோல்வியடைவதற்கான சாத்தியமே இல்லை. ஏற்கனவே 2-1 என முன்னிலையில் இருப்பதால் தொடரை வெல்வது உறுதியாகிவிட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X