search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிட்னி டெஸ்ட்: கடைசி நாள் முழுவதும் நின்று தோல்வியை தவிர்க்குமா ஆஸ்திரேலியா?
    X

    சிட்னி டெஸ்ட்: கடைசி நாள் முழுவதும் நின்று தோல்வியை தவிர்க்குமா ஆஸ்திரேலியா?

    சிட்னி டெஸ்டில் கடைசி நாள் முழுவதும் பேட்டிங் செய்தால்தான் தோல்வியை தவிர்க்க முடியும் என்பதால் நெருக்கடியில் உள்ளது ஆஸ்திரேலியா. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது.

    322 ரன்கள் முன்னிலைப் பெற்ற இந்தியா, பாலோ-ஆன் வழங்கியது. இதனால் ஆஸ்திரேலியா தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது.

    இன்றைய 4-வது நாள் ஆட்டத்தின் முதல் செசன் மழையால் முழுவதும் தடைபட்டது. உணவு இடைவேளைக்குப்பிறகு 2-வது செசனில் இந்தியா சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலியாவை ஆல்அவுட் செய்தது. தேனீர் இடைவேளைக்குப்பிறகு போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருக்கும்போது நிறுத்தப்பட்டது. அத்துடன் 4-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.

    தற்போது வரை ஆஸ்திரேலியா 316 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. நாளை ஒருநாள் முழுவதும் உள்ளது. மழை பெய்யாமல் இருந்தால் ஆஸ்திரேலியா தோல்வியை தவிர்க்க கடுமையாக போராட வேண்டும். அதேசமயம் வாய்ப்பு கிடைக்கும் நேரத்தை பயன்படுத்தி இந்தியா வெற்றி பெற முயற்சி செய்யும்.

    இந்த போட்டியில் இந்தியா தோல்வியடைவதற்கான சாத்தியமே இல்லை. ஏற்கனவே 2-1 என முன்னிலையில் இருப்பதால் தொடரை வெல்வது உறுதியாகிவிட்டது.
    Next Story
    ×