search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியா பந்துவீச்சில் இந்திய அணி திணறல்- 167/6
    X

    ஆஸ்திரேலியா பந்துவீச்சில் இந்திய அணி திணறல்- 167/6

    அடிலெய்டில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. #AUSvIND #Pujara #RohitSharma
    அடிலெய்டு:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் முதல் டெஸ்ட் அடிலெய்டுவில் இன்று தொடங்கியது.

    இந்திய அணி கேப்டன் விராட்கோலி ‘டாஸ்’ வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித்சர்மாவுக்கு 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு கிடைத்தது. விகாரியை பின்னுக்கு தள்ளிவிட்டு அவருக்கு அணி நிர்வாகம் முன்னுரிமை கொடுத்தது.

    லோகேஷ் ராகுலும், முரளிவிஜய்யும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் இந்திய அணி திணறியது. 19 ரன் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்தது.

    ஆட்டத்தின் 2-வது ஓவரில் ராகுல் 2 ரன்னில் ஹசில்வுட் பந்தில் ‘அவுட்’ ஆனார். முரளிவிஜய் 11 ரன்னில் வெளியேறினார். ஸ்டார்க் அவரது விக்கெட்டை வீழ்த்தினார்.


    ராகுல் விக்கெட்டை கைப்பற்றிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹசில்வுட்டை சக வீரர்கள் பாராட்டும் காட்சி


    அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட்கோலி 3 ரன்னில் ஆட்டம் இழந்து மிகுந்த ஏமாற்றம் அளித்தார்.

    கம்மின்ஸ் முதல் ஓவரில் அவர் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் அடித்த பந்தை ‘கல்லி’ பகுதியில் நின்ற உஸ்மான் குவாஜா ‘டைவ்’ அடித்து இடது கையில் பிடித்தார். இந்த எதிர்பாராத கேட்சால் கோலி அதிர்ச்சியுடன் வெளியேறினார்.

    4-வது விக்கெட்டுக்கு புஜாராவுடன், ரகானே ஜோடி சேர்ந்தார். ஆட்டத்தின் 16-வது ஓவரில் நாதன் லயன் பந்தில் ரகானே முதல் சிக்சரை அடித்தார்.

    இந்த ஜோடியையும் ஆஸ்திரேலிய பவுலர்கள் நீடிக்க விடவில்லை. ஸ்கோர் 41 ஆக இருந்தபோது இந்தியாவின் 4-வது விக்கெட் சரிந்தது. ரகானே 13 ரன்னில் ஹசில்வுட் பந்தில் ஆட்டம் இழந்தார்.

    அடுத்து ரோகித்சர்மா களம் வந்தார். அவர் நம்பிக்கையுடன் ஆடினார். 24.4-வது ஓவரில் இந்திய அணி 50-வது ரன்னை தொட்டது. கம்மின்ஸ் வீசிய அதற்கு அடுத்த ஓவரில் ரோகித்சர்மா சிக்சர் அடித்தார்.

    மதிய உணவு இடை வேளையின் போது இந்தியா 27 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 56 ரன் எடுத்து மோசமான நிலையில் இருந்தது. புஜாரா 11 ரன்னுடனும், ரோகித்சர்மா 15 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இருவரும் தொடர்ந்து விளையாடினர். கம்மின்ஸ், லயன் பந்துகளில் ரோகித்சர்மா சிக்சர் அடித்தார்.

    நன்றாக ஆடிக்கொண்டிருந்த ரோகித்சர்மாவை சுழற்பந்து வீரர் நாதன் லயன் வெளியேற்றினார். அவர் 61 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 37 ரன்கள் எடுத்தார்.



    அப்போது இந்தியாவின் ஸ்கோர் 86 ஆக இருந்தது. 5-வது விக்கெட் ஜோடி 45 ரன் எடுத்தது. இதில் ரோகித்சர்மாவின் பங்களிப்பு தான் அதிகமாக இருந்தது.

    6-வது விக்கெட்டுக்கு புஜாராவுடன், விக்கெட் கீப்பர் ரிசப் பந்த் ஜோடி சேர்ந்தார். புஜாரா தொடர்ந்து நிதானமாக ஆடினார். இந்திய அணி 40.2 ஓவர்களில் 100 ரன்னை தொட்டது.

    நாதன் லயன் வீசிய 49- வது ஓவரின் முதல் பந்தில் ரிஷப் பந்த் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 38 பந்துகளில் 25 ரன்கள் (2 பவுண்டரி, 1 சிக்ஸ்) எடுத்திருந்தார்.

    அடுத்து புஜாராவுடன் தமிழக வீரர் அஸ்வின் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர்.

    புஜாரா 153 பந்துகளில் தனது 20-வது டெஸ்ட் அரை சதத்தை கடந்தார். தற்போது வரை 66 ஓவருக்கு 167 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. #AUSvIND #Pujara #RohitSharma
    Next Story
    ×