என் மலர்

    செய்திகள்

    புரோ கபடி லீக் - ஜெய்ப்பூரை வீழ்த்தி மூன்றாவது வெற்றியை பதிவுசெய்தது டெல்லி
    X

    புரோ கபடி லீக் - ஜெய்ப்பூரை வீழ்த்தி மூன்றாவது வெற்றியை பதிவுசெய்தது டெல்லி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    புரோ கபடி லீக் போட்டியில் மும்பையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்திய தபாங் டெல்லி அணி தனது மூன்றாவது வெற்றியை பதிவுசெய்தது. #ProKabaddi
    மும்பை:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும், தபாங் டெல்லி அணியும் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இரு அணி வீரர்களும் நிதானமாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 10 - 10 என்ற புள்ளிக்கணக்கில் இரு அணிகளும் சமனிலை வகித்தன.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியிக் தபாங் டெல்லி அணி துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஜெய்ப்பூர் அணியை விட அதிகமாக புள்ளிகள் பெற்றனர்.

    இறுதியில், ஜெய்ப்பூர் அணியை 40 - 29 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்த தொடரில் மூன்றாவது வெற்றி பெற்ற டெல்லி அணி, புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #ProKabaddi 
    Next Story
    ×