search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேப்பாக்கம் மைதானத்தில் ரோகித் சர்மா புதிய சாதனை படைப்பாரா?- ஒயிட்வாஷ் ஆர்வத்தில் இந்திய அணி
    X

    சேப்பாக்கம் மைதானத்தில் ரோகித் சர்மா புதிய சாதனை படைப்பாரா?- ஒயிட்வாஷ் ஆர்வத்தில் இந்திய அணி

    சேப்பாக்கத்தில் டி20 போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். #INDvWI
    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று 7 மணிக்கு நடக்கிறது. முதல் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றது போலவே இந்த ஆட்டத்திலும் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றிபெறும் ஆர்வத்தில் ரோகித் தலைமையிலான இந்திய அணி இருக்கிறது.

    ஒயிட்வாஷ் ஆர்வத்தில் இந்திய அணி உள்ளது. அதே நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் ஆறுதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

    கடந்த போட்டியில் ரோகித் சர்மா அதிரடியான சதத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து படைத்தார். இதேபோல் இன்றும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை ரசிகர்களை மகிழ்விப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    20 ஒவரில் 4 செஞ்சூரி அடித்து சாதனை படைத்த ரோகித் சர்மா அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையை சேப்பாக்கத்தில் படைப்பாரா? என்று எதிர்நோக்கப்படுகிறது. அதற்கு அவருக்கு இன்னும் 69 ரன்னே தேவை. ரோகித் சர்மா 2203 ரன் (79 இன்னிங்ஸ்) எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் 2271 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். இன்று இந்த சாதனையை முறியடிக்காவிட்டால் அவர் ஆஸ்திரேலிய பயணம் வரை காத்திருக்க வேண்டும்.

    ரோகித் சர்மா 74 ரன் எடுத்தால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனையை பெறுவார். தற்போது அவர் 330 ரன்னுடன் 4-வது இடத்தில் உள்ளார். பாபர் ஆசம் (403 ரன்), அலெக்ஸ் ஹேல்ஸ் (384), தில்சன் (346) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.



    முழுமையாக வென்றால் 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரை 2 முறை ஒயிட்வாஷ் செய்த இந்திய கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைப்பார். சர்வதேச அளவில் 3-வது கேப்டன் என்ற பெருமையை பெறுவார். சர்பிராஸ் அகமது (பாகிஸ்தான்), 5 முறையும், ஆஸ்கர்கான் (ஆப்கானிஸ்தான்) 3 முறையும் ஒயிட்வாஷ் செய்துள்ளனர்.

    இந்திய அணி 3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரை ஏற்கனவே 2 முறை முழுமையாக கைப்பற்றியது. 2016-ல் ஆஸ்திரேலியாவையும், 2017-ல் இலங்கையையும் ஒயிட்வாஷ் செய்தது. தற்போது 3-வது முறையாக ஒயிட்வாஷ் ஆர்வத்தில் இந்தியா இருக்கிறது.
    Next Story
    ×