search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டேபிள் டென்னிஸ் - ஜிம்கானா கிளப் வீரர் சாம்பியன்
    X

    டேபிள் டென்னிஸ் - ஜிம்கானா கிளப் வீரர் சாம்பியன்

    மெட்ராஸ் ஜிம்கானா கிளப் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான ஓபன் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் ஜிம்கானா கிளப் வீரர் ஷரண் ஸ்ரீதர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
    சென்னை:

    மெட்ராஸ் ஜிம்கானா கிளப் சார்பில் கிளப்களுக்கு இடையிலான டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் நடந்தது. இதில் ஆண்களுக்கான ஓபன் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் ஜிம்கானா கிளப் வீரர் ஷரண் ஸ்ரீதர் 11-5, 13-11, 11-7 என்ற செட் கணக்கில் ஆந்திரா கிளப் வீரர் சாய் தினேஷ்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் இரட்டையர் பிரிவில் ஷரண் ஸ்ரீதர்-சி.என்.ஸ்ரீதர் (ஜிம்கானா கிளப்) ஜோடி 11-5, 12-10, 11-5 என்ற செட் கணக்கில் எம்.ஏ.ஆர்யா-எம்.எஸ்.ஆதித்யா (மைலாப்பூர் கிளப்) இணையை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் வித்யா ராமச்சந்திரனும் (மைலாப்பூர் கிளப்), வெட்ரன்ஸ் ஒற்றையர் பிரிவில் ஜேக்கப் ராஜ்குமாரும் (டி.என்.சி.ஏ. கிளப்) வெற்றி பெற்றனர். 
    Next Story
    ×