என் மலர்
செய்திகள்

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணியில் மீண்டும் இடம்பிடித்த லசித் மலிங்கா
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா மீண்டும் இடம் பிடித்துள்ளார். #AsianCup2018 #LasithMalinga
14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 15-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் உள்பட 6 அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்நிலையில், ஆசிய கோப்பைக்கான 16 பேர் கொண்ட அணியில் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா மீண்டும் இடம் பிடித்துள்ளார்.
ஆசிய கோப்பைக்கான இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின் விவரம்:
ஏஞ்சலோ மேத்யூஸ் (கேப்டன்), குசால் பெராரா, குசால் மெண்டிஸ், உபுல் தரங்கா, தினேஷ் சண்டிமால், தனுஷ்கா குணதிலகா, திசாரா பெராரா, டாசன் ஷனகா, தனஞ்ஜயா டி சில்வா, அகிலா தனஞ்ஜயா, தில்ருவான் பெராரா, அமிலா அபோன்சோ, காசன் ரஜிதா, சுரங்கா லக்மல், துஷ்மந்த சமீரா, லசித் மலிங்கா #AsianCup2018 #LasithMalinga
Next Story






