என் மலர்
செய்திகள்

ஸ்குவாஷ்- பதக்கத்தை உறுதி செய்தனர் தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா
ஆசிய விளையாட்டு போட்டி ஸ்குவாஷில் இந்திய வீராங்கனைகள் தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா பதக்கத்தை உறுதி செய்துள்ளனர். #AsianGames2018
ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. ஸ்குவாஷ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. ஒரு காலிறுதியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான தீபிகா பல்லிகல் ஜப்பானைச் சேர்ந்த மிசாகி கோபாயாஷியை எதிர்கொண்டார். இதில் 3-0 என தீபிகா பல்லிகல் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதியில் மலேசியா வீராங்கனை நிக்கோல் அன்-ஐ எதிர்கொள்கிறார். அரையிறுதிக்கு முன்னேறினாலே பதக்கம் உறுதி என்பதால் தீபிகா பல்லிகல் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

மற்றொரு காலிறுதியில் ஜோஷ்னா சின்னப்பா ஹாங் காங்கின் ஹோ லிங் சான்-ஐ எதிர்கொண்டார். இதில் 3-1 என ஜோஷ்னா சின்னப்பா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதனால் இவரும் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதியில் மலேசியா வீராங்கனை நிக்கோல் அன்-ஐ எதிர்கொள்கிறார். அரையிறுதிக்கு முன்னேறினாலே பதக்கம் உறுதி என்பதால் தீபிகா பல்லிகல் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

மற்றொரு காலிறுதியில் ஜோஷ்னா சின்னப்பா ஹாங் காங்கின் ஹோ லிங் சான்-ஐ எதிர்கொண்டார். இதில் 3-1 என ஜோஷ்னா சின்னப்பா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதனால் இவரும் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
Next Story






