என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மைக்-டிராப் கொண்டாட்டம்- ஜோ ரூட்டிற்கு பதிலடி கொடுத்த விராட் கோலி
Byமாலை மலர்2 Aug 2018 9:32 AM GMT
எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் 80 ரன்னில் ரன்அவுட் ஆன ஜோ ரூட்டை மைக்-டிராப் கொண்டாட்டம் சைகை மூலம் பதிலடி கொடுத்தார் விராட் கோலி. #ViratKohli #JoeRoot
இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
பார்ட்னர்ஷிப் 100-ஐ தாண்டிச் சென்றது. 63-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை பேர்ஸ்டோவ் லெக்சைடு அடித்து விட்டு வேகமாக ஓடினார். அவர் இரண்டு ரன்கள் ஓட ஜோ ரூட்டை அழைத்தார்.
ஜோ ரூட் வேகமாக ஓடினார். அதேவேளையில் விராட் கோலி பந்தை துரத்தி பிடித்து அற்புதமான வகையில் த்ரோ செய்தார். பந்து டைரக்டாக ஸ்டம்பை தாக்கியது. இதனால் ஜோ ரூட் 80 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3 ஒருநாள் போட்டியில் ஜோ ரூட் சதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இவரது சதத்தால் இங்கிலாந்து தொடரை 2-1 என கைப்பற்றியது. இந்த சந்தோசத்தை கொண்டாடும் வகையில் பேட்டை கீழே போட்டார். இதை மைக்-டிராப் கொண்டாட்டம் (mic-drop celebration) என்பார்கள்.
இதை ஞாபகத்தில் வைத்திருந்த விராட் கோலி நேற்று ஜோ ரூட் ஆட்டமிழந்ததும் மைக்-டிராப் கொண்டாட்டத்தை சைகையின் மூலம் செய்து காட்டி ஜோ ரூட்டை வெறுப்பேற்றினார். இதன்மூலம் விராட் கோலி செய்தது சரியா? என்ற விவாதம் நடைபெற்று வருகிறது.
இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
பார்ட்னர்ஷிப் 100-ஐ தாண்டிச் சென்றது. 63-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை பேர்ஸ்டோவ் லெக்சைடு அடித்து விட்டு வேகமாக ஓடினார். அவர் இரண்டு ரன்கள் ஓட ஜோ ரூட்டை அழைத்தார்.
ஜோ ரூட் வேகமாக ஓடினார். அதேவேளையில் விராட் கோலி பந்தை துரத்தி பிடித்து அற்புதமான வகையில் த்ரோ செய்தார். பந்து டைரக்டாக ஸ்டம்பை தாக்கியது. இதனால் ஜோ ரூட் 80 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3 ஒருநாள் போட்டியில் ஜோ ரூட் சதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இவரது சதத்தால் இங்கிலாந்து தொடரை 2-1 என கைப்பற்றியது. இந்த சந்தோசத்தை கொண்டாடும் வகையில் பேட்டை கீழே போட்டார். இதை மைக்-டிராப் கொண்டாட்டம் (mic-drop celebration) என்பார்கள்.
இதை ஞாபகத்தில் வைத்திருந்த விராட் கோலி நேற்று ஜோ ரூட் ஆட்டமிழந்ததும் மைக்-டிராப் கொண்டாட்டத்தை சைகையின் மூலம் செய்து காட்டி ஜோ ரூட்டை வெறுப்பேற்றினார். இதன்மூலம் விராட் கோலி செய்தது சரியா? என்ற விவாதம் நடைபெற்று வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X