search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆசிய கோப்பை அட்டவணைக்கு கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு
    X

    இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆசிய கோப்பை அட்டவணைக்கு கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணைக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தி தெரிவித்துள்ளது. #AsiaCup2018
    புதுடெல்லி:

    6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 15-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது.

    இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளன. இப்போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. இதில் இந்தியா செப்டம்பர் 18-ந் தேதி தகுதி சுற்று அணியையும், மறுநாள் செப்டம்பர் 19-ந் தேதி பாகிஸ்தானையும் எதிர் கொள்கிறது.

    இந்தியாவுக்கு தொடர்ந்து 2 நாட்கள் விளையாட்டு போட்டி அட்டவணை உள்ளது. இதற்கு முன்னணி தொடக்க வீரர் ஷேவாக் கடும் அதிருப்தி தெரிவித்தார். அவர் கூறுகையில்,

    இந்திய அணி முதல் ஆட்டத்தில் விளையாடி விட்டு அடுத்த நாளே பாகிஸ்தானுடன் மோதும் படி அட்டவணை உள்ளது.

    ஓய்வு இல்லாமல் அடுத்தடுத்த நாட்களில் விளையாடுவது கடினம். இதனால் அட்டவணையை மாற்ற வேண்டும். இல்லை யென்றால் இந்தியா ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்க கூடாது என்று வலியுறுத்தினார்.

    இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியமும் ஆசிய கோப்பை போட்டி அட்டவணைக்கு அதிருப்தி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    ஆசிய கோப்பை போட்டி அட்டவணை முட்டாள் தனமாக இருக்கிறது. இதை பார்க்கும் போது மூளையை கூட பயன்படுத்தவில்லை என்பது போல் தெரிகிறது. பாகிஸ்தான் தனது முதல் ஆட்டத்தில் விளையாடி விட்டு 2 நாட்களுக்கு பிறகு இந்தியாவுடன் மோதுகிறது. ஆனால் இந்தியா அடுத்தடுத்து 2 நாட்கள் விளையாடுவதை எப்படி ஏற்று கொள்ள முடியும்? இந்த போட்டி அட்டவணை ஏற்று கொள்ள முடியாதபடி உள்ளது. மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    போட்டியை நடத்துபவர்களுக்கு இது பணம் கிடைக்கும் போட்டியாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு போட்டி அட்டவணையில் சமநிலை இருக்க வேண்டும் என்றார். #AsiaCup2018
    Next Story
    ×