search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை கிங்ஸ்க்கு 125 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது திருச்சி வாரியர்ஸ்
    X

    கோவை கிங்ஸ்க்கு 125 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது திருச்சி வாரியர்ஸ்

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் கோவை கிங்ஸ்க்கு 125 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது திருச்சி வாரியர்ஸ். #TNPL2018 #TWvKK
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் - கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கோவை கிங்ஸ் பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் பரத் ஷங்கர் 24 ரன்களும், பாபா இந்திரஜித் 3 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.



    அடுத்து வந்த மணி பாரதி 10 ரன்னிலும், எஸ் அரவிந்த் டக்அவுட்டிலும் பெவிலியன் திரும்பினார்கள். சுரேஷ் குமார் 33 பந்தில் 35 ரன்களும், சோனு யாதவ் 20 பந்தில் 21 ரன்களும் அடிக்க திருச்சி வாரியர்ஸ் சரியாக 20 ஓவரில் 124 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
    Next Story
    ×