search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட்: தூத்துக்குடி-கோவை இன்று மோதல்
    X

    தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட்: தூத்துக்குடி-கோவை இன்று மோதல்

    தமிழ்நாடு பிரீமியர் கிரிக்கெட் போட்டியின் 9-வது ‘லீக்’ ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்- கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. #TNPL2018 #NammaOoruNammaGethu
    நத்தம்:

    3-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.

    திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் இன்று இரவு நடக்கும் 9-வது ‘லீக்’ ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்- கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    கவுசிக் காந்தி தலைமையிலான தூத்துக்குடி தொடக்க ஆட்டத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியை 48 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று தனது 2-வது ‘லீக்’ ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

    அந்த அணியில் கவுசிக் காந்தி, தினேஷ், ஆனந்த் சுப்பிரமணியம், ஆர்.சதீஷ், சாய்கிஷோர், அபிஷேக், ஆதிசயராஜ், டேவிட்சன் போன்ற வீரர்கள் உள்ளனர்.

    இதில் கவுசிக் காந்தி முதல் ஆட்டத்தில் சதம் அடித்து அசத்தி இருந்தார். இதனால் பேட்டிங் வரிசை பலமுடன் காணப்படுகிறது. பந்துவீச்சிலும் தூத்துக்குடி திறமையுடன் இருக்கிறது. இதனால் 2-வது வெற்றியை ருசிக்கும் ஆர்வத்தில் உள்ளது.

    அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி 2 ஆட்டத்தில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்று உள்ளது. காரைக்குடி அணிக்கு எதிராக சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. திண்டுக்கல்லிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    அந்த அணியில் அபினவ் முகுந்த், ஷாருக்கான், அகில் ஸ்ரீநாத், ரோகித், அந்தோணிதாஸ், நடராஜன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    கடந்த இரண்டு சீசனில் தூத்துக்குடி அணியில் விளையாடிய அபினவ் முகுந்த் இன்று அந்த அணிக்கு எதிராக களம் இறங்குகிறார்.

    திண்டுக்கல்லுக்கு எதிரான கடந்த போட்டியில் 185 ரன் குவித்தும் கோவை தோற்றது. இதனால் அந்த அணி பந்துவீச்சில் முன்னேற்றம் காண்பது அவசியம். இப்போட்டி இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. #TNPL2018 #NammaOoruNammaGethu
    Next Story
    ×