search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 214 ரன்னில் சுருண்டது ஆஸ்திரேலியா
    X

    இங்கிலாந்து பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 214 ரன்னில் சுருண்டது ஆஸ்திரேலியா

    லண்டனில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 214 ரன்னில் சுருண்டது. #ENGvAUS
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று லண்டனில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஆரோன் பிஞ்ச், டிராவிஸ் ஹெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    ஆரோன் பிஞ்ச் 19 ரன்னிலும், டிராவிஸ் ஹெட் 5 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ஷேன் மார்ஷ் 24 ரன்களும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 22 ரன்னிலும் வெளியேறினார்கள்.



    அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் 64 பந்தில் 62 ரன்களும், சுழற்பந்து வீச்சாளர் அஷ்டோன் அகர் 62 பந்தில் 40 ரன்களும் அடித்தனர். இருவரும் தாக்குப்பிடித்து விளையாடியதால் ஆஸ்திரேலியா 47 ஓவரில் 214 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் மொயீன் அலி 3 விக்கெட்டும், அடில் ரஷித் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    பின்னர் 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங் சேய்து வருகிறது.
    Next Story
    ×