என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி எப்ஏ கோப்பையை கைப்பற்றியது செல்சி அணி
Byமாலை மலர்19 May 2018 10:55 PM GMT (Updated: 19 May 2018 10:55 PM GMT)
எப்.ஏ. கோப்பை இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய செல்சி அணி எப்.ஏ. கோப்பையை கைப்பற்றியது. #ChelseaFC #ManchesterUnited #FACup
லண்டன்:
2018-19ம் சீசன் யுயெஃபா யுரோப்பா கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவே உலகிலேயே மிகப் பழமையான கால்பந்து சங்க போட்டியாகும். இந்த தகுதிச்சுற்று போட்டிகளின் ஒரு பகுதியான எப்.ஏ. கோப்பையின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள செல்சி அணி, மான்செஸ்டர் யுனைடெட் அணியை எதிர்கொண்டது. இப்போட்டி தொடங்கிய 22-வது நிமிடத்தில் செல்சி அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை செல்சி அணி சரியாக பயன்படுத்தி கொண்டது.
பெனால்டி வாய்ப்பில் செல்சி அணி வீரர் ஈடன் ஹசார்ட் கோல் அடித்தார். அதன்பின் இறுதி நிமிட ஆட்டம் வரை இரு அணியினரும் மேற்கொண்டு எந்த கோலும் அடிக்கவில்லை. இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற செல்சி அணி கோப்பையை கைப்பற்றியது. செல்சி அணி எப்.ஏ.கோப்பையை வெல்வது இது 8-வது முறையாகும். #ChelseaFC #ManchesterUnited #FACup
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X