search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இத்தாலி ஓபன் டென்னிஸ் - இறுதிப்போட்டியில் நடால், ஸ்வேரேவ் இன்று பலப்பரீட்சை
    X

    இத்தாலி ஓபன் டென்னிஸ் - இறுதிப்போட்டியில் நடால், ஸ்வேரேவ் இன்று பலப்பரீட்சை

    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெறும் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் நடால், ஸ்வேரேவ் ஆகியோர் பலப்பரீட்சை செய்கின்றனர். #ItalyOpen #RafaelNadal #AlexanderZverev

    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டிகள் ரோம் நகரில் நடைபெற்று வருகிறது. 

    நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதியில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரபெல் நடால் (ஸ்பெயின்), முன்னாள் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச்சை (செர்பியா) எதிர்கொண்டார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ரபெல் நடால் 7-6 (7-4), 6-3 என்ற நேர் செட்டில் ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதி போட்டியில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வேரேவ், பெல்ஜியத்தின் டேவிட் கோஃபினை எதிர்த்து விளையாடினார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் கோபினை வீழ்த்திய ஸ்வேரேவ் இறுதி போட்டிக்குள் நுழைந்தார்.



    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 6-4, 6-3 என்ற நேர்செட்டில் அனெட் கோன்டாவீட்டை (எஸ்தோனியா) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் மரியா ஷரபோவா (ரஷியா), ஷிமோனா ஹாலெப் ஆகியோர் பலப்பரீட்சை செய்தனர். இதில் 4-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற ஹாலெப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். 

    இன்று இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன. #ItalyOpen #RafaelNadal #AlexanderZverev
    Next Story
    ×