search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடர்ச்சியாக நான்கு அரைசதம்- விராட் கோலி சாதனையுடன் இணைந்தார் பட்லர்
    X

    தொடர்ச்சியாக நான்கு அரைசதம்- விராட் கோலி சாதனையுடன் இணைந்தார் பட்லர்

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக 95 ரன்கள் அடித்ததன் மூலம் தொடர்ச்சியாக நான்கு அரைசதங்கள் அடித்து விராட் கோலியின் சாதனையுடன் இணைந்துள்ளார் ஜோஸ் பட்லர். #IPL2018 #RRvCSK
    இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர். அதிரடி வீரரான இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். இந்த தொடரில் அனைத்து போட்டிகளில் விளையாடினாலும் ஜோஸ் பட்லருக்கு பேட்டிங் செய்வதற்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர் தோல்வியை சந்தித்து வந்ததாலும், தொடக்க வீரர்கள் சரியாக விளையாடாததாலும் கடந்த 2-ந்தேதி நடைபெற்ற டெல்லி டேர்வில்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க பேட்ஸ்மேன் ஆக களம் இறக்கப்பட்டார்.



    இந்த போட்டியில் இருந்து ஜோஸ் பட்லருக்கு அதிர்ஷ்டம் பிறந்தது. நேற்றைய போட்டியுடன் தொடர்ச்சியாக நான்கு அரைசதங்கள் அடித்துள்ளார். டெல்லிக்கு எதிராக 67 ரன்னும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 51 ரன்னும், மீண்டும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 82 ரன்னும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக 95 ரன்களும் அடித்தார்.

    இதன்மூலம் தொடர்ச்சியாக நான்கு அரைசதங்கள் அடித்து விராட் கோலி சாதனையை சமன் செய்துள்ளார். விராட் கோலி நான்கு முறை தொடர்ச்சியாக நான்கு முறை அரைசதங்களுக்கு மேல் அடித்துள்ளார். சேவாக் தொடர்ச்சியாக ஐந்து அரைசதங்களுக்கு மேல் அடித்து முதல் இடத்தில் உள்ளார்.
    Next Story
    ×