search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெற்காசிய தடகளம்- தமிழக வீரர்கள் 9 பேர் தேர்வு
    X

    தெற்காசிய தடகளம்- தமிழக வீரர்கள் 9 பேர் தேர்வு

    தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன் ஷிப் போட்டி கொழும்பில் வருகிற 5 மற்றும் 6-ந்தேதி நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த 9 வீரர்- வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.
    சென்னை:

    3-வது தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன் ஷிப் போட்டி கொழும்பில் வருகிற 5 மற்றும் 6-ந்தேதி நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த 9 வீரர்- வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். ஆண்கள் பிரிவில் நிதின் சிதானந்த் (200 மீட்டர் ஓட்டம்), ராஜேஷ் ரமேஷ் (400 மீட்டர் தொடர் ஓட்டம்), கமல்ராஜ் (டிரிபிள் ஜம்ப்), சந்தோஷ் மணிகண்டன் (உயரம் தாண்டுதல்) ஆகியோரும், பெண்கள் பிரிவில் சுபா (200, 400 மீட்டர் ஓட்டம்), கிரேசினா மேரி (உயரம் தாண்டுதல்), புனிதா (நீளம் தாண்டுதல்), பிரியதர்ஷினி (டிரிபிள்ஜம்ப்), காருண்யா (வட்டு எறிதல்) ஆகியோரும் தேர்வாகி இருக்கிறார்கள்.
    Next Story
    ×