என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.எஸ்.எல். கால்பந்து: 5-வது வெற்றியை பதிவுசெய்தது சென்னையின் எப்.சி.
Byமாலை மலர்28 Dec 2017 4:41 PM GMT (Updated: 28 Dec 2017 4:43 PM GMT)
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் ஜேம்ஷெத்பூர் அணியை 1-0 என வீழ்த்தி சென்னையின் எப்.சி. அணி ஐந்தாவது வெற்றியை பதிவு செய்தது.
புதுடெல்லி:
10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜேம்ஷெத்பூரில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கிய 33-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி - ஜேம்ஷெத்பூர் எப்.சி. அணியை எதிர்கொண்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தின் 41-வது நிமிடம் சென்னை அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திகொண்ட ஜேஜே கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தின் முடிவில் சென்னை 1-0 என முன்னிலை பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் தொடர்ந்து கோல் போட முயற்சித்தனர். இருப்பினும் மேற்கொண்டு கோல் அடிக்காததால் 1-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி. அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் சென்னை அணி புள்ளிபட்டியலில், 16 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்து கொண்டது.
அடுத்ததாக நாளை நடைபெறும் லீக் போட்டியில் மும்பை சிட்டி எப்.சி - டெல்லி டைனமோஸ் எப்.சி. அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X