என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணிக்கு அழைக்கப்பட்டாரா?: கிரிக்கெட் வாரியம் மறுப்பு
Byமாலை மலர்29 Nov 2017 4:04 AM GMT (Updated: 29 Nov 2017 4:04 AM GMT)
இங்கிலாந்து அணியை பலப்படுத்த ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அவசரமாக அழைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் கசிந்தன.
லண்டன் :
ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்தது. இதனால் இங்கிலாந்து அணியை பலப்படுத்த ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அவசரமாக அழைக்கப்பட்டு இருப்பதாகவும், அவர் அணியுடன் இணைய உள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன. லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் விளையாட்டு உபகரண உடைமைகளுடன் அவர் நிற்பது போன்ற புகைப்படமும் வெளியானது.
இந்த நிலையில் இந்த தகவலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று திட்டவட்டமாக மறுத்து விட்டது. ஸ்டோக்ஸ், தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட தனிப்பட்ட பயணமாக நியூசிலாந்துக்கு கிளம்பியுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பென் ஸ்டோக்ஸ், இரவு விடுதியில் குடித்து விட்டு வாலிபரை தாக்கிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதால் அவரை அணியில் இருந்து கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே விடுவித்து விட்டது குறிப்பிடத்தக்கது.
ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்தது. இதனால் இங்கிலாந்து அணியை பலப்படுத்த ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அவசரமாக அழைக்கப்பட்டு இருப்பதாகவும், அவர் அணியுடன் இணைய உள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன. லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் விளையாட்டு உபகரண உடைமைகளுடன் அவர் நிற்பது போன்ற புகைப்படமும் வெளியானது.
இந்த நிலையில் இந்த தகவலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று திட்டவட்டமாக மறுத்து விட்டது. ஸ்டோக்ஸ், தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட தனிப்பட்ட பயணமாக நியூசிலாந்துக்கு கிளம்பியுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பென் ஸ்டோக்ஸ், இரவு விடுதியில் குடித்து விட்டு வாலிபரை தாக்கிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதால் அவரை அணியில் இருந்து கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே விடுவித்து விட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X