என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிலிச்சை வீழ்த்தி விம்பிள்டன் பட்டத்தை 8-வது முறையாக கைப்பற்றி பெடரர் சாதனை
Byமாலை மலர்16 July 2017 3:19 PM GMT (Updated: 16 July 2017 3:19 PM GMT)
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சிலிச்சை வீழ்த்தி பெடரர் எட்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
லண்டன்:
இங்கிலாந்தின் லண்டன் நகரில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வந்தது. இன்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் 3-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும் 7-ம் நிலை வீரரான குரோஷியாவின் சிலிச்சும் மோதினர். இது பெடரர் பங்குபெறும் 11-வது விம்பிள்டன் இறுதி போட்டியாகும்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெடரர் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். முதல் செட்டில் அடைந்த தோல்வியில் இருந்து சிலிச் மீள்வதற்குள் அதிரடியாக விளையாடிய பெடரர் அடுத்த இரண்டு செட்களையும் 6-1, 6-4 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.
இது பெடரர் வெல்லும் எட்டாவது விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். இதன்மூலம் விம்பிள்டனை 8 முறை கைப்பற்றி ஒரே வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அத்துடன் 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X