search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மலிங்காவின் உரை வீரர்களுக்கு உற்சாகத்தை அளித்தது” - சச்சின் டெண்டுல்கர் பாராட்டு
    X

    "மலிங்காவின் உரை வீரர்களுக்கு உற்சாகத்தை அளித்தது” - சச்சின் டெண்டுல்கர் பாராட்டு

    ஐ.பி.எல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியின் பந்துவீச்சாளர் மலிங்காவின் உரை வீரர்களுக்கு உற்சாகத்தை அளித்தது, வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    ஐ.பி.எல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியின் பந்துவீச்சாளர் மலிங்காவின் உரை வீரர்களுக்கு உற்சாகத்தை அளித்தது, வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

    ஐதராபாத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் மோதின. முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. 130 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடிய ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 128 ரன்களே எடுத்தது.

    இதனால் மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் வென்று ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. அத்துடன் ஐ.பி.எல். கோப்பையை மூன்றாவது முறை வென்று சாதனை படைத்துள்ளது. அந்த அணிக்கு ஐ.பி.எல். கோப்பையுடன், 15 கோடி ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.

    இந்நிலையில், வெற்றிக் களிப்பில் பேசிய சச்சின், 'ஆட்டத்தின் முதல் பாதி எங்களுக்கு சாதகமாக இல்லை. போட்டியின் இடைவெளியின் போது மலிங்கா அருமையான ஒரு உரையை வீரர்களிடம் நிகழ்த்தினார். அவர் பேசிய பிறகு ஆட்டத்தை வெற்றி பெற முடியும் என்ற நம்பினோம்' என மலிங்காவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
    Next Story
    ×