என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
"மலிங்காவின் உரை வீரர்களுக்கு உற்சாகத்தை அளித்தது” - சச்சின் டெண்டுல்கர் பாராட்டு
Byமாலை மலர்22 May 2017 8:43 PM GMT (Updated: 22 May 2017 8:43 PM GMT)
ஐ.பி.எல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியின் பந்துவீச்சாளர் மலிங்காவின் உரை வீரர்களுக்கு உற்சாகத்தை அளித்தது, வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
மும்பை:
ஐ.பி.எல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியின் பந்துவீச்சாளர் மலிங்காவின் உரை வீரர்களுக்கு உற்சாகத்தை அளித்தது, வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் மோதின. முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. 130 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடிய ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 128 ரன்களே எடுத்தது.
இதனால் மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் வென்று ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. அத்துடன் ஐ.பி.எல். கோப்பையை மூன்றாவது முறை வென்று சாதனை படைத்துள்ளது. அந்த அணிக்கு ஐ.பி.எல். கோப்பையுடன், 15 கோடி ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், வெற்றிக் களிப்பில் பேசிய சச்சின், 'ஆட்டத்தின் முதல் பாதி எங்களுக்கு சாதகமாக இல்லை. போட்டியின் இடைவெளியின் போது மலிங்கா அருமையான ஒரு உரையை வீரர்களிடம் நிகழ்த்தினார். அவர் பேசிய பிறகு ஆட்டத்தை வெற்றி பெற முடியும் என்ற நம்பினோம்' என மலிங்காவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
ஐ.பி.எல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியின் பந்துவீச்சாளர் மலிங்காவின் உரை வீரர்களுக்கு உற்சாகத்தை அளித்தது, வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் மோதின. முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. 130 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடிய ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 128 ரன்களே எடுத்தது.
இதனால் மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் வென்று ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. அத்துடன் ஐ.பி.எல். கோப்பையை மூன்றாவது முறை வென்று சாதனை படைத்துள்ளது. அந்த அணிக்கு ஐ.பி.எல். கோப்பையுடன், 15 கோடி ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், வெற்றிக் களிப்பில் பேசிய சச்சின், 'ஆட்டத்தின் முதல் பாதி எங்களுக்கு சாதகமாக இல்லை. போட்டியின் இடைவெளியின் போது மலிங்கா அருமையான ஒரு உரையை வீரர்களிடம் நிகழ்த்தினார். அவர் பேசிய பிறகு ஆட்டத்தை வெற்றி பெற முடியும் என்ற நம்பினோம்' என மலிங்காவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X