என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • சுற்றும் முற்றும் பார்த்தாள், அவள் இருக்கும் காரைத் தவிர வேறு கார்களோ ஆட்களோ இல்லை.
    • ரிலாக்ஸ் டீ ஸ்டாலில் இருந்த டிவியில் மூவரும் உன்னிப்பாய் செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

    "டேவிட், நான் திவ்யா பேசுறேன்" என்ற குரல் கேட்ட அந்த நொடியில் இருந்து சரியாய் இருபது நிமிடங்களுக்கு முன்... திவ்யா மயக்கத்தில் இருந்து கண்விழித்தாள். ஏதோ தூக்கத்தில் இருந்து எழுந்தது போல் ஒரு மாதிரியான மங்கலாகவே எல்லாம் தெரிந்தது. உஸ்ஸ் என்ற காற்றின் சத்தமும் வண்டிகள் விரைந்து செல்லும் ரோட்டின் டயர் ஒலிகள் கேட்க... மெதுவாய் காட்சிகள் புலப்பட ஆரம்பித்தது.

    அது ஒரு ரோடு, அதுவும் ஊருக்கு வெளிப்புற ரோடு. மெதுவாய் காரின் ரோடு பார்க்கும் முன் பக்க கண்ணாடி வழியாய் பார்த்தாள். எதிரே இருந்த ஒரு காபி கடையில் இருவர் காபி குடித்தபடியே தம் அடித்துக் கொண்டு இருந்தனர். சுற்றும் முற்றும் பார்த்தாள், அவள் இருக்கும் காரைத் தவிர வேறு கார்களோ ஆட்களோ இல்லை.

    "நான் எப்படி இங்க... இந்த வண்டியில லாரியில தானே ஏறினோம். ஆமா டேவிட் எங்கே என்னை விட்டுட்டு எங்கபோனாரு? இவன்க ரெண்டு பேரு யாரு? லாரில தானே ஏறினோம் ? அப்போ லாரி எங்க? அந்த டிரைவர் மனோகர் எங்க...?

    யோசிக்க யோசிக்க ஒவ்வொன்றாய் திவ்யாவுக்குப் புலப்பட ஆரம்பித்தது. வண்டி ரிப்பேர் ஆச்சு... மனோகர் வந்தான்... மெக்கானிக்கை கூப்பிட லாரில ஏறினோம்... மனோகர் ஜூஸ் கொடுத்தான்... தூங்கிட்டேன்... இல்ல மயங்கிட்டேன்... அப்போ...டேவிட்டை எங்கேயோ இறக்கிவிட்டு என்னை மட்டும் மனோகர் கடத்தி இருக்கான்.

    இடையிலே வண்டிய மாத்தி கூட்டி போறாங்க... இவன்க யாரு? எதுக்கு என்னை கடத்துறாங்க? என்று யோசித்தபடியே அந்த டீக்கடையின் போர்டை கவனித்தாள்.

    "ரிலாக்ஸ்" டீ ஸ்டால் மனதில் பதிய வைத்தாள். போர்ட்டில் உள்ள ஊர் பெயர் பக்கத்தில் உள்ள எல்லாத்தையும் டக்டக்கென்று மனதில் பதிய வைத்தாள். பதட்டமில்லாமல் யோசித்தாள்... "இப்போது நான் என்ன செய்யவேண்டும்...?" யெஸ் முதலில் டேவிட்டை தொடர்பு கொள்ள வேண்டும் எப்படி - யோசித்தபடியே காருக்குள் கண்களால் துழாவினாள்.

    டிரைவர் சீட்டிற்கு அருகே கியர் அருகில் அந்த சார்ஜரில் ஒரு செல்போன் சார்ஜ் ஆகிக்கொண்டு இருந்தது. "மயங்கி இருக்கேன் என நினைச்சு போனை தைரியமா சார்ஜ் போட்டு போயிருக்கானுங்க..."

    அவர்களை பார்த்தாள். இவள் மயக்கத்தில் தானே இருக்கிறாள் என்ற தைரியத்தில் போனை விட்டுட்டு போய் இருக்கிறார்கள். மெதுவாய் கை நீட்டி போனை எடுக்கப் போனவள் குரல் கேட்டு திடுக்கிட்டாள். சடாரென்று கையை இழுத்து மீண்டும் தலை சாய்த்து மயங்கி இருப்பது போல் பாவனை செய்ய ஆரம்பித்தாள்.

    "இன்னுமாடா டீ சாப்பிடுறீங்க... வாங்கடா டயம் ஆகுது" டிரைவர் சீட்டில் ஏறியவன் கூப்பிட... "தோ" வந்துட்டோம்பா... இருவரும் வந்து வண்டியில் ஏறி கதவு அடைக்கும் சத்தம் கேட்டது... வண்டி கிளம்பியது. அப்போது ஏறியவர்களில் ஒருத்தன் "நிறுத்து... நிறுத்து..." என கத்தவும்... வண்டியை நிறுத்தி என்னடா?' என டிரைவர் சீட்டில் இருந்தவன் எரிச்சலாய் கேட்டான்...

    அந்த டீக்கடையில இருக்குற டிவியில பாருங்க, இந்த பொண்ணோட போட்டோ போட்டு நியூஸ் போகுது... வாங்க என்னன்னு பார்ப்போம்... மூவரும் இறங்கி கதவை அடைத்து போன சில வினாடிகள் கழித்து திவ்யா கண் திறந்து பார்த்தாள்...

    அந்த ரிலாக்ஸ் டீ ஸ்டாலில் இருந்த டிவியில் மூவரும் உன்னிப்பாய் செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்தனர். டிவியில் போட்டோ காட்டப்படுவது இங்கிருந்து பார்க்கும்போது திவ்யாவுக்கும் தெரிந்தது. இதுதான் சமயம் என போன் எடுத்து டயல் செய்தாள். அந்த போனை தான் டேவிட் எடுத்தான். அப்போது தான் இவள், "டேவிட் நான் திவ்யா பேசுறேன்" என்றாள். "சொல்லு திவ்யா... எங்க இருக்க...எதுவும் ஆகலியே"

    இயக்குநர் A. ெவங்கடேஷ்

    "நான் ஆல்ரைட் டேவிட்... என்னை காணோம்னு டிவி நியூஸ் ஓடுது..."

    "ஆமா... போலீஸ் கொடுத்து இருக்காங்க...சரி சொல்லு நீ எங்கே இருக்க?"

    "டேவிட் இடம் கரெக்ட்டா தெரியல... ஆனா ரோட்டோர ஒரு டீக்கடை... பேரு ரிலாக்ஸ் டீ ஸ்டால்... இடம் குத்துப் பட்டி சந்திப்புனு போர்டுல போட்டிருக்கு... என்னை எதுக்கு கடத்துனாங்கன்னு தெரியல...."

    திவ்யா பேசிக் கொண்டு இருக்கும் போதே அவர்கள் காரை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    "டேவிட் அவங்க மறுபடி வராங்க. நான் கட் பண்றேன்..." போனை ஆன் பண்ணி டயல் செய்த நம்பரை அவசர அவசரமாய் "டெலிட்" செய்தாள்.

    போனை மறுபடியும் இருந்த இடத்திலேயே சார்ஜில் போட்டு மீண்டும் அதே பொசிசனில் மயங்கியது போல் இருந்துகொண்டாள்.

    அவர்கள் மூவரும் வண்டியில் ஏறி அமர்ந்தார்கள். "நல்லவேளை கார் தள்ளி நின்னதாலே காருக்குள்ளே இருக்கிற இவளை டீக்கடைக்காரன் பாக்கலை -

    ஒருவன் சொன்னான், டிவியில நியூஸ் போறத பார்த்தா "இவளை இப்படியே மயக்கமான நிலையில் பின்சீட்டில் உக்கார வச்சு கூட்டிப் போறது சரியில்ல..."

    'யாராச்சும் இவளை அடையாளம் கண்டுட்டா சிக்கல்தான்' - இன்னொருவன் கூறினான்.

    'ம்... என்ன பண்ணலாம்' நாம போகவேண்டிய இடம் ஜஸ்ட் ஒருமணி நேரம்தான். ஆனாலும் அந்த ஒருமணி நேரம் ரிஸ்க்தான்...மூன்றாமவன் யோசித்தான்.

    'படுபாவிங்க என்ன பண்ணபோறான்களோ' திவ்யா நினைத்து முடிக்கவும்... ஒருவன் சொன்னான் "பேசாம இவ கைய... கால... கட்டி... வாயில துணியை வெச்சு அடைச்சி டிக்கியிலே, தூக்கிப் போட்டுட்டா"

    திவ்யா உள்ளுக்குள் அதிர்ந்தாள்...

    "ஆமால்ல... ஒருமணி நேரம் தான டிக்கியிலேயே கிடக்கட்டும்" நமக்கும் இவளை யாரும் பார்க்காம இருக்கணும்னா அதான் பாதுகாப்பு..." பேசியவன் இறங்கிப் போகும் சத்தமும் அவன் டிக்கியைத் திறக்கும் சத்தமும் கண்மூடி இருந்த திவ்யாவுக்கு கேட்டது...

    அப்போது டிரைவர் பக்கத்து சீட்டில் உள்ளவன் படபடப்பாய் சொன்னது."யேய் சார்ஜில் போட்டுப் போன என் போன் பொசிஷன் மாறி இருக்கு. நான் இப்படி வெச்சுட்டு போகலியே..."

    மயக்கத்துல இருக்கவ போன எப்படி எடுப்பா? டிரைவர் சீட்டில் உள்ளவன் கேட்டான்.

    "ஒருவேளை போன்ல யாருக்கோ தகவல் சொல்லிட்டு நாம வர்றதை பார்த்ததும் மயங்கி இருக்கிற மாதிரி நடிக்கிறாளோ?''

    "அவ்வளவுதான் கண்டுபிடிச்சுட்டான்க...இனி இருந்தால் ஆபத்து" என எண்ணி காரின் கதவைத் திறந்து மின்னல் வேகத்தில் ஒடத் துவங்கினாள்..

    'ஏய் பிடி-பிடி-' மூவரும் துரத்த ஆரம்பித்தனர்...

    டீ கடைக்காரன் அவர்கள் துரத்திப் போவதை எட்டிப் பார்த்தான்...

    போலிஷ் ஸ்டேஷன்.

    "நீங்க சொன்ன ஸ்பாட்தான், உங்களுக்கு திவ்யா போன் பண்ணின செல்போன் நம்பர ஜிபிஎஸ் சிம் காட்டுது... வாங்க உடனே கிளம்பலாம்...ஏற்கெனவே அந்த லொகேஷனுக்கு பக்கத்துல இருக்கிற ஸ்டேஷனுக்கு தகவல் சொல்லி லோக்கல் போலிஷ் டீமும் போய்கிட்டு இருக்காங்க... கமான் லெட்ஸ் கோ..."

    இன்ஸ்பெக்டர் அழகர் ஜீப்பில் ஏற, பின்னாடி வேனில் டேவிட், நண்பர்கள், மொத்த குடும்பமும் ஏறியது... பெருமாள் தான் வந்த காரில் அவர்களை பின்தொடர்ந்தான். வண்டியை ஒட்டியபடியே பெருமாள் தன செல்போன்ல இருந்து யாருக்கோ டயல் செய்தான்.

    ரிலாக்ஸ் டீ ஸ்டால்...

    போலீஸ் ஜீப் நின்றது. கடையில் இருந்தவன் போலீசை பார்த்ததும் வெலவெலத்து எழுந்து நின்றான். எப்பவோ வர்ற, போற லாரி,கார், பஸ்சில் வருகிறவர்களுக்கு டீ, காபி , பிஸ்கெட், வித்து பிழைப்பை ஓட்டுற என் கடைக்கு முன்னால போலீசா - அவன் வெறித்த பார்வையில், முகம் வெளிறி... ஜீப்பில் இருந்து இறங்கிய இன்ஸ்பெக்டரை பார்த்து என்னங்க ஐயா வேணும்? என கேட்டான்...

    "யோவ், மேலூர் ஸ்டேஷன்ல இருந்து தகவல் வந்துச்சி.. ஒரு பொண்ணை மூனு பேரு கடத்திட்டு போறாங்கன்னு இங்க இருந்துதான் அந்த பொண்ணு அவ புருஷனுக்கு தகவல் கொடுத்து இருக்கா. அடையாளத்துக்கு உன் கடை பேரை தான் சொல்லி இருக்கா. அப்படி சந்தேகப்படுகிற மாதிரி யாரையாவது பாத்தியா?" இன்ஸ்பெக்டர் குரலில் விசாரணையை விட மிரட்டல் அதிகம் இருந்தது.

    "இல்லிங்கய்யா அப்படி யாரும் வரலையே" கடைக்காரன் அப்பாவியாய் சொன்னான்... உன் பேரு என்னய்யா?'

    "பழனிங்க"

    "இங்க பாரு பழனி, போலீசு கிட்ட பொய் சொன்னாலோ பார்த்ததை மறைச்சாலோ பிரச்சனை வரும்னு தெரியுமா தெரியாதா?"

    "சத்தியமா அப்படி யாரையும் பாக்கலைங்கோ..."

    "கடையிலே டிவி வெச்சிருக்க, நியூஸ் பார்க்க மாட்டியா"

    "இல்லிங்கயா எப்பவும் பாட்டுத்தாங்கய்யா ஓடும். காபி, டீ குடிக்க வர்றவங்க பாட்டுதான் போடச் சொல்லுவாங்கய்யா..."அப்பட்டமாய் அழகாய் பொய் சொன்னான் பழனி.

    "உன் கடையை தானே ஸ்பாட் பண்ணி அந்த பொண்ணு சொல்லி இருக்கு?" பழனி திகைத்தான்... அவன் பார்வையின் திருட்டுத்தனத்தை செகண்டில் புரிந்து கொண்ட இன்ஸ்பெக்டர் "பொளேர் "என்று ஒரு அறை விட, கடைக்குள் தெறித்து விழுந்தான் பழனி.

    "கான்ஸ்டபிள்ஸ், போய் அவனை தூக்குங்கய்யா..." இரண்டு கான்ஸ்டபிள்கள் கடைக்கு உள்ளே போய் வீழ்ந்து கிடந்த பழனியை தூக்கி அவன் கைகளை தோளோடு பற்றி வெளியே கொண்டுவந்தனர்.

    "ஐயா அடிக்காதீங்கய்யா... உண்மையைச் சொல்லிடுறேன். ஆமாய்யா மூனுபேரு ஒரு பெண்ணோட ஜீப்பில வந்தாங்க..." அவர்கள் வந்ததில் இருந்து திவ்யாவை துரத்திட்டு போனது வரை வரிவிடாமல் மூச்சிரைக்க சொல்லிமுடித்தான் பழனி.

    "இவ்வளவு நடந்திருக்கு அப்புறம் ஏண்டா பொய் சொன்னே?"

    "அந்த பொண்ண துரத்திட்டு போனவன்களில் கார் எடுத்துட்டு போக ஒருத்தன் மட்டும் திரும்ப வந்தான். அவன்தான்யா பத்தாயிரம் கொடுத்தான். யார் கேட்டாலும் எதையும் சொல்லக் கூடாது. சொன்னா கொன்னுடு வேன்னு மிரட்டினான். அதான்யா பயந்து .."

    "அவன்க எந்தப்பக்கமா போனாங்க?" அதோ அந்தப்பக்கமா...

    பழனி காட்டிய திசை புதர் மண்டிய இடம்... அதற்கு அந்தப்புறம் ஒரே மரமும் செடியுமாய் காடுதான் தெரிந்தது.

    "ஆமாய்யா காட்டுக்குள்ளேதான் பொண்ணு ஓடுச்சு..."

    "திரும்ப வந்து கார எடுத்தவன் காரோடவா காட்டுக்குள்ளே போனான்?" - இன்ஸ்பெக்டர் மடக்கினார்...

    "இல்லிங்க... கார எடுத்தவன் இந்த ரோட்டுல போயி அப்படிக்கா இடதுபக்கம் திருப்பிகிட்டு ரோட்ல போனான்..."

    "கார் நம்பர் கவனிச்சியா?"

    "இல்லிங்க காசு வாங்கினதாலே எதையும் குறிக்கணும்னு தோணலை"

    "உன்னை மாதிரி ஆட்களாலே தான் குற்றங்களே பெருகுது... யோவ் கான்ஸ்டபிள் இவனை ஜீப்ல ஏத்து"

    "ஐயா வேணாங்கய்யா விட்டுடுங்க அய்யா" பழனி கதற கதற போலீஸ் கான்ஸ்டபிள் அவனை ஜீப்பில் ஏற்றினார்... அப்போதுதான் வந்து நின்ற மூன்று வண்டிகளையும் கவனித்தார்...

    (தொடரும்)

    E-Mail: director.a.venkatesh@gmail.com / வாட்ஸப்: 7299535353

    • அன்பு, பாசம் போன்ற உணர்வுகளின் அடையாளம்தான் கரும்பு. அன்பும் பாசமும் ஒரு கட்டுக்குள் இருக்க வேண்டும்.
    • தனக்கு மிகவும் பசிக்கிறது என்று சொல்லி, ஒரே ஒரு கரும்பு தருமாறு வியாபாரியிடம் கேட்டார்.

    பந்த பாச உணர்வைத் தூண்டுபவன் மன்மதன். கரும்பு வில்லைப் பயன்படுத்தி அம்பு எய்து ஆண்-பெண் ஆகியோருக்கு இடையே ஈர்ப்பைத் தோற்றுவிப்பவன். காதல் தெய்வமான மன்மதன் ரதிதேவியின் கணவன்.

    இந்த உலகம் தொடர்ந்து நடைபெறுவதற்கு மன்மதனின் பணி இன்றியமையாதது. அவனால் தான் உலகில் வம்ச விருத்தி உண்டாகிறது.

    மன்மதனுடைய கரும்பு வில்லின் நாண், கயிற்றால் ஆனதல்ல. தொடர்ச்சியான வண்டுகளின் வரிசைதான் மன்மதன் வில்லின் நாணாக இருக்கிறது.

    அந்த நாணிலிருந்து ஐந்து மலர்களை அம்புகளாக்கி மனிதர்கள் மேல் சூட்சுமமாக எய்கிறான் அவன். தாமரை, அசோகம், குவளை, மாம்பூ, முல்லை ஆகிய ஐந்து மலர்கள்தான் மன்மதனின் அம்புகள்.

    கரும்பு வில்லில், வண்டு நாணை இழுத்து, மலர் அம்புகளைப் பொருத்தி அவன் எய்தால் யாராயிருந்தாலும் பந்த பாசங்களுக்கு ஆட்பட வேண்டியதுதான்.

    மன்மதனின் கரும்பு வில்லிலிருந்து புறப்படும் கணையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. மன்மதனைப் பற்றிச் சொல்லும்போது `காமன் எல்லோருக்கும் காமன்!` எனத் தமிழும் ஆங்கிலமும் கலந்து சிலேடை நயத்தோடு சொல்வார் வாரியார் சுவாமிகள்.

    ஒரே ஒருவரிடம் மட்டும் மன்மதனின் ஆற்றல் பலிக்கவில்லை. சூரபத்மனை வதம் செய்ய ஒரு பிள்ளை பிறக்க வேண்டும் என்பதால், பரமசிவன்மேல் தன் கரும்பு வில்லைக் கொண்டு மலர்க் கணைகளை மன்மதன் எய்ய வேண்டும் என வேண்டினார்கள் தேவர்கள்.

    அவர்கள் சொன்னபடியே மலர் அம்புகளைப் பரமசிவனை நோக்கி எய்தான் மன்மதன். சிவபெருமான் அதனால் தம்முடைய தவம் கலைக்கப்பட்டார்.

    யார் தன் தவத்தைக் கலைத்தது எனக் கடும் சீற்றத்துடன் நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்தார். அவ்வளவுதான். அவர்மேல் மலர்க்கணை தொடுத்த மன்மதன் எரிந்து போனான் என்கிறது சிவபுராணம்.

    பிறகு ரதிதேவி வேண்டியதன் பேரில் ரதியின் கண்ணுக்கு மட்டும் மன்மதன் தெரிவான் என்றும் மற்றவர் கண்ணுக்குத் தெரியமாட்டான் என்றும் வரம் கொடுத்தார் சிவன்.

    அதனால்தான் மன்மதன் இப்போது யார் கண்ணுக்கும் தெரியாமல் பலர்மேல் மலர் அம்பு எய்து தன் பணியை நிகழ்த்திக் கொண்டிருக்கிறான்.

    பொதுவாக தோற்றவர் கையிலுள்ள ஆயுதம், வென்றவர் கைக்கு வருவது நடைமுறை வழக்கம். அந்த வழக்கப்படியே தோற்றுப்போன மன்மதனின் கரும்பு வில் சிவனின் கைக்கு வந்துவிட்டது. அதை, தான் வாங்கித் தன் கரத்தில் வைத்துக் கொண்டாள் அன்னை காமாட்சி.

     

    அன்பு, பாசம் போன்ற உணர்வுகளின் அடையாளம்தான் கரும்பு. அன்பும் பாசமும் ஒரு கட்டுக்குள் இருக்க வேண்டும். கட்டுமீறிச் சென்றால் துன்பம்தான். அதை உணர்த்தவே அன்னை தன் கையில் கரும்பை வைத்திருக்கிறாள்.

    மன்மதனின் கரும்பு காமத்தைத் தூண்டக் கூடியது. அன்னை காமாட்சி தேவியின் கையில் உள்ள கரும்பு தன்னை வழிபடுபவர்களின் மனத்திலிருந்து காமத்தை அகற்றக் கூடியது.

    இதுதான் மன்மதன் கையில் இருந்த கரும்பிற்கும் காமாட்சி கையில் உள்ள கரும்பிற்குமான முக்கிய வேறுபாடு.

    `காமாட்சியை வழிபட்டால், தேவியின் திருக்கரத்தில் உள்ள கரும்பின் கருணையால் நாம் காம உணர்வை வெல்வோம். காம தகனம் செய்த சிவபெருமானின் மனைவி நம் உள்ளத்தில் உள்ள காமத்தைத் தகனம் செய்துவிடுவாள்.` என்கிறார் வாழ்நாளெல்லாம் காஞ்சி காமாட்சியை வழிபட்ட காஞ்சிப் பரமாச்சாரியார்.

    `கரும்பாயிரம் பிள்ளையார் கோயில்` என்றொரு கோயில் கும்பகோணத்தில் உண்டு. அங்கே உறையும் விநாயகரின் திருநாமம்தான் `கரும்பாயிரம் பிள்ளையார்` என்பது. அவருக்கு அப்படியொரு பெயர் வந்ததற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது.

    கரும்பு வியாபாரி ஒருவன் தன் வண்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரும்புகளை ஏற்றிக்கொண்டு வந்தான். அவன் விநாயகர் கோயில் எதிரே வரும்போது அவன்முன் ஒரு சிறுவனாய்த் தோன்றினார் விநாயகர்.

    யானை முகத்தை உடைய அவருக்கு யானைகள் விரும்பிச் சாப்பிடும் கரும்பைத் தானும் சாப்பிட வேண்டும் என ஆசை வந்துவிட்டது. தனக்கு மிகவும் பசிக்கிறது என்று சொல்லி, ஒரே ஒரு கரும்பு தருமாறு வியாபாரியிடம் கேட்டார்.

    அவர் யாரென்று அறியாத வணிகன், அனைத்தும் உப்புக் கரிக்கும் என்று சொல்லி அவரை ஏமாற்றிவிட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு சென்று விட்டான்.

    `சிறுவன் மேல் இரக்கமில்லையே உனக்கு? நீ சொன்னபடியே, உன் வண்டியில் உள்ள ஆயிரம் கரும்பும் உப்புக் கரிக்கட்டும்!` எனக் கூறிவிட்டு அருகிலுள்ள கோவிலில் சென்று மறைந்துவிட்டான் சிறுவன்.

    அடுத்த கணமே ஆயிரம் கரும்பும் தித்திக்காமல் உப்புக் கரிக்கத் தொடங்கியது. வாயில் போட்டால் உப்புக் கரிக்குமானால், அந்தக் கரும்பு எப்படி வியாபாரம் ஆகும்? ஒரு கரும்பைக் கூட வாங்குவார் இல்லை.

    வணிகன் தவற்றை உணர்ந்தான். சிறுவன் கேட்டபோது கரும்பு கொடுக்காதது தப்புத்தான் எனவும் தன்னை இறைவன் மன்னிக்க வேண்டும் எனவும் உள்ளம் உருகி வேண்டினான்.

    அன்றிரவு விநாயகர் அவன் கனவில் தோன்றினார். அவனை மன்னித்தார். ஏழைகளுக்கு இரங்கவேண்டும் என்று அவனுக்கு நீதி புகட்டினார்.

    அவன் வேண்டியபடி, மறுபடி ஆயிரம் கரும்பும் தித்திக்கும் என அருளினார். பின் கனவிலிருந்து மறைந்துபோனார்.

    மறுநாள் கண்விழித்து எழுந்த வணிகன் கனவை நினைத்து நினைத்து நெகிழ்ந்தான். தன் வண்டியில் உள்ள ஒரு கரும்பை எடுத்துக் கடித்துப் பார்த்தான்.

    அது சாதாரணமாய்க் கரும்பு தித்திக்கும் தித்திப்பை விடப் பல மடங்கு கூடுதலாய்த் தித்தித்தது. பிறகென்ன, கரும்புகள் விறுவிறுவென்று விற்றுப் போயின.

    ஆயிரம் கரும்பையும் விநாயர் தித்திக்கச் செய்த கதை இதுதான் என்கிறது கரும்பாயிரம் பிள்ளையார் கோயில் பற்றி வழிவழியாக வழங்கும் தலபுராணக் கதை.

     

    பட்டினத்தார் கையில் ஒரு கரும்பு உண்டு. அந்தக் கரும்பு பற்றி, கரும்பைப் போலவே இனிப்பான ஒரு கதையும் உண்டு.

    பட்டினத்தாருக்கும் முன்பாகவே அவரது சீடர் பத்திரகிரியாருக்கு திருவிடைமருதூரில் இறையருளால் முக்தி கிடைத்துவிட்டது. பத்திரகிரியார் இறைஜோதியில் கலந்ததைக் கண்ணால் கண்டார் பட்டினத்தார்.

    `என் சீடனுக்கே முக்தி கிட்டி விட்டதே ஐயனே! எனக்கு எப்போது முக்தி கிட்டும்?` என உள்ளம் உருகச் சிவபெருமானை வேண்டினார்.

    சிவபெருமான் அவர்முன் தோன்றி, அவர் கையில் ஒரு கரும்பைக் கொடுத்தார்.

    `இந்தக் கரும்பைத் தாங்கியவாறு திருத்தல யாத்திரை நிகழ்த்து. ஒவ்வொரு திருத்தலத்திலும் மேற்புற நுனியைக் கடித்துப் பார். எந்தத் திருத்தலத்தில் இந்தக் கரும்பின் மேற்புறம் இனிக்கிறதோ அங்கு உனக்கு முக்தி அருளப்படும்.` என அருளினார்.

    பட்டினத்தார் கையில் கரும்போடு திருவெண்காடு, சீர்காழி உள்ளிட்ட பல திருத்தலங்களுக்குச் சென்றார். ஒவ்வொரு திருத்தலத்திலும் தான் கையில் ஏந்தியிருந்த கரும்பின் நுனியைக் கடித்துப் பார்த்தார். அங்கெல்லாம் நுனிக்கரும்பு இனிக்கவில்லை.

    ஏக்கத்தோடு பல திருத்தலங்களுக்குச் சென்ற பட்டினத்தார், சென்னை அருகே திருவொற்றியூர் வந்தபோது கரும்பின் நுனி தித்தித்தது. அதுவே தாம் முக்தியடைய இருக்கும் திருத்தலம் என்பதைப் பட்டினத்தாரின் உள்மனம் உணர்ந்து கொண்டது.

    அங்கிருந்த சிறுவர்களுடன் விளையாடலானார் அவர். அவர்களைத் தன்னைக் கூடையால் மூடும்படி வேண்டிக் கொண்டார். அவர்கள் அவ்விதமே மூடினார்கள்.

    ஆனால் அந்தக் கூடையிலிருந்து அல்லாமல் வேறோர் இடத்தில் தோன்றினார் அவர். பல சித்திகள் பெற்ற சித்தராயிற்றே அவர்? சிறுவர்கள் திகைத்தார்கள்.

    ஓடோடிப் போய் அங்கும் அவரைக் கூடையால் மூடினார்கள். இப்படியான விளையாட்டு பலமுறை நடந்தது.

    இறுதியில் ஒரு கூடையால் மூடப்பட்ட அவர், சிவலிங்கமாக மாறிச் சிவனுடன் கலந்தார். அந்தக் கூடையைத் திறந்துபார்த்த சிறுவர்கள் திகைத்தார்கள்.

    அவர்கள் ஓடோடிப் போய்த் தங்கள் பெற்றோரிடம் இந்த அதிசயத்தைத் தெரிவிக்க, பின்னர் திருவொற்றியூரில் அந்த இடத்தில் சமாதி தோற்றுவிக்கப்பட்டது.

    கரும்பிலிருந்து எடுக்கப்படும் சாறு கருப்பஞ்சாறு எனப்படுகிறது. அதன் தித்திப்பு புகழ்பெற்றது.

    மாணிக்க வாசகரின் பாடல்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் வள்ளலார். மாணிக்க வாசகர் எழுதிய `திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்` என்று சொல்வதுண்டே?

    அப்படிப்பட்ட உள்ளத்தை உருக்கும் மாணிக்கவாசகரின் வாசகங்களைத் தான் கலந்து பாடும்போது கருப்பஞ்சாற்றில் தேனையும் பாலையும் கலந்ததுபோல் இனிமை உண்டாகிறது என மணிவாசகரைப் புகழ்ந்து பாடியுள்ளார் வள்ளலார்.

    `வான்கலந்த மாணிக்க வாசக! நின்

    வாசகத்தை

    நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ்

    சாற்றினிலே

    தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ்

    சுவைகலந்து

    ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல்

    இனிப்பதுவே!`

    பொங்கல் பண்டிகையில் கரும்பு முக்கிய இடம் வகிக்கிறது. கரும்பில்லாமல் யாரும் பொங்கலைக் கொண்டாடுவதில்லை. கரும்பின் விளைச்சலும் பொங்கலை ஒட்டியேதான் தை மாதத்தில் நிகழ்கிறது.

    `கரும்பு தின்னக் கூலி வேண்டுமா?` என்றொரு பழமொழி உண்டு. கரும்பு இனிக்கக் கூடியது. அந்த இனிப்புக்காகவே அதைத் தின்னலாம். அப்படியிருக்க அவ்விதம் தின்பதற்குக் கூலி வேறு வேண்டுமா என்ன?

    ஒரு செயலைச் செய்வதே மனத்திற்கு மகிழ்ச்சி தருகிறபோது அதைச் செய்வதற்கு எதற்குக் கூலி என்பதை விளக்க வந்த பழமொழி இது.

    நம் ஆன்மிகத்தில் கரும்புச் செய்திகள் நிறைய உண்டு. நமது ஆன்மிகமே நினைக்க நினைக்க நெஞ்சமெல்லாம் தித்திக்கும் கரும்பு தானே?

    தொடர்புக்கு,

    thiruppurkrishnan@gmail.com

    • தமிழ்நாட்டிலும் பெண் குழந்தைகளுக்கான பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
    • வீட்டில் எத்தனை குழந்தைகள் இருந்தாலும் பெண் குழந்தை இருந்தால், அதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியே தனி.

    நாளை பெண் குழந்தைகள் தினம்...

    இது இந்தியா முன்னெடுத்த பெருமைக்குரிய தினம். இது கடந்த 2008-ம் ஆண்டு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் ஜனவரி 24-ந்தேதி அறிவிக்கப்பட்டது. அன்று முதல் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    என்னதான் பாலின சமத்துவம் பேசப்பட்டு வந்தாலும் பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஒரு கட்டத்தில் அரசுக்கும் ஏற்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது 1000 ஆண்களுக்கு 918 பெண்கள் என்ற அளவில் பெண் குழந்தைகள் எண்ணிக்கை சரிவை நோக்கி சென்றதை சந்தித்த போதுதான் அரசுக்கு பொறி தட்டியது. தாயின் வயிற்றில் இருக்கும் போதே பெண் குழந்தைகள் கண்டறியப்பட்டு கருவிலேயே அழிக்கப்படுவதும், தப்பித்தவறி பிறந்து விட்டால் கூட கள்ளிப்பாலையும், நெல் மணியையும் கொடுத்து அந்த கண்மணிகளை ஈவு இரக்கமில்லாமல் அழித்து வந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    நம்ம கடலூர் மாவட்டத்தில் 1000 ஆண்களுக்கும் 854 பேர் தான் பெண்கள் என்ற கணக்குதான் இந்திய அளவில் பெண் குழந்தைகளை காக்கும் அளவுக்கு நாட்டின் கண்களை திறக்க வைத்தது. பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் என்ற திட்டத்தை நாடு முழுவதும் தொடங்கினார்கள்.

    சமூகத்தில் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள், ஏற்றத்தாழ்வுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பெண் குழந்தைகளை காப்பாற்றுதல், பாலின விகிதங்களை பராமரித்தல், குழந்தை திருமணம், அவர்களுக்கான சட்ட உரிமைகள், மருத்துவம், மரியாதை போன்றவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இதன் முக்கிய நோக்கம்.

    தமிழ்நாட்டிலும் பெண் குழந்தைகளுக்கான பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50 ஆயிரத்தையும், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25 ஆயிரத்தையும் அரசே டெபாசிட் செய்கிறது. அந்த குழந்தை திருமண வயதை எட்டும் போது ரூ.3 லட்சம் கிடைக்கும்.

    அரசு திட்டங்கள் போட்டு காப்பதைவிட மக்களின் மனமாற்றம் தான் முழு வெற்றியை தரும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து. பெண் குழந்தை என்பது பல பரிணாம வளர்ச்சியோடு வாழ்க்கையை பரிபூரணமாக்குகிறது. எனவேதான் பெண் குழந்தைகளை கொண்டாடுகிறோம். வீட்டில் எத்தனை குழந்தைகள் இருந்தாலும் பெண் குழந்தை இருந்தால், அதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியே தனி.

    அந்த வீட்டின் ஆனந்த யாழை மீட்டுபவள் அவள். "வா.. வா என் தேவதையே... பெண் பூவே வா... வா... பொய் வாழ்வின் பூரணமே..." என்று பெண் குழந்தைகளின் பிறப்பை உயர்வாக சித்தரித்து பாடுகிறார்கள்.

    பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது அவர்களின் உரிமை, சட்ட பாதுகாப்பில் அடங்கி இருக்கிறது. குழந்தை திருமணம் சட்டப்படி தவறு. அதற்கு தண்டனையும் உண்டு. அப்படி இருந்தும் தமிழ்நாட்டில் குழந்தை திருமணம் அதிகரித்து இளம் வயது கர்ப்பம் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    குழந்தை திருமணங்கள் அரங்கேற முக்கிய காரணம் இன்றைய சமூக சூழ்நிலையில் பெற்றோர்களுக்கு ஏற்படும் தேவையற்ற பயம். திருமணம் முடிந்துவிட்டால் தங்கள் கடமை முடிந்து விட்டதாக கருதுகிறார்கள். ஆனால் அது அந்த குழந்தைகளை படு பாதாளத்தில் தள்ளுவது என்பதை அவர்கள் உணர்வதில்லை. இளம் வயது கர்ப்பம் அவர்களின் உடல் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கிறது. பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

    பெண் குழந்தைகள் பிறந்ததும் பெருமைப்படும் பெற்றோர் மிக இளம் வயதிலேயே அந்த குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு காரணம் சமூக அழுத்தமும், நடைபெறும் பாலியல் அத்துமீறல்களும்தான் எனப்படுகிறது.

    இதை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பொறுப்புடனும் தன்னம்பிக்கையுடனும் வளர்ப்பதன் மூலம் களைய முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து.

    • நல்லிணக்கமும் மரியாதையும் மட்டுமே நல்ல உறவுகளை கட்டமைக்க வழிகாட்டும்.
    • தமிழகம் பல ஆயிரம் நூற்றாண்டுகள் வரலாறு கொண்டது.

    வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு வாழ்வதைக்காட்டிலும், ஒரு நல்ல குறிக்கோளுடன், ஒரு நல்ல அடையாளத்தை உருவாக்கவும் முயல்வதே நிலையான நிம்மதிக்கான வழி.

    இயற்கையோடு இயற்கையாக இணைந்து வாழ்ந்த ஆதிமனிதன், வீடு, வாசல், சொத்து, பணம், காசு என எதுவுமின்றி கவலையில்லாமல் வாழ்ந்தான். கூட்டுக் குடும்பமாக ஒன்றிணைந்து வாழ்ந்தவர்கள் சோதனைகளை நேருக்குநேர் எதிர்கொண்டவர்கள்.

    இயற்கையை பஞ்ச பூதங்களென பகுத்துவைத்து தங்கள் ஐம்புலன்களின் துணைகொண்டு அவற்றோடு இணைந்து வாழ்ந்து சாதனை புரிய கற்றுக்கொண்டவர்கள் நம் முன்னோர்கள்!

    ஆக்கப்பூர்வமான எண்ணங்கள், சுய மரியாதை என்றெல்லாம் சிந்தித்துவிட்டு நம்முடைய வாழ்க்கையின் கடினமான பொழுதுகளை கையாள்வதில் சரியான பயிற்சியின்றி கிடைத்தற்கரிய இந்த மனிதப் பிறவியை முழுமையடையச் செய்வதை கோட்டைவிட்டு விடுகிறோம்.

    வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகின்ற உணர்ச்சி, அறிவு என்னும் இந்த இரண்டிற்கும் இடையிலான போராட்டமே வாழ்க்கை. இது எல்லாக் காலத்தும் பொருந்தும்.

    சங்க காலம் தொட்டு இன்றைய நவீன காலம்வரை மனிதர்களின் மனம் ஒன்றுபோல் இருப்பதில்லை. ஒவ்வொருவரின் மன நிலையிலும் பல்வேறு வேறுபாடுகளும், மாற்றங்களும் நிரந்தரம் என்பதும் உண்மை.

    முழுமையான வாழ்க்கை என்பது கடினமான பொழுதுகளையும் கூட அரவணைத்துச் செல்வதுதான் என்பதற்கான ஆதாரங்களாக வரலாற்று சம்பவங்களும் இருக்கின்றன.

    நல்லிணக்கமும் மரியாதையும் மட்டுமே நல்ல உறவுகளை கட்டமைக்க வழிகாட்டும். இந்த நல்லிணக்கம் என்பது இனம் சார்ந்து, உறவு சார்ந்து, நாடு சார்ந்து மட்டுமே வருவதில்லை. இவை அனைத்தையும் கடந்து காதல் என்ற ஒன்று தலைகாட்ட ஆரம்பிக்கும்போது அது எத்தகையத் தடைகளையும் உடைத்துக்கொண்டு நல்லிணக்கத்தையும், தன்னைச் சார்ந்தவர்களின் நன்மைக்கும் உத்தரவாதமாகிவிடுகிறது. இயற்கையே இதற்கு முற்றிலுமாக துணையாக நிற்கின்றது.

    அத்தகைய சக்தி வாய்ந்த காதல் ஒரு நாட்டையே உருவாக்குவதோடு, இந்த உலகிற்கே ஒரு முன்னுதாரணமாகி விடுவதும் கண்கூடு. இது இன்று நேற்று அல்ல. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நடக்க ஆரம்பித்துவிட்டது என்பதற்கு இந்த புதினமே ஆதாரம்.

    வரலாறு பேசும் இந்த காதல் கதை உலகில் பலரும் ஆவலுடன் அலசி ஆராயும் ஒரு ஆவணமாகிக் கொண்டிருக்கின்றது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் கி.மு. 48-ல், ஒரு 16 வயது இளம்பெண், அகண்ட தமிழகத்திலிருந்து தம் காதலனைத் தேடி கடல் கடந்து வெகு தொலைவு, கயா எனும் கொரிய நாட்டிற்குச் சென்றாள். 157 வயது வரை வாழ்ந்து அந்த நாட்டையே பொருளாதாரத்தில் மிக உயர்வான நிலைக்கு இட்டுச் சென்றதோடு தாம் பிறந்த மண்ணிற்கும் தன்னுடைய நன்றியை அதிகமாகவேச் செலுத்தியுள்ளார் செம்பவளம் என்ற அந்தப் பெண்.

    எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் வரலாற்றை திரை போட்டு மறைக்கவோ அல்லது முற்றிலும் அழிக்கவோ முடியாது. அதற்கான ஆதாரம்தான் இன்று புற்றீசல் போல கிளம்பியிருக்கும் இந்த வரலாற்று ஆதாரங்கள். இந்த வரலாறு சார்ந்து ஏற்கனவே ஒரு சில நூல்கள் எழுதியுள்ள நிலையில் இதையே ஒரு புதினம் வடிவில் எழுதி மக்களிடம் எளிதாகக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

    ஆரம்ப கால கடல் வணிகத்திற்கு முக்கியம் வாய்ந்த, சுவையான திருப்பங்கள் நிறைந்த இந்த வரலாற்று புதினம் உறுதியாக அனைவரும் விரும்பத்தக்க வகையில் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    எல்லாம் காதலுக்காக

    கதாநாயகிகளும் கதாநாயகர்களும்

    தலைவர்களும் தலைவிகளும்!

    உன் தலை சாய்ந்திருந்ததோ

    இயற்கையின் மடியில்,

    விழித்தெழு நாட்டை ஆள்வதற்கான

    இனிமையான ஈர்ப்புச் சக்தியோடு..

    சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் காலநிலை மாற்றம், உணவுத் தேடல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட மனித குழுக்கள், போகிற போக்கில் ஆங்காங்கே தங்கி விவசாயம் மற்றும் கருவிகளை உற்பத்தி செய்து தங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டு நதிக்கரைகளில் தங்கிவிட்டன. அவர்கள் வாழ்ந்த பிரதேசத்தின் காலநிலை, உணவு உள்ளிட்ட புறக்காரணிகள் அவர்களுக்கு தனித்த அடையாளங்களை உருவாக்கியதோடு அவர்கள் உருவாக்கிய மொழியும் இணைந்த வகையில் தனித்த இனமாக உருவாகினார்கள்.

    கற்காலத்தின் முடிவில் மனித நாகரிகம் அடுத்தக் கட்டமாக உலோகக் கால நாகரிகத்தில் (Iron Age Civilization) அடியெடுத்து வைத்த ஆதி மனிதர்கள் நாகரிக மனிதர்களாக பிரகாசமடைகிறார்கள்.

    கி.மு. 10,000 ஆண்டுகளுக்கு முன் கற்களால் செய்யப்பட்ட கருவிகளைப் பயன்படுத்தியவர்கள் பின் நேரடியாக இரும்புக் காலத்திற்கு வந்தவர்கள் அகண்ட தமிழகத்தின் நாயகர்கள். ஆனால் உலகின் ஏனைய மக்கள் பொற்காலம், செம்புக்காலம் என்று கடந்தபின்னரே இரும்புக்கால நாகரிகத்தில் நுழைந்ததையும் வரலாறு விளக்குகின்றது. இதையே, கி.மு. 10,000- – கி.மு. 4,000 வரையான புதிய கற்காலம் என்றும் வகைப்படுத்தியுள்ளனர்.

    அந்த வகையில் அகண்ட தமிழகத்தின் வாழ்வியலில் இரும்பு என்ற ஒரு உலோகம் அறிமுகமாகி அவர்களின் வாழ்க்கைத் தரத்தைப் பன்மடங்கு உயர்த்திய ஒரு காலம் என்றால் அது கி.மு. 500 என்ற அளவில் இருக்கலாம் என்பதை நம் தொல்லியல் ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. சங்க இலக்கியங்களின் உறுதுணை இதற்கு வளமான சான்றாகி நிற்கின்றன.

    இரும்பைக் கண்டறிந்த ஆதி தமிழர்கள் அதனை வைத்து உலைக்களம் அமைத்து கருவிகளும், ஆயுதங்களும் செய்யும் கலையைக் கற்றனர். தொழில் வளம் பெருக ஆரம்பித்தவுடன் வெளி நாட்டவர்களின் கவனமும் பெற்றனர். அவற்றில் பண்டைய ரோம், எகிப்தியம் நாடுகள் கவர்ந்தி ழுக்கப்பட்டதன் முடிவாக இரும்பும், எக்கும் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பும் பெறுகிறார்கள். இதனால் இவர்களின் வாழ்க்கைத் தரம் பன்மடங்கு உயருகிறது. பண்டமாற்று முறையில் பல்வேறு பொருட்களையும் பெற்று தங்கள் வாழ்வாதாரத்தையும் பெருக்கிக் கொண்டனர் என்பதற்கு தொல்லியல் ஆய்வுகளில் கிடைக்கப்பெற்ற பொருட்களே சான்றாதாரங்கள்.

    இரும்பைத் தொடர்ந்து பொன், மணிக்கற்கள், வைடூரியங்கள் என இயற்கை வளங்களிலும் திளைத்திருந்திருக்கிறோம் என்பதையும் அறிய முடிகின்றது.

    ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், அகண்ட தமிழகத்தின் ஆய் நாட்டின் வணிகர்கள் சூதுபவள வணிகத்துக்கான கடல் பாதையைத் தென்கொரியாவின் கயா நாடு வரை விரிவுபடுத்தினர்.

    தமிழகம் பல ஆயிரம் நூற்றாண்டுகள் வரலாறு கொண்டது. தமிழகத்தின் பொதிகை மலைப் பகுதியின் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆயித்துறை என்ற துறைமுகம்தான் அயுத்தா என அழைக்கப்பட்டுள்ளது எனத் தமிழக ஆய்வாளர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.

    தமிழகத்தின் தென் பகுதியில் இருக்கும், மிகச் சிறப்பு வாய்ந்த மலைதான், தமிழ் வளர்த்த பொதியமலை. அகத்திய முனிவர் வாழ்ந்த, அந்தப் பொதிகை மலைக்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது. அது கடையேழு வள்ளல்களுள் ஒருவரான ஆய் அண்டிரன் ஆட்சி செய்த மலை.

     

    பவளசங்கரி, 63743 81820

    பொதுவாக ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் புகுத்தப்பட்ட இரும்பின் தொழில்நுட்பம் மனித வளர்ச்சியின் முக்கியக் காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கொரியாவின் இரும்புக் கனிமத்தைக் கொண்டு கொரியர்கள் இரும்பை உருவாக்கவும் இரும்புக் கருவிகள் செய்யவும் தேவையான திறனையும் வல்லமையையும் தமிழகத்தை சேர்ந்த ஆய்கொங்கு வணிகர்கள் கயாவில் உருவாக்கினர்.

    நேர்மையும் அறநெறி பிறழாக் கொள்கையும் கொண்ட குறுநில இளவரசனைத் தேர்வு செய்து அரசனாக்கி அவர்களின் இளவரசியை அம்மன்னனுக்கு மணமுடித்து ஒரு புதிய அரசாட்சி அமைய உதவினர்.

    ஆதிக்குடிகளாக வாழ்ந்த பல்வேறு பிரிவினரையும் ஒன்றுபடுத்தி ஒரு சிற்றரசை உருவாக்கினர். தங்களின் வாழ்வியலையும் தமிழ் புத்த சிந்தனையையும் அம்மக்களுக்கு அறிமுகப்படுத்தினர்.

    அந்த வகையில் கயா எனும் அந்நாட்டில் கிடைத்த இரும்புக் கனிமத்தை இரும்பாக்கும் செயல்முறையைக் கற்றுக் கொடுத்து ஒரு பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தினர். தமிழ் புத்தம் கயா நாட்டின் முதல் அரசியால் போற்றி வளர்க்கப்பட்டு கயா ஏற்றத் தாழ்வில்லாத ஒரு ஒப்பற்ற சமுதாயமாக உருவாகி அந்த அரசியின் ஆட்சி கொரியாவை முற்போக்குச் சிந்தனை மிக்க நாடாக மாற்றியது.

    பொற்கால ஆட்சி நடந்த கயாவின் வாழ்வியல் தென்கொரியாவில் இருந்த பல குறுநில அரசுகளுக்கும் பரவியது. சில்லாவின் படையெடுப்பு, பிற நாடுகளின் ஆதிக்கம் அழுத்தம் உலகப் போரின் தாக்கம் எனப் பல்வேறு காரணங்களால் ஏழ்மையில் சிக்கித் தவித்த அந்நாடு மீண்டும் சிலிர்த்தெழுந்து செல்வ வளம் கொழிக்கும் நாடாக மாறிய நிலையில் தங்கள் இனத்தின் முன்னேற்றத்துக்கான முதல் வித்தை விதைத்தவர் அயலகத்திலிருந்து வந்த ஒரு பெண் என்று பெருமையுடன் கொண்டாடி மகிழ்கின்றனர். ஒருகாலத்தில் பன்னாட்டுக் கடல் வணிகத்தில் தடம் பதித்துத் தங்கள் முத்திரையை பதித்துப் பிற்காலத்தில் தங்கள் அடையாளத்தைத் தொலைத்து நிற்கும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு முன்னேற்றப் பாதையில் பயணிக்க ஊக்குவிக்கும் ஒரு உந்து சக்தியாக இந்த இளவரசியின் வரலாறு விளங்கும் என்பது திண்ணம்..!

    (தொடரும்)

    • ஐ.வி.எஃப். முறைக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு வெற்றி விகிதம் தான் உண்டு.
    • 30 வயதான பெண்களுக்கு இயற்கையான கருத்தரிப்பு திறன் 15 முதல் 20 சதவீதம் இருக்கும். இதுவே 35 வயது பெண்களுக்கு 10 முதல் 12 சதவீதம் தான்.

    இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்கள் திருமணம் செய்யும் வயது அதிகரித்து வருகிறது. மேலும் குழந்தை பேறு பெறுவதையும் அவர்கள் தள்ளிப்போடுவது பொதுவாக இருக்கிறது. வயது கூடக்கூட அவர்களுக்கு கருத்தரிக்கிற வாய்ப்பு குறைகிறது. எனவே வயதாகும் பெண்கள் குழந்தை பேறு விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதுபோல ஐ.வி.எப். முறையிலும் குறிப்பிட்ட வயது வரைதான் குழந்தை பேறு பெற முடியும்.

    ஆனால் இன்றும் சில பெண்கள், டாக்டரிடம் வரும்போது, நாங்கள் இப்போது குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்பார்கள். அவர்கள் திருமணம் செய்தது 35 வயதாக இருக்கும், 38 வயதில் என்னிடம் வருவார்கள். திருமணமாகி 3 வருடம் குழந்தை பெறுவதை தள்ளிப்போட்டு வருகிறோம் என்று சொல்வார்கள்.

    அவர்களிடம் எப்போது குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று இருக்கிறீர்கள் என கேட்டால், இப்போது இல்லை டாக்டர், இன்னும் 2 வருடம் கழித்துதான் என்பார்கள். இருந்தாலும் உங்களிடம் ஒரு அபிப்பிராயம் கேட்டுவிட்டு போகலாம் என்று வந்திருக்கிறேன் என்று சொல்கிற பெண்கள் மற்றும் தம்பதியினரின் எண்ணிக்கை அதிகம்.

    குழந்தை பேறு விஷயத்தில் ஆண்களின் வயதும் முக்கியம்:-

    இதில் ஆண்களின் வயதும் ஒரு முக்கியமான விஷயம் என்பதை கவனிக்க வேண்டும். ஆண்களுக்கு வயது கூடும்போது அவர்களின் விந்தணுக்களில் உள்ள டி.என்.ஏ.யில் மாறுபாடு வரலாம். வயதாகும்போது பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் விந்தணுக்களில் டி.என்.ஏ. மாற்றங்கள் ஏற்படும். இதனால் அந்த கரு உருவாகும்போது, கருவில் சில குறைபாடுகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு.

    பொதுவாக கர்ப்பப்பையில் கரு ஒட்டி வளரும் தன்மை குறையும். கர்ப்பப்பையில் கரு ஒட்டி வளரும் தன்மை குறைவதற்கு முக்கியமான காரணம், அந்த குரோமோ சோமில் குரோமடிக்ஸ் என்பது இருக்கும். அந்த குரோமட்டிக்ஸ் மற்றும் கர்ப்பப்பையில் உள்ள டீலொமியஸ் என்கிற சில விஷயங்கள் விரிவடையும் அல்லது சுருக்கம் அடையும். மேலும் டி.என்.ஏ.யில் நிறைய மாற்றங்கள் ஏற்படும்.

     

    மேலும் அந்த கருமுட்டைகளில் ஸ்பிண்டில் செல் காம்ப்ளக்ஸ் இருக்கும். அது தான், கருமுட்டையின் கருவாக்கும் திறன், கரு உருவான பிறகு கர்ப்பப்பையில் ஒட்டி வளரும் தன்மை ஆகியவற்றுக்கு வழி வகுக்கிறது.

    ஆனால் வயதான பிறகு இவை எல்லாமே குறைவாகிறது. அதனால் தான் கரு ஒட்டி வளரும் தன்மை குறைகிறது.

    இதனால் தான் பெண்களை பொருத்தவரைக்கும் கருத்தரிப்பதற்கு வயது என்பது மிகவும் முக்கியமானதாகும். வயது கூடிய பெண்களுக்கு கருத்தரிக்கிற வாய்ப்புகள் குறைவு. இருந்தாலும் இப்போது வயதான பிறகு குழந்தை பேறு சிகிச்சைக்கு வருவது அதிகரித்து வருகிறது.

    மேம்பட்ட தாய்வழி வயது அதிகரிப்பு:-

    அட்வான்ஸ்ட் மெட்டர்னல் ஏஜ் (மேம்பட்ட தாய்வழி வயது) என்கிற சரித்திரத்தை பார்த்தால் 1990 காலகட்டங்களில் 30 வயதுக்கு மேல் 35 வயது என்று சொல்வோம். ஆனால் இப்போது உள்ள காலகட்டத்தில் 40 வயதில் குழந்தை பேறு பெறுகிறவர்கள் ஒரு சதவீதம் இருக்கிறார்கள்.

    கருத்தரித்த பெண்கள் 80 ஆயிரம் பேரை ஆய்வு செய்தபோது, 40 வயதில் கருத்தரித்தவர்கள் இந்தியாவில் ஒரு சதவீதம் இருக்கிறார்கள். 80 ஆயிரம் பேரில் ஒரு சதவீதம் என்றால் கிட்டத்தட்ட ஏராளமானோர் வயதான பிறகு அதற்கான சிகிச்சை மூலம் கருத்தரிக்கிறார்கள், குழந்தை பேறு பெறுகிறார்கள்.

     

    எனவே குழந்தை பேறு பெறுவதற்கு வயது கூடுதல் என்பது அதிகரித்து வருகிறது. இது தவிர்க்க முடியாத உண்மை.

    எனவே இன்றைய காலகட்டத்தில் அட்வான்ஸ்ட் மெட்டர்னல் வயது என்பதை 35 வயது முதல் 40 வயது வரை என்று குறிக்கிறோம். 40 முதல் 45 வயது வரை என்பது வெரி அட்வான்ஸ்ட் மெட்டர்னல் வயது ஆகும். 45 வயதில் குழந்தை பேறு பெற விரும்புவதை எக்ஸ்ட்ரீம் வான்ஸ்ட் மெட்டர்னல் வயது என்று சொல்கிறோம்.

    குழந்தை பேறு சிகிச்சையில் எழும் கேள்விகள்:-

    இதுபோன்று வயது அதிகரித்தவர்களுக்கான சிகிச்சை முறைகள் என்ன? இவர்கள் எப்படி குழந்தை பேறு பெற முடியும்? குழந்தை பேறு பெறுவதற்கு இவர்களுக்கு என்னென்ன வழிமுறைகள் இருக்கிறது? இவர்கள் என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஏராளமான கேள்விகள் எழுகிறது. இதை பெண்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

    35 வயதில் பெண்கள் மருத்துவரிடம் வருகிறார்கள். அவர்களில் சிலர், டாக்டர் நான் குழந்தை பேறு விஷயத்தை தள்ளி போட வேண்டும் என்று நினைக்கிறேன் என்பார்கள். சிலர் நான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் என்பார்கள். அட்வான்ஸ்ட் மெட்டர்னல் வயதில் வரும் பெண்களுக்கு சினைப்பை இருப்பு சோதனையை (ஓவரியன் ரிசர்வ் டெஸ்ட்) முழுமையாக செய்ய வேண்டும். அதற்கு சில பரிசோதனைகள் இருக்கிறது. அந்த பரிசோதனைகளை சரியாக செய்ய வேண்டும். அந்த பரிசோதனைகளை முறையாக செய்யும் போது அவர்களின் கருத்தரிக்கும் திறன் எந்த அளவு இருக்கிறது என்பதை நிர்ணயிக்கிறோம். அவர்களின் கருத்தரிக்கும் திறன் குறைவாகும் போது என்னென்ன வழிமுறைகளை செய்யலாம் என்பதை தெளிவாக திட்டமிட வேண்டும்.

    எனவே ஒரு தம்பதியாக சிகிச்சை பெற வரும் போது, கண்டிப்பாக கணவன், மனைவி இருவருக்கும் இந்த விஷயங்களை பற்றி தெளிவான விளக்கம் தேவைப்படும். ஏனென்றால் நிறைய பேர் ஐ.வி.எப். செய்தால் குழந்தைபேறு கிடைத்து விடும் என்று நினைக்கிறார்கள்.

    ஐ.வி.எப். முறையில் குழந்தை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம், ஐ.வி.எப். என்பது முழுமையான தீர்வு அல்ல. ஐ.வி.எப். முறைக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு வெற்றி விகிதம் தான் உண்டு. ஏனென்றால் முட்டை இருந்தால் தானே கருவை உருவாக்க முடியும்.

    முட்டை குறைவானால் எப்படி கருவை உருவாக்க முடியும்? இந்த மாதிரியான விஷயங்களை அவர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

    ஏனென்றால் பல நேரங்களில் இவர்கள் இதை சரியாக புரிந்து கொள்ளாததால், டாக்டர் இதுபற்றி எனக்கு யாருமே சொல்லவில்லையே, இது தெரிந்திருந்தால் நான் இதற்கு முன்பே சிகிச்சைக்கு வந்திருப்பேனே என்று சொல்கின்ற பெண்களின் எண்ணிக்கை இன்றும் அதிகம். எனவே அவர்களுக்குரிய நடைமுறை உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

    இதனால் தான் வயது அதிகரித்த நிலையில் குழந்தை பேறு சிகிச்சைக்காக வரும் பெண்களுக்கு விளக்கமாக சொல்கிறோம். அவர்களுக்கு கருத்தரிக்கிற வாய்ப்பு குறைவு, அவர்களின் கருவாக்கும் திறன் குறைவு, உருவாகும் கருவில் குறைபாடுகள் வரலாம், கர்ப்பகாலத்தில் வரும் பிரச்சனைகளும் வயது கூடும்போது அதிகமாகிறது.

    குறிப்பாக சர்க்கரை வியாதி, உப்பு சத்து, ரத்த அழுத்தம், இருதய பிரச்சனை, சிறுநீரக பிரச்சனை ஆகியவை அதிகரிக்கிறது. இதனால் குறை பிரசவம், நஞ்சு செயல்பாடுகளில் குறைவு, நஞ்சில் வருகிற பிரச்சனைகள் ஆகியவை எல்லாம் வயதாகும்போது அதிகமாகிறது.

     

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    வயது வாரியாக பெண்களின் இயற்கையான கருத்தரிப்பு திறன்:-

    30 வயதான பெண்களுக்கு இயற்கையான கருத்தரிப்பு திறன் 15 முதல் 20 சதவீதம் இருக்கும். இதுவே 35 வயது பெண்களுக்கு 10 முதல் 12 சதவீதம் தான்.

    38 வயதாகும் போது 10 சதவீதத்துக்குள் குறைந்து விடும். 40 வயது பெண்களுக்கு இயற்கையான கருத்தரிப்பு திறன் 5 சதவீதம் மட்டுமே. மேலும் அவர்களுக்கு சிசேரியன் போன்ற பிரசவகால பிரச்சனைகளும் அதிகமாகிறது.

    வயது அதிகரித்த பெண்கள் எந்த நிலையில் குழந்தை பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள், எவ்வளவு நாள் தள்ளிப்போடுகிறார்கள், அவர்களின் ஆரோக்கியம் என்ன நிலையில் இருக்கிறது என்பதை பொருத்து என்னென்ன சிகிச்சை முறைகளை அவர்கள் கடைபிடிக்கலாம் என்று தெளிவாக விளக்கங்கள் சொல்லும்போது, அதை திறந்த மனதுடன் அவர்கள் ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும்.

    ஏனென்றால் பல நேரங்களில் 45 வயதில் கருமுட்டையே இல்லாமல் வருவார்கள், எனது முட்டையில் கருத்தரிக்க வையுங்கள் என்று சொல்வார்கள். ஏன் இவ்வளவு நாள் வரவில்லை என்று கேட்டால் ஐ.வி.எப். செய்து கொள்ளலாம் என்று நினைத்தேன், 45 வயதில் குழந்தை பிறக்கும் என்று சொன்னார்கள் என்பார்கள்.

     

    ஆனால் அவர்கள் சிகிச்சைக்கு வரும்போது அவர்களிடம் முட்டையே இருக்காது. எனவே முட்டையை தானமாக பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்வோம். அப்போது தானம் பெறுவதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அவர்களுக்கு இல்லையென்றால் எப்படி 45 வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்? இந்த மாதிரியான நடைமுறை உண்மையை புரிந்துகொள்ள வேண்டும்.

    இந்த வகையில் அட்வான்ஸ்ட் மெட்டர்னல் வயதில் பெண்களின் கருத்தரிக்கும் திறனை பொருத்து, எவ்வளவு சாத்தியக்கூறுகள் உள்ளது? வெற்றி விகிதம் எவ்வளவு? என்ன சிகிச்சை சிறந்தது? இதில் எவ்வளவு குறைபாடுகள் வரும்? கர்ப்பகால பிரச்சனைகள் என்ன என்பதை புரிய வைத்து கவுன்சிலிங் செய்வது மிக முக்கியமான ஒன்றாகும். எனவே அட்வான்ஸ்ட் மெட்டர்னல் வயது என்பது கருத்தரிப்புக்கு சிக்கலான விஷயம். இதனை மருத்துவராக எப்படி அணுகுகிறோம் என்கிற விளக்கங்களையும், இந்த மாதிரியான தம்பதியர் வரும்போது என்னென்னவெல்லாம் செய்யலாம் என்பதையும் அடுத்த வாரம் பார்க்கலாம்.

    • அனுஷம் என்றால் சமஸ்கிருதத்தில் வெற்றி என்று பொருள்.
    • தாமரை போல் எப்பொழுதும் அன்று மலர்ந்த மலராக அழகிய தோற்றப் பொழிவுடன் இருப்பார்கள்.

    27 நட்சத்திரங்களில் 17-வது நட்சத்திரம் அனுஷம். இந்த நட்சத்திரம் செவ்வாய் பகவானின் மற்றொரு வீடான விருச்சிக ராசியில் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான். அனுஷம் என்றால் சமஸ்கிருதத்தில் வெற்றி என்று பொருள். இதற்கு அனுராதா என்ற பெயரும் உண்டு. இந்த நட்சத்திரம் வானில் பனை மரம், குடை அல்லது தாமரை போல் தெரியும். இதன் தமிழ் பெயர் பனை .இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை லஷ்மி இதன் வசிப்பிடம் அழிந்த காடுகள்.

    அனுஷம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

    தாமரை போல் எப்பொழுதும் அன்று மலர்ந்த மலராக அழகிய தோற்றப் பொழிவுடன் இருப்பார்கள். அமைதியானவர்கள். சிந்தித்து செயல் ஆற்றுவதில் வல்லவர்கள். ஆன்ம பலம் ஆளுமைத் தன்மை, நிர்வாகத்திறன், சுய கெளரவம், கம்பீரத் தோற்றம் நிறைந்தவர்கள். புகழ், முன்னேற்றம், அந்தஸ்து அனைத்தும் தேடி வரும். பேச்சும், பழக்கமும், கம்பீரமான உடலமைப்பும் மற்றவர்களை எளிதில் கவரும் வகையில் இருக்கும். எதிர்காலத்தில் வரக்கூடிய நன்மை தீமைகளை முன்பே அறியும் உள்ளுணர்வு கொண்டவர்கள். தெய்வ பக்தி நிறைந்தவர்கள். பிறருக்கு உதவும் குணம் நிரம்பியவர்கள். அனைவராலும் விரும்பப்படுபவர்கள். பொருளாதாரம், குடும்ப வாழ்க்கையில் தன்னிறைவு உண்டு. அரசருக்கு உரிய அந்தஸ்துடன் வாழ்வார்கள். ராஜபோக வாழ்க்கை வாழ்நாள் முழுவதும் உண்டு. சொந்த வாழ்க்கையை விட பொது வாழ்க்கையில் அதிக ஆர்வம் இருக்கும். கதை, கவிதை கட்டுரை எழுதுவதில் அதிக ஈடுபாடு இருக்கும். அரசியல் ஆதாயம் உண்டு.

    தந்தையின் ஆதரவு உண்டு. ஏதாவது ஒரு துறையில் நிச்சயம் முன்னேற்றம் உண்டு. சில காலம். குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ நேரும். புதிய நாகரிக முறைகளை குற்றம் கூறுவார்கள். பழைய நாணயங்கள், கலைப்பொருள்கள் ஆகியவற்றைச் சேகரிக்க விரும்புவார்கள். அதனால் பழமைவாதிகள் என்ற பட்டமும் உண்டு. பேச்சு, குணம், மன வலிமை, கல்வியில் சிறந்து விளங்குதல் என சிறப்பாக வாழ்வார்கள். இக்கட்டான சூழ்நிலையிலும் நேர்வழியிலிருந்து தடம் மாறாமல் இருப்பார்கள்.

    கல்வி

    பிறக்கும் போது சனி தசா என்பதால் ஆரம்ப கல்வி சற்று மந்த தன்மையுடன் இருக்கும். பள்ளியில் சரியாக படிக்காத பலர் கல்லூரி வாழ்க்கை புதன் தசாவில் சாதனை மாணவர்களாக மாறுவார்கள். கெமிக்கல், பயோ கெமிஸ்ட்ரி, பரிசோதனை செய்யும் லேப் பற்றிய படிப்பு, இயந்திரங்கள் தொடர்பான படிப்புகள், ரேடி யாலஜி, ஸ்கேனிங் தொடர்பான படிப்புகள், தகவல் தொழில் நுட்பம், அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர், பல் மருத்துவர், காவல்துறை , ஆயுதப் பயிற்சி, விளையாட்டுத் துறை, ராணுவம். என்ஜினியரிங், புவியியல், வண்டி வாகனம் சார்ந்த படிப்புகள். விவசாயம், சீருடை பணிகள் சார்ந்த கல்விகள் அடங்கும்.

    தொழில்

    திர புத்தியும் புத்திசாலித்தனமும் அதிகமாக இருப்பதால் பெரிய அளவில் வியாபாரம் செய்வார்கள் அல்லது பெரிய நிறுவனங்களை நிறுவி அதில் பலரை வேலைக்கு அமர்த்துவார்கள். ஆடிட்டர், கணக்காளர் போன்ற துறைகளில் சாதிப்பவர்கள். வங்கி அதிகாரி, பதிப்பகம், எழுத்துத்துறை, கணித மேதை, ஆராய்ச்சியாளர், விஞ்ஞானிகள், புதுவித மருந்துகளை கண்டுபிடித்தல், தூதரகப் பணி, தகவல் தொழில் நுட்பம், சங்கேத வார்த்தை நிபுணர், பண்டைய மொழி ஆராய்ச்சி, அரசியல், அரசு சார்ந்த தொழில் உத்தி யோகங்கள் அமையும்.

    தர்ம ஸ்தாபனங்கள், கோவில் நிர்வாகம், ஊர்த் தலைமை போன்றவற்றில் கெளரவப் பதவி உண்டு. மேலும் ஹிப்னாடிசம், மந்திரம் தந்திரம் செய்தல், ஜோதிடம், உளவு பார்த்தல், புகைப்படக்கலை, சினிமா, இசை மற்றும் கலை தொடர்பான தொழில், கவுன்சிலிங், சைக்காலஜி, அறிவியல், எண்கணிதம், கணிதவியல், நிர்வாகம் தொடர்பான பணிகள், தொழிற்சாலை நடத்துதல், சுற்றுலா துறை தொடர்பான பணிகள் சிறப்பாக இருக்கும்.

    தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும். குடும்ப உறவுகளின் ஆதரவு உண்டு. தொட்டது துலங்கும். தாராள தன வரவு இருந்து கொண்டே இருக்கும். திரண்ட சொத்து உண்டு. பேச்சுத் திறமையால் அனைவரையும் கவர்வதில் வல்லவர்கள். பூர்வீகத்தில் வாழும் வாய்ப்பு குறைவு. பூர்வீக சொத்துக்கள் இருந்தாலும் தனது சொந்த உழைப்பினாலும், முயற்சியாலும் வீடு, வாகனம் ஆகியவற்றை வாங்குவார்கள். பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். பல சமயங்களில் பிறருக்காகவே உழைப்பார்கள். வாழ்க்கைத் துணையுடன் நல்ல புரிந்துணர்வு உண்டு. அன்பு, பாசம் நிறைந்த குடும்பத்தை உருவாக்குவார்கள். இளமைக் காலத்தில் சிறு துன்பங்களை சந்திக்க வேண்டிய நிலைமையில் இந்தாலும், 20 வயதில் இருந்து செல்வமும் செல்வாக்கும் வந்து சேரும்.

    தசா பலன்கள்

    சனி தசா: இது ஜென்ம தாரையின் தசாவாகும். இதன் தசா வருடம் 19.

    பிறந்த கால தசா இருப்பிற்கு ஏற்ப சனி தசாவின் கால அளவு மாறுபடும்.

    தந்தைக்கு தொழில் மந்தம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, மனக்கஷ்டம் ஏற்படும். சிறு வயதில் குழந்தை பருவத்தில் வெப்ப நோய், ஜீரணக் கோளாறு, பார்வை குறைபாடு, தண்ணீர் கண்டம், வீசிங் தொந்தரவு இருக்கும். மஞ்சள் காமாலை, எலும்பில்லாத உறுப்புகளில் அடிக்கடி தொந்தரவு இருக்கும்.

    ஐ.ஆனந்தி

    புதன் தசா: இது சம்பத்து தாரையின் தசாவாகும். இதன் தசா ஆண்டுகள் 17 வருடம். திருமணம், குழந்தை என சுப விசேஷங்கள் தொடரும். வாழ்க்கை வசந்த காலமாக இருக்கும். அரசாங்க ஆதரவு, சுகபோக வாழ்க்கையுண்டு. அதன் மூலம் பெரும் புகழும் செல்வமும் அடைவார்கள். உடல் ஆரோக்கியத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

    பூர்வீகச் சொத்துகளுடன் சுயமாகவும் சொத்து சேர்ப்பார்கள். கற்ற கல்வி பயன் தரும்.

    கேது தசா: இது மூன்றாவதாக வரக்கூடிய விபத்து தாரையின் தசாவாகும். இதன் தசா ஆண்டு 7 வருடம். சாண் ஏறினால் முழம் சறுக்கும். முயற்சிக்கு தகுந்த முன்னேற்றம் இருக்காது. பலருடைய விரோதமும் எதிர்ப்பும் இருக்கும். திடீர் ஏற்றம் அல்லது எதிர்பாராத இறக்கம் அமையும். தன் சக்திக்கு மீறிய காரியத்தில் ஈடுபட்டு மன வேதனை அடைவார்கள், இவர்களின் உழைப்பு பிறருக்கே பயன்படும்.

    சுக்ர தசா: இது நான்காவதாக வரக்கூடிய சாதக தாரையின் தசாவாகும். பிறப்பு கால சனி தசா குறைந்த வருடமாக இருக்க பிறந்தவர்களுக்கு இது பொற்காலமாக இருக்கும். வாழ்வில் அடைய வேண்டிய அனைத்து இன்பங்களையும் அடைவார்கள். பலர் சுய திறமையால் வாழ்க்கையில் முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பார்கள். கடன்களால், எதிரிகளால் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். திரண்ட சொத்து, பணம், நகை என பெரிய சாம்ராஜியத்தை உருவாக்குவார்கள்.

    சுய ஜாதக ரீதியாக திருமண தடை உள்ளவர்களுக்கு இந்த காலத்தில் திருமணம் நடக்கும். சிலருக்கு மறுவிவாகம் நடக்கும். நவீன வசதிகளுடன்கூடிய வீடு. புதுப் புது வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்.

    சூரிய தசா: இது ஐந்தாவதாக வரக் கூடிய பிரத்யக் தாரையின் தசாவாகும். இதன் தசா வருடம் ஆறு ஆண்டுகள். அனுபவ அறிவு அதிகம் இருக்கும். சற்று முன்கோபம் வரும்.

    சிறு சிறு வாக்கு வாதங்கள் செய்து கொண்டே இருப்பார்கள்.

    கொள்கையில் பிடிவாதம் அதிகரிக்கும். சில நேரங்களில் கோபத்தில் கடுமையாகப் பேசிவிட்டு, பிறகு அதற்காக வருந்துவார்கள்.

    சமூக சேவை செய்வதில் ஆர்வம் கூடும். வயோதிகம் காரணமாக சிறு சிறு உடல் நல பாதிப்புகள் இருக்கும்.

    சந்திர தசா: இது ஆறாவதாக வரக் கூடிய சாதக தாரையின் தசாவாகும்.

    எப்போதும் சுறுசுறுப்பாக எதையாவது செய்தபடியே இருப்பார்கள். எதிலும் பிடிவாத குணம் அதிகமாகும். காலம் தாழ்த்திய சாதக தாரையின் தசா என்பதால் நல்ல வாழ்வாதாரம் இருந்தால் கூட பெரியதாக எதையும் அனுபவிக்க முடியாது. பேரன், பேத்தி பிள்ளைகளின் சுப விசேஷம் என வாழ்க்கை சுமூகமாக இருக்கும். ஆனால் மனதில் இனம் புரியாத சோகம் மற்றும் வெறுமையுடன் வாழ்வார்கள்.

    அனுஷம் நட்சத்திரத்தின் சிறப்புகள்

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் தான் நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள்.பல்வேறு சிறப்பு அம்சங்கள் இவரின் ஜாதகத்தில் நிறைந்துள்ளதால் இவர் உலகப் புகழ் பெற்றுள்ளார். உலகெங்கும் அவரது புகழ் பரவி அந்தஸ்து கவுரவம் உயர்ந்து கொண்டே செல்கிறது.

    அதனால் தான் சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர் வெற்றி மழையில் நனைந்து வருகிறார்.

    இவரது ஜென்ம நட்சத்திரமான அனுஷத்தின் தாரை வடிவமான தாமரை சின்னமும் வெற்றிக்கு உதவி செய்கிறது.

    கால புருஷ லக்னமான மேஷத்திற்கு விருச்சகம் எட்டாவது வீடாகும். எட்டாம் இடம் ஆயுள் ஸ்தானம். பெண்ணிற்கு

    மாங்கல்ய ஸ்தானம் எனப்படும். உடலில் கழிவு உறுப்புகளைக் குறிக்கும் இடம். இந்த நட்சத்திரத்தில் விவாகம், ருது சாந்தி, சாந்தி முகூர்த்தம்,கர்ப்பதானம் செய்யலாம். முதன் முதலில் அரைஞான் கட்டலாம்..

    கிரகப்பிரவேசம் செய்வதற்கு கிரக ஆரம்பம் செய்வதற்கு உகந்த நாளாகும்.

    இந்த நட்சத்திரம் நாளில் திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பரை வழிபட்டால் பூர்வ ஜென்ம பாவங்கள் விலகும். ஆயுள் விருத்தியாகும். ஆரோக்கியம் சீராகும். எதிரிகள் தொல்லை குறையும். அபிச்சார தோஷங்கள் விலகும் ஆயுதம் பயில ஆயுதப் பிரயோகம் செய்யவும் உகந்த நாளாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை அடைய விரும்புபவர்கள் இந்த நட்சத்திரம் வரும் நாளில் பைரவரை வழிபட்டு புதிய முயற்சிகளைத் துவங்கலாம்.

    நட்சத்திர பட்சி: வானம்பாடி

    யோகம்: சித்தி

    நவரத்தினம் : நீலம்

    உடல் உறுப்பு:வயிறு

    திசை: மேற்கு

    பஞ்சபூதம்: நெருப்பு

    அதிதேவதை: லட்சுமி

    நட்சத்திர மிருகம்: பெண் மான்

    நட்சத்திர வடிவம்: குடை, தாமரை

    சம்பத்து தாரை : கேட்டை, ரேவதி, ஆயில்யம்

    சேம தாரை : பூராடம், பரணி, பூரம்

    சாதக தாரை: திருவோணம், ரோகிணி, அஸ்தம்

    பரம மிக்ர தாரை: விசாகம், பூரட்டாதி, புனர்பூசம்

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் தாமரை மலரில் அமர்ந்த நிலையில் உள்ள மகாலட்சுமியை வழிபட செல்வச் செழிப்பு மிகுதியாகும்.

    நம்முடன் வாழ்ந்து மறைந்த மகான் ஸ்ரீ காஞ்சி மகானை அனுசம் நட்சத்திரத்தில் வழிபட்டால் பிறவிப் பயன் நீங்கி சுபிட்சம் உண்டாகும். ஜாதகத்தில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும் சாதக தாரையான 6-வது நட்சத்திர நாளில் குடை தானம் வழங்குவது மேன்மையான பலன் தரும்.

    செல்: 98652 20406

    • கருவறைக்குள் இருக்கும் முருகப் பெருமானை சுட்டிக்காட்டி, “இவர்தான் தமிழ்க் கடவுள் முருகர்” என்றனர்.
    • யோகம் என்பது தியானம் அல்லது தவம் செய்து இறைவனை வழிபட்டு பலன் பெறுவதாகும்.

    திருச்செந்தூர் முருகப்பெருமான் தலம் ஆதிகாலத்தில் சந்தன மலையும், சந்தன மரங்களும் நிரம்ப பெற்றதாக இருந்தது. அந்த காலக்கட்டத்தில் அருகில் உள்ள கொற்கை, காயல் நகரங்கள் மிகச்சிறந்த துறைமுக நகரங்களாக திகழ்ந்தன.

    சங்க காலத்தில் கிரேக்கம் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து வியாபாரம் செய்வதற்காக வெளிநாட்டவர்கள் இந்த துறைமுகங்களுக்கு வருவது உண்டு. அவர்கள் தமிழகத்தில் அபரிமிதமாக கிடைத்த மிளகு, கிராம்பு, சந்தனம் ஆகியவற்றை விரும்பி வாங்கி சென்றனர்.

    அதோடு தமிழக கடலோர பகுதிகளில் கிடைத்த முத்துக்கள், சங்குகள் ஆகிய வற்றையும் அதிகளவில் தங்கள் நாட்டுக்கு வாங்கிச் சென்றனர். அப்படி வரும் வெளி நாட்டவர்களை நமது நாட்டில் "மிலேச்சர்கள்" என்று சொல்வது உண்டு. இந்த மிலேச்சர்கள் சங்க காலத்தில் தென் தமிழக மக்களோடு மிகவும் நெருங்கி பழகினார்கள்.

    சில மிலேச்சர்கள் தமிழக மன்னர்களுடன் மிகவும் நட்புடன் இருப்பது உண்டு. அந்த மிலேச்சர்களை தமிழக மன்னர்களில் சிலர் தங்களது மெய்காவலர்களாக நியமித்ததாகவும் வரலாற்று குறிப்புகள் உள்ளன. இத்தகைய சிறப்புடைய மிலேச்சர்களில் சிலர் தமிழ்நாட்டில் வரைமுறை மீறி நடந்தது உண்டு.

    அத்தகைய ஒரு மிலேச்சன் மூலம் ஒரு தடவை திருச்செந்தூர் முருகன் அற்புதமான ஒரு திருவிளையாடலை நடத்தி காண்பித்தார். அந்த திருவிளையாடல் மூலம் திருச்செந்தூர் தலம் மோட்சத்தை தரக்கூடிய சாயுச்சிய பதவி தரும் தலம் என்ற சிறப்பை பெற்றது. இந்த உண்மை நிகழ்வு பல்வேறு இடங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கிய அந்த மிலேச்சன் ஒரு தடவை திருச்செந்தூர் ஆலயத்துக்கு வந்தான். அந்த கால கட்டத்தில் சந்தன மலை அடிவாரத்தில் திருச்செந்தூர் முருகன் ஆலயம் அமைந்து இருந்தது. திருச்செந்தூர் ஆலயத்தில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை பார்த்ததும் அவனுக்குள் அவற்றை சூறையாடி தனது நாட்டுக்கு எடுத்துச் சென்று விட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

    வியாபாரியாக வந்து கொள்ளையனாக மாறிய அவன் திருச்செந்தூர் ஆலயத்தின் முன்னே நின்று நோட்டமிட்டான். அங்கு வந்த பக்தர்கள் சிலரிடம் உள்ளே என்னென்ன இருக்கிறது? என்று கேட்டான். அப்போது பக்தர்கள் அவனை ஆலயத்துக்குள் அழைத்துச் சென்றனர்.

    கருவறைக்குள் இருக்கும் முருகப் பெருமானை சுட்டிக்காட்டி, "இவர்தான் தமிழ்க் கடவுள் முருகர்" என்றனர். அதற்கு அந்த மிலேச்சன் முருகர் பற்றிய கூடுதல் தகவல்கள் கேட்டான். உடனே பக்தர்கள், "சுயஜோதி வடிவமாக இருக்கும் பரமசிவன் தனது நெற்றில் கண்ணில் இருந்து உருவாக்கியவர்தான் இந்த முருகர். மக்களை தொல்லை செய்த சூரபத்மனையும், அவனது ஆட்களையும் சம்ஹாரம் செய்வதற்காக இந்த முருகனின் அவதாரம் நிகழ்ந்தது. அவருக்கு தேவசேனாதிபதி என்பது உள்பட பல பெயர்கள் இருக்கிறது" என்று பெருமையோடு சொன்னார்கள்.

    இதை கேட்ட மிலேச்சனுக்கு முருகப்பெருமானின் உடலில் கிடந்த அணிகலன்கள்தான் கண்களை கவர்ந்தன. இந்த முருகனிடம் கேட்டால் என்னவெல்லாம் தருவார் என்று அந்த மிலேச்சன் சற்று ஆணவத்துடனும், அலட்சியத்துடனும் கேட்டான்.

    அதற்கு பக்தர்கள், "திருச்செந்தூர் முருகனை மனமுருக வணங்கினால் நினைப்பது நடக்கும். வாழ்வில் துன்பத்தை நீக்கி இன்பத்தை தருவார். இந்த பிறவியில் சகல செல்வங்களையும் தந்து ஆட்கொள்வார்" என்றனர்.

    இதைக் கேட்டதும் மிலேச்சனுக்கு பக்தி வரவில்லை. அழகு முருகனின் சிலையை ஆபரணங்களுடன் கடத்திச் செல்ல வேண்டும் என்றே நினைத்தான். அதற்காக அவன் நாடகம் ஆடினான். இந்த முருகர் என்னை எப்படி தடுக்கிறார் பார்ப்போம் என்று வாளை ஓங்கியபடி கருவறைக்குள் ஓடினான்.

    முருகர் சிலையை வெட்டி சிதைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்ற அவன் வந்த வேகத்தில் கால் தடுமாறி கீழே விழுந்தான். முருகனின் கமலபாதத்தில் அவனது தலை வேகமாக மோதியது. அடுத்த வினாடி அவனது உயிர் பிரிந்தது. அவனது உடல் முருகப்பெருமானை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவது போல கிடந்தது. அவனது உயிர் பறிக்கப்பட வேண்டும் என்பது அன்றைய விதியாகும். இதற்காகவே எமதர்மராஜாவும் தனது பாசக்கயிற்றுடன் தயாராக வந்தார். அந்த மிலேச்சனை பாசக்கயிற்றில் கட்டி அழைத்துச் செல்ல முயற்சி செய்தார்.

    அப்போது முருகப்பெருமான் அதிரடியாக எமதர்மராஜனை தடுத்து நிறுத்தினார். இதைக் கண்டதும் எமதர்மராஜா அதிர்ச்சி அடைந்தார். முருகப்பெருமான் சின்முத்திரையாக ஜொலிப்பதை கண்டு பரவசம் ஆனார். கையெடுத்து கும்பிட்டு முருகனை வணங்கினார்.

    "எனது அகஇருளை போக்கும் சுடர்மணியே" என்று முருகனை எமதர்மன் போற்றி பாடினான். முருகன் அதை கேட்டு மகிழ்ச்சி அடைந்தார். அதன் பிறகே எமதர்மராஜாவுக்கு நிம்மதி வந்தது. அவர் முருகப்பெருமானிடம், "இவனது உயிரை கவர்ந்து செல்லவே இங்கு தயாராக வந்து இருக்கிறேன்" என்றார்.

    அதற்கு முருகப்பெருமான், "இந்த உலகில் சொல்ல முடியாத அளவுக்கு பாவங்கள் செய்தவர்களும் இந்த தலத்துக்கு வந்து விட்டால் அவர்களது பாவம் விலகி விடும். அதுவும் எனது காலடி நிழலில் சரண் அடைந்து விட்டால் அவர்களுக்கு சாயுச்சிய பதவி எனும் மோட்சம் வழங்கப்படும். அதன்படி இந்த மிலேச்சன் மோட்சம் பெற்று விட்டான்" என்றார்.

    இதை கேட்டதும் எமதர்மன் நிலை தடுமாறினான். அடுத்து என்ன செய்வது புரியாமல் நின்று கொண்டு இருந்தான். அவனிடம் முருகப்பெருமான் மீண்டும், "இவன் எனது காலடியில் விழுந்ததால் சகல பாவங்களும் நீங்கி மோட்சத்துக்கு சென்று விட்டான். இந்த தலமானது தேவர் உள்பட அனைவரும் வணங்கி பலன் பெறக்கூடிய தலமாகும்" என்றார்.

    இதை கேட்டதும் எமதர்மனுக்கு புரிந்தது. திருச்செந்தூர் தலத்தில் முருகப்பெருமானை சரண் அடைந்தவர்களை அணுக கூடாது என்று முடிவு செய்தான். முருகப் பெருமானை வழிபட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றான்.

    இந்த நிகழ்ச்சியை வியாச முனிவர் தனது மகன் சுகபிரம்ம மகரிஷிக்கு தெரிவித்தார். இதை முனிவர்கள் அனைவரும் கேட்டறிந்தனர். அவர்களிடம் வியாச முனிவர் ஒரு கருத்தை வலியுறுத்தி கூறினார். "யாருக்கு மோட்சம் எனும் சாயுச்சிய பதவி வேண்டுமோ அவர்கள் திருச்செந்தூர் தலத்துக்கு சென்று முருகனை சரண் அடைந்தாலே போதும்" என்றார்.

    பொதுவாக இறைவனை அடைவதற்கான வழிகளாக சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கையும் நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். சரியை என்பதும் கோவில்களுக்கு செல்வது, பூஜைகள் என்பதாகும். கிரியை என்பது மந்திரம் சொல்லி வழிபடுவதாகும்.

    யோகம் என்பது தியானம் அல்லது தவம் செய்து இறைவனை வழிபட்டு பலன் பெறுவதாகும். ஞானம் என்பது இவை அனைத்துக்கும் மேலான நிலையில் அமைதியான மனநிலையுடன் இறைவனை வணங்கி அவருடன் ஒன்றிணைவதாகும்.

    இந்த நான்கையும் யார் ஒருவர் முழுமையாக கடைபிடிக்கிறார்களோ அவர்களுக்கு முக்தி எனும் மோட்சம் எளிதில் கிடைக்கும். இறைவறை அடைவதற்கு உடைய முக்தி நிலைகள் நான்கு வகைகளாக இருப்பதை நமது முன்னோர்கள் வரையறுத்துள்ளார்கள்.

    சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் ஆகிய நான்கும்தான் இறைவனை அடைவ தற்கான முக்தி பாதைகளாகும். இதில் சாலோகம் என்பது இறைவன் இருக்கும் இடத்தில் அவனோடு சேர்ந்து வாழ்வதை குறிக்கும். சாமீபம் என்பது இறைவனுக்கு பக்கத்தில் அமர்ந்து நெருக்கமாக வாழ்வதை குறிக்கும்.

    சாரூபம் என்பது இறைவனின் பிரதிநிதியாகவே வாழும் உன்னத நிலையை எட்டுவதாகும். இறைவனுக்கு செய்யப்படும் அனைத்தும் இந்த முக்தியை எட்டியவர்களுக்கும் கிடைக்கும்.

    ஆனால் சாயுச்சியம் என்பது இறைவனோடு இரண்டற கலந்து விடுவதாகும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் முருகன் தரும் சாயுச்சிய பலம் காரணமாக முருகனோடு இரண்டற கலந்து விடலாம். இந்த பலனை தரும் ஒரே முருகன் தலம் திருச்செந்தூர் ஆலயம் என்பது புராணங்கள் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது. எனவே முருகனோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைக்கும் பக்தர்கள் திருச்செந்தூர் முருகனை சரண் அடைய வேண்டும்.

    இதை உணர்த்த தான் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே முருகப்பெருமான் திருவிளையாடல் நடத்தினார். இதே போன்று இன்னொரு திருவிளையாடலை அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை பார்க்கலாம்.

    • உண்மையிலேயே அப்படிப்பட்ட மான் குட்டிகள் அருகில் வந்து அதை தொட்டு தடவி கொடுத்து மகிழும் வாய்ப்பும் ஜப்பானில் எனக்கு கிடைத்தது.
    • அமைதி நினைவு அருங்காட்சியகம் என்று பெயர் வைத்துள்ளார்கள்.

    மான் குட்டியே...

    புள்ளி மான் குட்டியே

    உன்மேனிதான்

    ஒரு பூந்தொட்டியே....

    என்ற பாடலை கேட்டு ரசித்து இருப்போம். நிஜத்தில் மான் குட்டியை அருகில் சென்று பார்த்து ரசித்து இருப்போமா?

    பெரும்பாலும் அந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. ஒரு வேளை பூங்காக்களிலோ, மிருக காட்சி சாலைகளிலோ அந்த வாய்ப்பு கிடைத்தாலும் நாம் அருகில் சென்றதும் அந்த புள்ளி மான்கள் துள்ளி ஓடிவிடும்.

    துள்ளி ஓடும் மான்களை பார்த்தாலே வாவ்... எவ்வளவு அழகாக இருக்கிறது. இந்த மான்கள். நம் அருகில் வந்தால்... அதை தொட்டு பார்த்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என்று ஏங்கி இருப்போம்.

    உண்மையிலேயே அப்படிப்பட்ட மான் குட்டிகள் அருகில் வந்து அதை தொட்டு தடவி கொடுத்து மகிழும் வாய்ப்பும் ஜப்பானில் எனக்கு கிடைத்தது.

    நம்மூரில் ஆட்டு குட்டிகள், நாய் குட்டிகள் எங்கு பார்த்தாலும் நடமாடும். கூப்பிட்டால் நம் அருகில் வரவும் செய்யும். அதைப் போலதான் ஜப்பானில் ஹிரோஷிமா அருகில் உள்ள மியாஜிமா என்ற நகரில் எங்கு பார்த்தாலும் மான்கள் சுற்றிக்கொண்டிருக்கும். அதை பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது.

    மெல்ல மெல்ல நடந்து மான்கள் அருகில் சென்றேன்.

    ஆனால் என்னை பார்த்து அந்த மான்கள் ஓடவில்லை. தொட்டேன். ஆசையில் தடவினேன். ம்கூம்... நகரவில்லை. அதன் அருகில் இருந்து புகைப்படமும் எடுத்து கொண்டேன். மானை அருகில் சென்று தொட்டு பார்த்தது இதுவே முதல் தடவை பார்ப்பதற்கு அழகாகவும், தொட்டு பார்த்தால் மிருதுவாகவும் சூப்பராக இருந்தது. அதனால் தான் மான்களை எல்லோருக்கும் பிடிக்கிறது.

    அதனால் தான் கவிஞர்களும் மான்களின் அழகில் மயங்கி பாடல் எழுதுகிறார்கள் என்று நினைத்து கொண்டேன்.

    ஹிரோஷிமா...

    முதல் முறையாக அந்த நகரத்தை பார்க்க சென்றேன். இரண்டாம் உலகப் போரில் அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான நகரம் என்று வரலாற்றில் படித்து இருக்கிறேன். எனவே எப்படியாவது அந்த நகரத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இப்போது அந்த நகரத்தில் நின்று கொண்டிருக்கிறேன்.

    ஹிரோஷிமாவுக்கு செல்பவர்கள் பார்க்க வேண்டிய இடம் அங்கு கட்டமைக் கப்பட்டிருக்கும் அருங்காட்சியகம் தான்.


    அமைதி நினைவு அருங்காட்சியகம் என்று பெயர் வைத்துள்ளார்கள். உள்ளே சென்றதும் அங்கு காட்சி படுத்தப்பட்டுள்ள பொருட்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அணு குண்டு கதிர்வீச்சு பேரழிவின் ஆறாத வடுக்களை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும்.

    கொத்து கொத்தாக மாண்ட மக்கள் விட்டுச் சென்ற உடமைகள், அந்த பேரழிவின் புகைப்பட காட்சிகளில் இடம் பெற்றுள்ளன.

    அணுகுண்டு வீச்சுக்கு முன்பிருந்த ஹிரோஷிமா நகரத்தையும் அந்த பேரழிவையும் பார்க்கும் போது எப்படி இருந்த அழகிய நகரம் இப்படி சிதைத்து உருக்குலைந்து போயிருக்கிறதே என்று நடுக்கத்துடன் பார்க்க வைக்கிறது.

    அந்த அணுகுண்டு வீசப்பட்ட போது அதில் இருந்து வெளியேறிய கதிர் வீச்சுகள் கருமை நிறத்தில் வந்ததாகவும் உடனே ஏற்பட்ட தாகத்தால் வாயை திறந்த படி அங்குமிங்கும் ஓடியிருக்கிறார்கள். கதிர் வீச்சின் தாக்கத்தை தாக்கு பிடிக்க முடியாமல் அங்கு மிங்கும் ஓடியவர்கள் அதை சுவாசிக்க சுவாசிக்க செத்து விழுந்திருக்கிறார்கள்.

    ஒரு இடத்தில் உட்கார்ந்து இருந்த ஒருவர் உடல் முழுவதும் அரிக்கப்பட்டு அவர் அமர்ந்து இருந்ததற்கான அடையாளம் மட்டும் கருமையாக இருந்து இருக்கிறது.

    அதை அப்படியே சேகரித்து காட்சிபடுத்தி இருக்கிறார்கள்.

    குண்டு வீச்சின் வெப்பத்தால் மரம், கல், உலோகம், கண்ணாடி ஆகியவை எந்த மாதிரி பாதிப்புகளை சந்தித்தது என்பதும் கட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

    மனிதர்களின் சதைகள் வெந்து போனதும், கட்டிடங்கள் நெருப்பு பிழம்புகள் போல பழுத்து இருந்ததையும் புகைப்படங்களாக காட்சி படுத்தி இருக்கிறார்கள்.

    பொதுவாக அருங்காட்சியகங்களை பார்த்தால் சுகமான நினைவுகளுடன் வெளியே வருவார்கள். ஆனால் இந்த காட்சி அரங்கத்தை பார்த்தால் சோகமான கனத்த இதயத்துடன் தான் வெளி வர முடிகிறது. இனி இப்படி ஒரு போர் வரக்கூடாது என்பதே இதை பார்ப்பவர்களின் பிரார்த்தனையாக இருக்கும். இவை அமைந்து இருப்பது ஒரு பூங்காவில் மிகப்பெரிய அரங்கத்தில். ஆனால் வெளியே நகரத்தில் பாதிப்புகள் எதுவும் தெரியவில்லை. மிகப்பிரமாண்டமாக அந்த நகரத்தை மீண்டும் கட்டி எழுப்பி இருக்கிறார்கள்.

    பாதிப்பு காட்சிகளையும் இப்போது மீட்கப்பட்டுள்ள அந்த நகரத்தின் அழகிய தோற்றத்தையும் பார்க்கும் போது இதற்காக எவ்வளவு உழைத்து இருப்பார்கள் என்பதை யூகிக்க முடிகிறது.

    இவ்வளவு பேரழிவையும் தாங்கி, தாண்டி எழுந்து ஒரு முன்னணி நாடாக ஜப்பான் உயர்ந்து நிற்பதை பார்க்கும் போது அந்த மக்களின் கடுமையான உழைப்பின் மீது மிகப்பெரிய மரியாதை வருகிறது.

    ஜப்பானின் இந்த முன்னேற்றத்தை பார்த்து தான் கவிஞர் கண்ணதாசன் அன்றே பாடினார். 'சின்னஞ்சிறிய ஜப்பான் நாடு என்ன முன்னேற்றம் காலை எழுந்ததும் ஆணும்-பெண்ணும் என்ன துடிதுடிப்பு. காலும், கையும் எந்திரம் போலே என்ன சுறு சுறுப்பு...' என்று...!

    பத்து நாட்கள் நான் ஜப்பானில் இருந்ததை அறிந்ததும் ரசிகர்கள் முக நூல்கள் வாயிலாக தேடியிருக்கிறார்கள். அதை பார்த்து ரொம்ப ஆச்சரியப்பட்டேன். இன்றும் ஜப்பான் ரசிகர்கள் கொண்டாடும் மீனாவாக உங்கள் மீனா இருக்கிறேன் என்பதை நிமனைத்தாலே பெருமையாக இருக்கிறது.

    மலையாள நட்சத்திரங்களுடன் இணைந்து ஐக்கிய அரவு நாடுகளில் நடத்தப்பட்ட கலக்கல் கலை நிகழ்ச்சிகள்...

    மறக்க முடியாத அந்த நினைவுகளை அடுத்த வாரம் பகிர்கிறேன்...

    (தொடரும்)...

    • ஸ்ரீ ரமண மகரிஷி ஆசிரமம்-ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம் இரண்டும் அடுத்தடுத்து இருக்கும்.
    • தவறுகள் செய்து இறைவனுக்கு கொடுக்கும் காணிக்கையை கோவிலில் இறைவனும் ஏற்க மாட்டான்.

    எல்லோரும் இந்த பொங்கலை மிகவும் மகிழ்வோடு கொண்டாடி இருப்போம். குடும்ப உறவுகளோடு கூடுதல் நாட்கள் இருக்கும் வகையில் விடுமுறை கிடைக்கும் பண்டிகை தீபாவளியினை விட பொங்கல் திருவிழாவிற்கே அதிகம் வாய்ப்பு உள்ளது.

    மார்டன் ஸ்டைலில் உள்ளவர்கள் கூட அதனை விட்டுவிட்டு நம் பாரம்பரிய ஸ்டைலுக்கு 'கப்சிப்' என ஓடி வந்து விடுவார்கள். அது இந்த மண்ணின் வலிமை. அது போலத்தான் எத்தனை விஞ்ஞான முன்னேற்றம் இருந்தாலும், உள் மனதில் ஏதோ ஒரு புள்ளி மையத்தில் மெய் ஞானமும் ஓடிக் கொண்டு இருக்கும். அதனால்தான் அதன் வழிகாட்டு பாதைகளாக திருவிழா, குல தெய்வ வழிபாடு போன்றவை இன்னும் நம் நாடி நரம்புகளில் ஓடுகிறது.

     

    கூடவே எத்தனையோ மகான்கள், சித்தர்கள் என இங்கு தோன்றி கண்ணுக்குத் தெரியாத ஒரு கயிற்றினால் நம்மைக் கட்டி நல்வழி பாதையில் தரதரவென இழுத்துச் செல்வார்கள். ஆகவேத்தான் சித்த பீடங்கள், சித்தர் சமாதிகளை தொடர்ந்து சென்று வழிபட்டு வரவேண்டும். எத்தனையோ மகான்கள், சித்தர்களைப் பற்றி பேசலாம். அதிசயிக்கலாம். ஆழமாக மனதில் விதைக்கப்படலாம். விஞ்ஞானம் தன் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஆழ் கருத்துக்களை இங்கு காணலாம். அவ்வகையில் நான் அறிந்து அதிசயித்த ஒரு மகான், சித்தரைப் பற்றி இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

    திருவண்ணாமலை. இந்தப் பெயரைச் சொன்னாலே உடல் சிலிர்க்கும். மனம் அடங்கும். நினைத்தாலே முக்தி என போற்றப்படும் தலம். இங்கு அரூபமாக வாழும் சித்தர்கள் பற்றி நம் அறிவு கொண்டு கணக்கிட முடியாது. அப்படியொரு மகான் வாழ்ந்து இன்றும் அரூபமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்தான் 'ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள்.

    ஸ்ரீ ரமண மகரிஷி ஆசிரமம்-ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம் இரண்டும் அடுத்தடுத்து இருக்கும். சாதாரண ஒரு வேட்டி, கழுத்தில் ஒரு துண்டு என்ற ஒரு எளிய தோற்றம் கொண்டவர் ரமண மகரிஷி. மிக இளம் வயதில் தியானத்தால் உடலை கரையான் அரிப்பது தெரியாமல் இருந்த நிலையில், சில சிறுவர்கள் அவர் மீது கல் விட்டு எறிந்த நிலையில் அவரை மீட்பதற்கு காரணமானவர் வழூவூரைச் சேர்ந்தவர். இளம் வயதிலேயே இவரின் இறைத்தன்மைகள் வெளிப்பட தொடங்கின.

     

    காமாட்சி அம்மனின் பரிபூர்ண அருளாசி பெற்றவர் என்றும், அப்படியே காமாட்சி அம்மனின் அவதாரம் என்றும் குறிப்பிடப்படுபவர். திருவண்ணாமலை செல்பவர்கள் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் ஆசிரமம் சென்று இவரை தரிசிக்க வேண்டும்.

    திருவண்ணாமலையில் இவர் தன் கடையில் கால் வைக்க மாட்டாரா? என அங்குள்ளவர்கள் ஏங்கினர். வழுவூரில் சிறு வயதிலேயே இவரது மகிமையை உணர்ந்தவர்கள் இவரை 'தங்க கை' என்று அழைப்பார்கள். தொட்டதெல்லாம் பொன்னாகும். 1870-1929 காலம் இவரது பிறப்பும் சமாதியுமாக அறியப்படுகின்றது. ஆக இவரது கடைக்கண் பார்வை, காலடி இவற்றுக்கு மக்கள் ஏங்கத்தான் செய்தார்கள்.

    ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் கிரிவலம் செல்வதை வழக்கமாக கொண்டவர். கிரிவலம் வரும் பொழுதெல்லாம் அங்கு ஒரு மூதாட்டியின் வீட்டில் உணவு அருந்துவது வழக்கம். ஏன் அங்கு தொடர்ந்து உணவு அருந்தினார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். உணவு என்றதும் விருந்து என்று நினைத்து விடக்கூடாது அல்லது ஏதோ அன்று சமைத்த உணவு என்றும் நினைக்கக் கூடாது. பழைய சோறுதான் அங்கு உணவு. அதுவும் சில நேரங்களில் அது நான்கைந்து நாள் பழையதாகக் கூட இருக்கும்.

    இப்படி சில காலங்கள் சென்றன. அந்த மூதாட்டி மிகவும் கொடுத்து வைத்தவர் என்றுதான் சொல்ல வேண்டும். ஒருநாள் சுவாமிகள் உணவருந்திக் கொண்டிருந்தபோது அந்த மூதாட்டி சுவாமிகளிடம் ஒரு வேண்டுதலை விடுத்தார். "ஐயா, உன்னால் கடவுளை காட்ட முடியும் என்று சொல்கின்றார்களே? எனக்கு நீ கடவுளை காட்டுவாயா? என்றாள்.

    "அட... உனக்கா... சாமியை.... என்று சிரித்தார் சாமி. ஆனால் மூதாட்டியோ ஆமாய்யா... இது என்னுடைய நெடுநாள் ஆசை. அதை நீ பூர்த்தி செய்துதான் தரணும்" என்று தீர்க்கமாக சொன்னார்.

    மகான் சிறிது நேரம் யோசித்தார். பின் "சரி, கடவுளைக் காட்டுகிறேன். ஆனால் நான் சொல்வது போல் நீ செய்ய வேண்டும். சிறிது தவறினாலும் உனக்கு ஆபத்து வந்து விடும். சரியா! என்று கேட்க மூதாட்டியும் ஒத்துக்கொண்டார்.

    "நான் சொல்லும்போது நீ கண்ணை மூடிக்கொள்ள வேண்டும். பின்பு நான் சொல்லும் பொழுதுதான் நீ கண்ணை திறக்க வேண்டும். இடையில் நீ கண்ணை திறந்து விட்டால் நடப்பதற்கு நான் பொறுப்பாளியாக மாட்டேன்" என்றார். 'சரியா?' என்று கேட்க மூதாட்டியும் ஒத்துக் கொண்டார்.

    மூதாட்டி தன் மனதினை திடப்படுத்திக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டார். அடுத்த நொடியில் மூதாட்டி தன்னிலை மறந்தவராக "ஆஹா அற்புதம்! ஆஹா ஹா! என்ன சுகமான காற்று! ஆஹா மனம் குளிர வைக்கும் மணம். ஆஹா ஆனந்தமாக இருக்கிறதே! ஏதோ குதிரை சத்தம் கேட்கிறதே. ஆஹா என்ன அழகு!.... என்ன அழகு...! அதோ இந்திரன் வந்து விட்டான் என்று சொல்லிக்கொண்டே, கண்ணை திறந்து விட்டார் மூதாட்டி. உடனே கண்கள் இரண்டும் பார்வை தெரியாது ஆகி விடுகின்றன. அதிர்ந்து போய் விட்டார் மூதாட்டி.

    "நான்தான் சொன்னேனே..... நான் சொன்ன பிறகுதான் கண்ணை திறக்க வேண்டும் என்று. உன்னை யார் இடையில் கண் திறக்கச் சொன்னார்கள்" என்று சொல்லி சாமிகள் கிரிவலத்தில் மறைந்து விடுகின்றார்.

    மூதாட்டியின் உறவினர்கள் அவருடைய நிலைமையைப் பார்த்து மகானிடமே சென்று மன்றாடுவோம் என்று சொல்லி கிரிவலம் பாதையில் சாமியைத் தேடுகின்றனர். ஓரிடத்தில் இறையருளால் மகானைக் கண்டு மூதாட்டிக் காக பரிந்துரை செய்ய மகானும் மனமிரங்கி "சரி... சரி... நாளைக்கு அவள் தூங்கி விழிக்கும்போது, கண்கள் நன்கு தெரியும்" என்று அருள் புரிந்தார்.

    என்ன அதிசயம்.... மறுநாள் காலை தூங்கி எழுந்தபோது மகான் சொன்னபடியே அம்மூதாட்டியின் கண்கள் ஒளி பெற்று விடுகின்றன. பார்வை நன்கு தெரிந்தது. என்னதான் கண் தெரிந்தாலும் அதன் பிறகு மகானை அந்த மூதாட்டி பார்க்கவும் முடியவில்லை. உணவு (பழைய சோறு) கொடுக்கவும் முடியவில்லை.

    நாம் உத்தம நிலையை அடைய மகான்கள் நிறைய சந்தர்ப்பங்கள் அளிக்கத்தான் செய்கின்றனர். நாம் தான் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்வதில்லை. மகான்கள் விருப்பப்படிதான் நம் விருப்பங்களை எல்லாம் மகான்கள் நடத்தித் தர வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. ஏனெனில் நமக்குத் தேவையானதை இறைவன் அறிவான். இதையே தான் மாணிக்கவாசகரும் இறைவனை ''வேண்டத்தக்கது அறிவோய் நீ... வேண்ட முழுவதும் அறிவோய் நீ'' என்றார்.

    அம்மூதாட்டி கூட அமைதியுடன் காத்திருந்தால் அவர் முடிவில் கடவுளை நிச்சயம் கண்டிருப்பார். இது சில ஆயிரம் ஆண்டுகள் முன்னாடி நடந்தது அல்ல. சமீபத்திய நிகழ்வு. இதனை நான் படித்தேன். பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவே!

    மகான்களுக்கு நம்மைப் பற்றி நாம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. நாம் செய்யும் செயல்கள் பற்றி அவர்களுக்கே நன்கு தெரியும். அது தவறு எனின் அவர்களே அதனை திருத்தவும் செய்வார்கள். அனைவராலும் போற்றப்படும் காஞ்சி மகா பெரியவரின் அற்புதங்களைப் பற்றி கூறிக் கொண்டே செல்லலாம். அதில் நான் படித்த ஒன்றினைப் பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.

    ஒரு வயது கூடிய அம்மா நெற்றி நிறைய குங்குமம், அணிகலன்கள், ஜரிகை போட்ட புடவை என்று அணிந்து மகா பெரியவர் காஞ்சி மகான் ஸ்ரீ சந்திரசேகர சுவாமி அவர்களை பார்க்க வந்திருந்தார். அந்த அம்மையாரின் தோற்றம் அனைவரையும் சற்று திரும்பி பார்க்க வைத்தது.

    வந்திருந்தோர் வரிசையில் நின்று இறைவனாய் பார்க்கப்படும் காஞ்சி மகானிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டிருந்தனர். இந்த அம்மையாரின் முறையும் வந்தது. அவரைப் பார்த்தவுடன் மகான் அருகில் இருந்தவரை அழைத்து 100 எலுமிச்சை பழங்களை கொண்டு வரச் சொன்னார். அதனை அந்த அம்மை யாரைப் பார்த்து எடுத்துக் கொள். இந்த எலுமிச்சை பழத்தினை வைத்து தானே பில்லி, சூனியம், குடும்பத்தை பிரிப்பது போன்ற காரியங்களை செய்கிறாய். எடுத்துக் கொள்' என சற்று கண்டிப்பாக பேசினார்.

     

    கமலி ஸ்ரீபால்

    கூட்டம் அதிர்ந்து விட்டது. பதறி அழுதாள் அந்த அம்மையார். 'சாமி, மன்னித்து விடுங்கள். காசுக்கு ஆசைப்பட்டு இம்மாதிரி வேலைகளை செய்து விட்டேன். இனி ஒரு போதும் இப்படி செய்ய மாட்டேன்' என்றார்.

    மகானும் சரி, இந்த தவறான மந்திரங்களை விடு (அதற்கான முறையையும் சொன்னார்) நல்ல வாழ்க்கை முறைக்கு மாறு' என அவளுக்கும் அருளினார்.

    எங்கே இருந்து வந்தாலும் இறைசக்தி கொண்ட மகான்கள் அவர்களைப் பற்றி முழுமையாய் அறிவர். தவறுகள் செய்து இறைவனுக்கு கொடுக்கும் காணிக்கையை கோவிலில் இறைவனும் ஏற்க மாட்டான். மாறாக அனைவரையும் நல்வழிப்படுத்துவதே ஆன்மீகப் பாதை. இதற்கு ஜாதி, மதம் என்ற எந்த பிரிவும் கிடையாது. இதனை எல்லாம் உணர்ந்து விட்டால் வாழும் தூய்மையான வாழ்வு ஒன்றே போதும். ஆத்ம சக்தியினை அதுவே கூட்டி விடும்.

    இதெல்லாம் இங்கொன்றும், அங்கொன்றுமாய் நிகழ்கின்றது. என் வாழ்க்கை போராட்டமாகத்தான் இருக்கின்றது என்று அங்கலாய்க்க வேண்டாம். எதிலும் ஒரு துடிப்பு வேண்டும். நம்பிக்கை வேண்டும், ஒழுக்கம் வேண்டும். இதெல்லாம் இருந்தால் தானாகவே நிகழும் தானே என்று நினைக்கலாம். 99 சதவீதம் உங்கள் முயற்சி வேண்டும். 1 சதவீதம் அந்த உயர் சக்தி இல்லாவிட்டால் நிறைவு பெறாது. நம்பிக்கையும், முயற்சியும் பல மடங்கு நன்மைகளைத் தரும். அனுபவம் என்பது வலியினைக் கடப்பது மட்டுமல்ல. வலியினைக் கடப்பதும் தான் என்ற பெரியோரின் வாக்கினை மறக்கக் கூடாது.

    வாழ்க்கை எந்த நொடியிலும் பேரதிசயத்தினை நிகழ்த்தலாம்! நிகழ்த்தும்! பெற்று வாழ்வோம்!!

    • ஒரு சில நாடுகள் மட்டுமே தனித்து நிற்கும் வல்லமை கொண்டவை.
    • பிற நாடுகளுடன் அமெரிக்கா கொண்டிருந்த வர்த்தக உறவால், அவ்வந்த நாட்டுக்குதத் தான் பெரும் பயன் கிடைத்தது

    இதோ... ஜனவரி 20 மதியம், இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராய் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்க உள்ளார்.

    தொடர்ந்து அல்ல; 2020 தேர்தலில் தோற்று, நான்கு ஆண்டுகள் 'வெளியே' இருந்து விட்டு இப்போது மீண்டும் அதிகாரத்துக்கு வருகிறார்.

    இடைப்பட்ட இந்த நான்கு ஆண்டு காலத்தில் அவர் ஏதும் மாறி இருக்கிறாரா? அவரது அரசியல், கோட்பாடு, அணுகுமுறை, குணநலன் எதுவும் மாறி இருக்கிறதா...?

    அப்படி எதுவும் தென்படவில்லை. அதாவது மீண்டும் 'அதே' டிரம்ப்! உலக நாடுகளுக்கு இதுதான் அச்சம் ஊட்டுகிறது; அதே அளவுக்கு எதிர்பார்ப்பையும் உண்டாக்கி இருக்கிறது!

    அதிபர் பதவியில் இருந்து விலகிச் செல்லும் ஜோ பைடன், அப்படி ஒன்றும் பிரமாதமாக எந்தச் சாதனையும் நிகழ்த்தி விடவில்லை. அவரது சொந்தக் கட்சியே தேர்தலுக்கு சற்று முன்னர் அவரைக் கைவிட்டு, கமலா ஹாரிசை வேட்பாளராக நிறுத்தியது. அந்த அளவுக்குத்தான் அவருக்கு மக்கள் ஆதரவு இருந்தது.

    இத்தனைக்கும் அவர் சார்ந்த ஜனநாயக கட்சிக்கு, டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சியை விடவும் அதிகமான ஆதரவு இருந்தது.

    ஒரு கட்டத்தில் உண்மையில் ஜனநாயகக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று பலரும் நம்பினார்கள்; அமெரிக்க நாட்டின் முதல் பெண் அதிபராகக் கமலா ஹாரிஸ் பொறுப்பேற்பார் என்று பலரும் எழுதத் தொடங்கினார்கள். களநிலைமை அப்படித்தான் இருந்தது. ஆனால் தனது ஆக்ரோஷமான பேச்சு செயல்பாட்டால், 'வலுவான தலைவர்' என்கிற தோற்றத்தை உருவாக்கி வெற்றி கண்டார் டொனால்ட் டிரம்ப். இன்று உலக நாடுகளுக்கு ஏற்பட்டு இருக்கும் அச்சத்துக்கு அடிப்படைக் காரணமே... இந்த 'வலுவான தலைவர்' என்கிற தோற்றம்தான்.

    2017இல் முதன்முறையாக அதிபர் பொறுப்பேற்ற போது டொனால்ட் டிரம்ப் ஆற்றிய உரை இன்னமும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. 'அமெரிக்கா முதலில்' என்ற அவரது முழக்கம், உலகம் முழுதும் அதிர்வலைகளை உண்டாக்கியது. அவருக்கு முன்னர் எந்த அமெரிக்க அதிபரும் இவ்வாறு கூறியது இல்லை.

    அது என்ன... 'அமெரிக்கா முதலில்'? தனது பேச்சிலேயே டிரம்ப் தெளிவாகக் கூறிவிட்டார்.

    இதுவரை, பிற நாடுகளுடன் அமெரிக்கா கொண்டிருந்த வர்த்தக உறவால், அவ்வந்த நாட்டுக்குதத் தான் பெரும் பயன் கிடைத்தது; இத்தகைய வர்த்தக உறவுகளால் அமெரிக்காவுக்கு இழப்புதான் ஏற்பட்டது அன்றி, எந்த லாபமும் இல்லை. 'என் நாட்டுக்குப் பயன் விளைவிக்காத வர்த்தக உறவில் இனி ஈடுபடப் போவது இல்லை; சர்வதேச வர்த்தகத்தில் எனது அமெரிக்காவின் நலனையே முன்னிறுத்துவேன். எனக்கு எனது நாட்டு நலன்தான் முக்கியம்; அதுதான் முதலில். மற்ற நாடுகளுக்கு உதவுவது எல்லாம் இதற்குப் பிறகுதான்'.

    தான் சொன்னபடியே, அமெரிக்க நலனை முன்னிறுத்துவதில் டொனால்ட் டிரம்ப் அதிக அக்கறை காட்டினார். 'இருவருக்கும் சம லாபம்' என்றால் வாருங்கள்; இல்லையேல் விலகிச் செல்லுங்கள், எங்களுக்குக் கவலை இல்லை. ஒவ்வொரு சபையிலும் ஒவ்வொரு கூட்டத்திலும் இதனைத் தொடர்ந்து வலியுறுத்தினார்.

    பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

    ஒருபுறம் அமெரிக்க உதவியை பெற்றுக் கொண்டு, மறுபுறம் 'அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக' என்று முழக்கமிட்டு உள்நாட்டில் அரசியல் ஆதாயம் தேடிய தலைவர்கள் மூச்சு திணறிப் போனார்கள். உலகின் பெரிய, சிறிய நாடுகள், அமெரிக்க உறவு குறித்த தமது போக்கை மாற்றிக் கொள்ள நேரிட்டது.

    அமெரிக்கா, சீனா உடன் வர்த்தக உறவு இன்றி உலகில் எந்த நாடும் தனித்து பொருளாதார வளர்ச்சி காண முடியாது என்பதுதான் இன்று உள்ள யதார்த்தம். இந்தியா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா போன்ற ஒரு சில நாடுகள் மட்டுமே தனித்து நிற்கும் வல்லமை கொண்டவை; இங்கு மட்டுமே, உள்நாட்டுப் பொருளாதாரம் வலுவாக இருக்கிறது; அதனால், பொருளாதாரத் தன்னிறைவு சாத்தியம் ஆகி உள்ளது.

    அது சரி... அவரது நாட்டுக்கு அவர் முன்னுரிமை தருகிறார். இதில் என்ன தவறு இருக்கிறது? நியாயமான கேள்வி. இதுவரை நடந்து வந்துள்ள சர்வதேச வணிகப் பரிமாற்றங்களை சற்று உன்னிப்பாகப் பார்த்தால், உலக நாடுகளுக்கு இருக்கும் 'சங்கடம்' தெரிந்து விடும்.

    சர்வதேச வர்த்தகம் என்றால் ஏற்றுமதி இறக்குமதி இரண்டும் இருக்கும் அல்லவா...? பொதுவாக எந்த நாட்டுக்கும், இன்னொரு நாட்டுடன் ஏற்றுமதி- இறக்குமதி இரண்டும் சமமாக இருப்பதில்லை.

    ஏற்றுமதி அதிகம் இருந்து இறக்குமதி குறைவாக இருந்தால் அது, அந்த நாட்டுக்கு ஆதாயம். ஆயிரம் ரூபாய்க்கு ஏற்றுமதி; 500 ரூபாய்க்கு இறக்குமதி செய்கிறேன் என்றால் எனக்கு லாபம் தானே..? பிரதானமாக இங்குதான் அமெரிக்க நலன் பாதிக்கப் படுவதாய் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். அதாவது அமெரிக்காவில் இருந்து சில நாடுகள் செய்யும் இறக்குமதி குறைவு; அங்கிருந்து அமெரிக்காவுக்கு செய்யும் ஏற்றுமதி மிக அதிகம். இதற்குப் பொருள் - அமெரிக்காவால் இந்த நாடுகள் பயன்படுகின்றன.

    இது மட்டும் அல்ல; கலவரம், தாக்குதல், போர்.. தொடங்கி இயற்கைப் பேரிடர் வரை ஒவ்வொரு நெருக்கடியின் போதும் உலக நாடுகளுக்கு அமெரிக்கா உதவி வருகிறது; இதனால் எல்லாம் அமெரிக்காவுக்கு இழப்புதான் ஏற்படுகிறதே தவிர, ஆதாயம் ஏதும் இல்லை - என்பதே டொனால்ட் டிரம்பின் மறைமுக வாதம்.

    (அது என்ன 'மனிதாபிமான' உதவி என்றால் அமெரிக்கா மட்டுமே நினைவுக்கு வருகிறது?)

    உலக நாடுகளின் கவலை என்னவென்று இப்போது புரிந்து இருக்குமே... அமெரிக்காவுடன் தமது வணிகம் பாதிப்புக்கு உள்ளாகும்; அமெரிக்க உதவி குறைந்து போகும்; அவசரத் தேவைக்கு உலக வங்கி உலக நிதியம் போன்ற அமைப்புகளில் இருந்து கிடைக்கும் கடன் உதவி தொடர்ந்து கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். வெகு நியாயமான அச்சம். காரணம் இவை எல்லாம் அநேகமாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இயங்குபவை.

    இப்படிச் சொல்வதால், அமெரிக்காவில் உலக நாடுகளுக்கு நன்மை மட்டுமே உண்டு என்று பொருள் கொள்ளக் கூடாது. ஏகாதிபத்திய செயல்பாடுகளில் அமெரிக்கா - சீனா இடையே எந்த வேறுபாடும் இல்லை.

    எந்த ஒரு நாட்டின் மீதும் தனது அதிகார வலிமையைக் காட்ட அமெரிக்காவோ சீனாவோ தயங்கியதே இல்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நிகழ்ந்த, அல்லது நிகழ்ந்து வரும், எந்த ஒரு போருக்குப் பின்னாலும் வல்லரசுகளின் 'ஆட்டம்' உறுதியாய் இருக்கவே செய்கிறது. உலகப் பொருளாதாரத்தில் கடுமையான பின்னடைவுகளை ஏற்படுத்தும் இவ்வகைப் போர்களால் சிறிய நாடுகளே மிகவும் மோசமாக பாதிப்புக்கு உள்ளாகின்றன. இங்கு வாழும் மக்கள், மென்மேலும் கொடிய வறுமைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

    அவருக்கு அதுவரை டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, அமெரிக்காவின் ஏகாதிபத்திய நடவடிக்கைகள் இன்னும் தீவிரம் அடையலாம். இதற்குத்தான் சாத்தியங்கள் அதிகம். உலக நன்மைக்கு, உலக மக்களின் நலனுக்கு இது நல்லது அல்ல.

    மேலும் மேலும் பல அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தாம் ஆளாகலாம் என்கிற அச்சம் சிறிய நாடுகளில் பரவி இருக்கிறது. இதனை, அடிப்படை அற்ற அச்சம் என்று ஒதுக்கி விட முடியாது.

    போருக்கு எதிராக, ஆயுதப் பரவலுக்கு எதிராக, ஏகாதிபத்திய அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக டொனால்ட் டிரம்ப் இதுவரை குறிப்பிடும்படி எதுவும் பேசவில்லை; செய்யவில்லை. மாறாக இத்தகைய கொடு செயல்களுக்கு ஆதரவாகவே அவர் இருப்பார் என்றுதான் கருத வேண்டி உள்ளது. இந்த அச்சங்களுக்கு எல்லாம் மாறாக, போருக்கு எதிராக மனித குலத்துக்கு நன்மை செய்யும் நடவடிக்கைகளில் டொனால்ட் டிரம்ப் ஈடுபட்டால் மிகவும் நல்லது. அப்படி அவர் நடந்து கொள்வாரா..? நம்பிக்கை இல்லை; ஆனாலும் பார்ப்போம்.

    டொனால்ட் டிரம்ப் வருகையால் நன்மை ஏதும் இல்லையா..? நிச்சயமாக சில நன்மைகள் இருக்கத்தான் செய்கின்றன.

    அடிப்படை வாதம் தீவிரவாதம் பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளில் ஒரு தெளிவும் தெம்பும் இருக்கும். ஆங்காங்கே சிறு குழுக்கள் மூலம் அரசுகளைக் கவிழ்க்க சிலர் மேற்கொள்ளும் முயற்சிகள், ஊக்குவிக்கப்படாது; முறியடிக்கப் படலாம்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்ப்பதற்கு, 'ஜனநாயக வழியில்' போராடி, அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கும் 'கும்பல் ஜனநாயகம்', அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக, சர்வதேச அங்கீகாரம் பெறாமல் போகலாம்.

    இது மட்டும் அன்றி, டொனால்ட் டிரம்பின் வலுவான அரசியல் தலைமை காரணமாக அமெரிக்கப் பொருளாதாரம், சரிவில் இருந்து மீண்டு வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பக் கூடும். இதனால் அங்கே வேலை வாய்ப்புகள் கூடும்; பன்னாட்டு இளைஞர்கள் பயன் பெறக் கூடும். இதனால் அவ்வந்த நாட்டுப் பொருளாதாரம் நன்மை பெறும்.

    இன்னும் இப்படி, பல நல் விளைவுகளை எதிர்பார்க்கலாம்.

    ஒன்றுக்கொன்று, சங்கிலித் தொடர் போல, பயன்களும் பாதகங்களும் ஏற்படலாம்.

    நமது அண்டை நாடான வங்கதேசத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது தெரியும். அப்போது கல்வி அமைச்சராக இருந்தவர் நேற்று ஒரு பேட்டியில் கூறினார் - 'வங்க தேசத்தின் பொருளாதாரம் சரிவிலிருந்து மீள வேண்டுமானால் டொனால்ட் டிரம்ப் உடன் நல்லுறவு இருந்தாக வேண்டும். ஆனால் தற்போதுள்ள பொறுப்பு அதிபர், வெளிப்படையாக கமலஹாரிசுக்கு ஆதரவு தந்து ரொனால்ட் டிரம்ப்பைப் பகைத்துக் கொண்டார். இதனை மறந்து வங்கதேசத்துக்கு டிரம்ப் உதவ வேண்டும்.'

    உலகளாவிய வர்த்தகம், உலகளாவிய அரசியல், உலகளாவிய உறவுகள்/ தொடர்புகள் இன்று இயல்பாகி விட்டன. எனவே, 'பட்டாம்பூச்சி விளைவு', தவிர்க்க முடியாதது ஆகி விட்டது. அமெரிக்காவில் அதிகார மாற்றம், மற்ற பிற நாடுகளில் ஏதோ ஒரு வகையில் அதிர்வுகளை ஏற்படுத்தவே செய்யும். இவை நல்லதாக இருக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்.

    பார்க்கலாம், ஒருவேளை டொனால்ட் டிரம்ப் மாறியும் இருக்கலாம்!

    நல்லது நடக்கும் என்கிற நம்பிக்கையில் தானே ஒவ்வொரு நாளையும் நகர்த்திக் கொண்டிருக்கிறோம்...?

    • ஹீமோகுளோபின் குறையும்போது ரத்தச்சோகை என்கிறோம்.
    • ரத்தச்சோகை வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன.

    நம் ரத்தத்தில் சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள் மற்றும் தட்டணுக்கள் என்ற மூன்று வகை அணுக்கள் உள்ளன. இதில் சிவப்பணுக்களில் இருக்கும் ஹீமோகுளோபின் என்ற இரும்புச்சத்து நிறைந்த புரதம், ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைத் தருகிறது.

    நமது உடலில் ஹீமோகுளோபின் நுரையீரலில் இருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல உதவுகிறது. உடலில் மற்ற பகுதிகளில் இருந்து கார்பன்-டை-ஆக்ஸைடை நுரையீரலுக்கு எடுத்து செல்கிறது.

    ஹீமோகுளோபின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?

    ஆண்களுக்கு 14 முதல் 16 கிராம்/டெலி

    பெண்களுக்கு 12முதல்14 கிராம்/டெலி

    பிறந்த குழந்தைகளுக்கு 16 முதல் 20 கிராம்/டெலி

    இந்த அளவிற்குக்கீழ் ஹீமோகுளோபின் குறையும்போது ரத்தச்சோகை என்கிறோம்

    ரத்தச் சோகையின் அறிகுறிகள்:-

    ரத்தச்சோகையின்அறிகுறிகள், ஹீமோகுளோபின் அளவைப் பொறுத்து மாறுபடுகிறது., ஹீமோகுளோபின் அளவைப் பொறுத்து ரத்தச்சோகையின் அறிகுறிகள் மாறுபடுகிறது. சிலருக்கு அறிகுறிகளே இல்லாமலும் இருக்கலாம்.

    நாம் இயல்பாக இயங்குவதற்குப் போதுமான அளவு ஆக்ஸிஜன் வேண்டும். அந்த ஆக்ஸிஜனை உடல் முழுவதற்கும் கொண்டு செல்ல ஹீமோகுளோபின் வேண்டும். இரத்தச் சோகையினால் செல்களுக்குக் கிடைக்க வேண்டிய ஆக்ஸிஜன் போதுமான அளவு கிடைக்காததால் உடலில் பலவித அறிகுறிகள் தென்படுகின்றன.

    அறிகுறிகள் பின்வருமாறு, உடல் சோர்வு மற்றும் பலவீனம், மூச்சு விடுவதில் சிரமம், படி ஏறுவதில் சிரமம், தோல் வெளிறிப்போதல், நெஞ்சுப் பகுதியில் வலி, முறையற்ற இதயத் துடிப்பு, வேகமாக இதயம் துடிப்பதால் வரும் படபடப்பு, தலைச்சுற்றல், கை, கால்கள் சில்லிட்டுப் போதல், தலைவலி, தலைமுடி உதிர்வது

    ஆரம்ப நிலையில் ரத்தச்சோகையின் அறிகுறிகள் மிதமாகத்தான் இருக்கும், அதை நாம் சரிவர கவனிக்கவில்லை எனில் மோசமடைந்துவிடும். ஏன் சிலநேரங்களில், உயிரிழப்பு கூட ஏற்பட வாய்ப்புள்ளது.

    ரத்தச்சோகைக்கான காரணங்கள்

    ரத்தச்சோகை வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. ரத்த அணுக்கள் உருவாவதில் சிக்கல்கள், ரத்தம் அதிகமாக உடலை விட்டு வெளியேறுவது, உடலினுள் ரத்த அணுக்கள் சிதைக்கப்படுவது, இந்த மூன்று காரணங்களால்த்தான் அதிக அளவில் ரத்தச்சோகை ஏற்படுகிறது.

    அன்றாட வாழ்வில் பலருக்கும் ரத்தச்சோகை வருவதற்கான காரணங்கள் பின்வருமாறு,

    ஊட்டச்சத்து குறைபாட்டினால் வருவது - இரும்புச் சத்து, போலேட், வைட்டமின் பி12.

    அதிகமான இரத்தப்போக்கு- விபத்தின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு, கடுமையான ரத்தச்சோகையை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் உயிரிழப்பையும் ஏற்படுத்துகிறது.

    கிருமிகளின் தாக்கம் - எச்.ஐ.வி. / எய்ட்ஸ்.

    பெண்களுக்கு மாதவிடாய் காலங்களி்ல் அதிகமாக ரத்தம் வெளியேறுதல். வயிற்றினுள் ரத்தப்போக்கு. மலம் வழியாக ரத்தம் வெளியேறுதல். சிறுநீரகக் கோளாறு - எரித்ரோபாய்டின் குறைபாடு. எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் குறைபாடு. புற்று நோய்த்தாக்கம்

    மூக்குப்பொடி, புகையிலை, குட்கா, பான்மசாலா, ஹான்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்துவது.

    மரு.அ.வேணி

    சிலவிதமான புற்று நோய்க்குப் பயன்படுத்தும் மருந்துகள் ரத்த அணுக்களைப் பாதிக்கும்.

    புகைப்பழக்கம், மதுப்பழக்கம், நச்சுஇரசாயனங்கள் மற்றும் வேதியியல் பொருட்களை எடுத்துக் கொள்வது ஹீமோகுளோபினோபதி என்னும் பிறவிக் குறைபாடு தலாஸ்மியா, ஹீமோலைடிக் அனீமியாஸ் மற்றும் ரத்தம் உறைவதில் ஏற்படும் மரபணுக் கோளாறுகள்.

    முடக்கு வாதம், ஆட்டோ இம்யூன் கோளாறுகள்

    இவை அனைத்தும் ரத்தச்சோகை வருவதற்கான காரணங்கள் ஆகும்.

    ரத்தச்சோகையினால் ஏற்படும் சிக்கல்கள்

    சரியான நேரத்தில் ரத்தச்சோகையைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால், ரத்தச்சோகை பல உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அவை...

    இதயப்பிரச்சனைகள்: ரத்தச்சோகை, விரைவான அல்லது ஒழுங்கற்ற இதயத்துடிப்புக்கு (அரித்மியா) வழிவகுக்கும். ரத்தச்சோகையுடன் இருக்கும்போது, ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் பற்றாக்குறையை ஈடுசெய்யவும், அதிக ரத்தத்தை வெளியேற்றவும் இதயம் அதிக அளவு வேலை செய்கிறது. இது விரிவாக்கப்பட்ட இதயம் அல்லது இதயச் செயலிழப்புக்கு வழிவகுக்கும்.

    கர்ப்பகால சிக்கல்கள்: ஃபோலேட் குறைபாட்டினால் கர்ப்பிணிப் பெண்களுக்குக் குறைமாதக் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக மூளை மற்றும் தண்டுவடத்தில் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். அரிவாள் செல் ரத்தச்சோகை சில பரம்பரை ரத்தச்சோகைகள் உயிருக்கு ஆபத்தான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். ரத்தச்சோகை உள்ளவர்கள் ரத்த தானம் செய்யமுடியாது

    ரத்தச்சோகைக்கான சிகிச்சை முறைகள் என்ன?

    ரத்தச்சோகைக்கான சிகிச்சையானது அதற்கான காரணங்களைப் பொறுத்து மாறுபடுகிறது.

    இரும்புச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படும் ரத்தச்சோகையாக இருந்தால், இரும்புச்சத்தை வாய்வழியாக எடுத்துக்கொள்வது, உணவில் மாற்றங்கள் செய்வது அல்லது வைட்டமின் "சி" அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது,

    இரும்புச்சத்தின் அளவு மிகவும் குறைவாக இருக்கும்போது ரத்தநாளம் வழியாகமருந்துகளைச் செலுத்தி விரைவாகச் சரிசெய்யலாம். கிருமிகளின் தாக்கத்தினால் வரும் ரத்தச்சோகைக்குக் கிருமிகளை உடலில் அழிப்பதற்கான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    அதிகமான இரத்தப்போக்கு உயிருக்கு ஆபத்தானது என்பதால் உடனடியாக இரத்தம் உடலினுள் செலுத்தப்படுகிறது. சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு எரித்ரோபாய்டின் என்ற மருந்து கொடுக்கப்படுகிறது.

    எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் குறைபாட்டிற்கு எலும்பு மஜ்ஜை மாற்றம் செய்யப்படுகிறது. புற்று நோய்த்தாக்கம் உள்ளவர்களுக்கு அதற்குரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரத்த அணுக்களைப் பாதிக்கும் மதுப்பழக்கம், நச்சு ரசாயனங்கள் மற்றும் புகைப்பழக்கம் இவற்றிலிருந்து விலகி இருப்பது நல்லது. இப்படி ரத்தச்சோகை வருவதற்கான காரணங்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    ரத்தச்சோகை வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

    இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாகப் பசலைகீரை உள்ளிட்ட பிற கீரைகள், காய்கறிகள், பேரீச்சை போன்ற உலர்ந்த பழங்கள், பீன்ஸ், பருப்பு வகைகள் ஆகியவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. அசைவ உணவுகளில் குறிப்பாக சுவரொட்டி மற்றும் ஈரலில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

    வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உள்ளடக்கிய உணவை உட்கொள்வதன் மூலம் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் குறைபாடு ரத்த சோகையைத் தவிர்க்கலாம்.

    • வரி விதிப்புக்கு எதிராக சுதேச அரசாங்கத்திற்கெதிராக இயக்கம் நடத்திய சீர்திருத்தப் பெரியார்களுள் ஒருவராக சுவாமிகள் திகழ்கின்றார்.
    • பொருளாதார நிலையில் தன்னிறைவு கொண்டு மகிழ்வுடனே யாவரும் வாழ வேண்டும் என்பதில் சுவாமிகள் மிக்க நாட்டம் கொண்டு செயல்பட்டார்.

    துறவுக்கு முக்கியத்துவம் அளிக்காது, இல்லறத்தையே நல்லறமாகப் போற்றிய வைகுண்ட சுவாமிகள், பெண்கள் மணமாகி தாய்மையடைந்து இனிய வாழ்வு வாழ்ந்திட வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினார். எனவே தான் கஞ்சனின் வாழ்வை பற்றி கூறும்போது, திருமணமாகாத பெண்களை தங்கையர்களாக கொண்டிருந்த கஞ்சனை நோக்கி நாரதர் உரையாக,

    "வாழாத மங்கையரை வைத்திருந்தால் ராச்சியத்தில்

    தலைகெடுங்காண் சாத்திரத்துக் கேறாது,

    வானம் வந்து சிக்கும் மாரியது பெய்யாது

    கோத்திரத்துக்கேறாது குடும்பம் தழையாது

    மானம் வரம்புகெட்டு மனுநீதி தானழிந்து

    கோட்டை யழியும் குளங்கரைகள் தானழியும்

    நாட்டை அழிக்குமடா நல்ல கன்னி காவல் வைத்தால்"

    என அகிலம் கூறுகின்றது. மேலும் இல்லறத்தில் நின்று இறைவனை ஏத்தி இன்பநிலை அடைந்திடுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

    "இல்லறத்தைவிட்டு தவமில்லை காண் வேறுண்டு

    ஆனதால் பேடென்னும் அருளியிருளியெனும்

    மானமில்லா ரென்னும் வராது மேல் பிறவி"

    என்று அறிவுறுத்திய சுவாமிகள்,

    "ஆணும் பெண்ணும் கூடி

    ஆசாரம் செய்திடுங்கோ"

    என ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதுதான் உலகியல் நெறி என்பதை ஊக்குவித்த சுவாமிகள், மேட்டுக்குடியினர் திணித்திருந்த இழிநிலை அகற்றி, சமத்துவ நிலையில் வாழ்வினை அமைத்திடுவதற்கான வழிமுறைகளைத் தன்னகத்தே கொண்டு சமுதாயப் பணி ஆற்றியதின் விளைவாக மக்கள் கிளர்ந்தெழுந்து உரிமை காக்கக் களம் புகுந்தனர்; வெற்றியும் கண்டனர். கோனோக்கி வாழும் குடிகளை பேணி அவர்களின் நலம் காக்க வேண்டிய மன்னன், சிறுபான்மை மேட்டுக்குடி வர்க்கத்தின் சுகபோக வாழ்வுக்காக துணை நின்றான். புரோகிதர்களின் ஆதிக்கத்தில் கட்டுண்டு சமயச்சடங்குகளில் ஏராளமான தொகையினை விரையம் செய்தான். சிலரது கடைக்கண் பார்வைக்காக பலரது கண்ணீர் காணிக்கையாக்கப்பட்டது.

     

    மக்கள் நலனுக்காக அரசு என்ற நிலை மாறி, அரசுக்காகவே ஓடாய் உழைத்து ஓய்ந்திட வேண்டிய நிலைக்கு உழைக்கும் வர்க்கம் தள்ளப்பட்டது. "எப்போதும் பாடுபடு. எப்போதும் உழைத்து கொண்டிரு. உழைப்பிலே சுகம் இருக்கிறது; வறுமை நோவு முதலிய குட்டிப்பேய்கள் எல்லாம், உழைப்பை கண்டவுடன் ஓடிப்போய் விடும்" என்று போதனை செய்யப்பட்ட நாட்டில், நாள் முழுக்க உழைத்த போதிலும் அவர்களால் எந்தப் பேய்களையும் ஒட்ட முடியவில்லை. ஏனெனில், அவர்களின் உழைப்பு அரசாங்கத்தாலும் மேட்டுக்குடியினராலும் உறிஞ்சப்பட்டது.

    எண்ணிலா வரிகளைச் செலுத்துவதுடன், உழைக்கும் வர்க்கம் ஊழிய வேலை செய்யுமாறு ஆதிக்க வர்க்கத்தால் கொடுமைப்படுத்தப்பட்டது. வரி செலுத்த இயலாதவர்களை சுடுமணலில் நிறுத்தி வைப்பது, யானையை கொண்டு மிதிக்க வைப்பது, குனிய நிறுத்தி முதுகில் கல்லேற்றி வைப்பது என தாங்கொணா வேதனைக்குட்படுத்தப்பட்டார்கள். அரசாங்கம் இழைத்த வரிக் கொடுமையை வைகுண்ட சுவாமிகள் வன்மையாக கண்டித்தார். அதிகயிறை வசூலிக்கக் கூடாது' எனவும், காலச்சூழலுக்கேற்ப வரி வசூலில் சிற்சில சலுகைகளை வழங்க வேண்டும் என்றும், வரிவசூல் என்ற பெயரில் மக்களை கொடுமைப்படுத்தக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்தார். தனது கோரிக்கையின் நியாயம் குறித்து பல புராண வரலாற்று நிகழ்வுகளை நினைவுபடுத்தினார். சோழமன்னர்தம் அரசியல் நெறியினை விளக்குகையில்,

    "ஆறிலொரு கடமை அது தரவே மாட்டோமென்று

    மாறொருவர் சொன்னால் மன்னன் மறுத்தே கேளான்

    பன்னிரண்டு ஆண்டு பரிவாய் இறையிறுத்தால்

    பின்னிரண்டாண்டு பொறுத்து இறைதாரும் என்பார்"

    எனவும், கஞ்சனின் கொடுங்கோலாட்சி பற்றிக்கூறுகையில், இறைமிகுதி வேண்டி இராச்சியத்தை ஆண்டதினாலே புவியிலுள்ளோர்கள் ஈனதுன்பமாகி இருந்தோர் பயமடைந்து வெறுப்பு ஏற்பட்டு அவனின் ஆட்சி ஒழிக்கப்பட்டதுடன் அவனும் அழிவை தேடிக் கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும் இராவணனின் வீழ்ச்சிப்பற்றி கூறுகையில், மூர்க்கமதால் பாவி ஊழியங்கள் கொண்டதினால் பொறுக்க முடியாமல் பூலோகத்தார்களெல்லாம்வெ குண்டெ ழுந்ததாக அகிலம் குறிப்பிடுகிறது. நவீன யுகத்தில் இந்திய நாட்டில் ஆளும் வர்க்கத்துக்கு எதிராய் வரி எதிர்ப்பு போராட்டம் நடத்திய முதல் புரட்சியாளராக வைகுண்ட சுவாமிகள் திகழ்கின்றார். திருவிதாங்கூர் மன்னனை நோக்கி "மக்களுக்கு நீ தொடர்ந்து முறைகேடு செய்து வருவாயெனில் உன் வாழ்நாட்களுக்கு இடர் வரும் மாநீசா" என்ற எச்சரிக்கை விடுத்தார். மேலும்,

    "உன்கிளையும் நீயும் உற்றார் பெற்றார்களுடன்

    தன் கிளையோடே நீயும் தரணியாள வேணுமென்றால்

    நீதியுடன் இறைகள் இல்லாமல் நீக்கி வைத்து

    ஊழியமும் தவிரு நீ உலகாள வேணுமென்றால்

    அல்லாமல் சான்றோரை அன்னீதமாய் அடித்தால்

    பொல்லாத நீசா புழுக்குழிக்காளாவாய்

    எனவும்"

    கற்புள்ள சாணாத்தி கதறியுன்னை சாபமிட்டால்

    அப்படியே உன்கோட்டை அழிந்து பொடியாகுமடா

    எனவும்,

    தெய்வ சாணாத்தி தினமுனை நிந்தித்ததுண்டால்

    பொய்வகையால் கர்ம போகத்தால் நீ மடிவாய்"

    எனவும் கண்டன குரல் எழுப்பினார். வரி விதிப்புக்கு எதிராக சுதேச அரசாங்கத்திற்கெதிராக இயக்கம் நடத்திய சீர்திருத்தப் பெரியார்களுள் ஒருவராக சுவாமிகள் திகழ்கின்றார்.

    "கொத்தைக் குறையாதே

    குறை மரைக்கால் வைக்காதே

    உபதேசம் சொல்லும் கூலி

    உடன் கையில் கொடுத்திடுங்கோ"

    என மக்களுக்கு அறிவுரை வழங்கினார். தவிரவும், மக்கள் வியர்வை சிந்தி ஈட்டும் வருவாயை வீண்செலவு செய்திடவோ, பய உணர்வுடன் வரி வசூலிக்கும் மேட்டுச்சாதியினரிடம் கொடுக்கவோ வேண்டாம் என போதித்தார். அகிலம் இதுபற்றி,

    "அவனவன் தேடும் முதல் அவனவன்

    வைத்தாண்டிடுங்கோ

    எவன் எவனுக்கும் பதறியினி

    மலைய வேண்டாமே"

    என்று புரட்சி முழக்கமிடுகின்றது.

    சமய சடங்குகளில் பொருள் விரயம் செய்யக்கூடாது என்று நாடி வந்தவர்களிடம் ஆணையிட்டார். பொருளாதார நிலையில் தன்னிறைவு கொண்டு மகிழ்வுடனே யாவரும் வாழ வேண்டும் என்பதில் சுவாமிகள் மிக்க நாட்டம் கொண்டு செயல்பட்டார். இங்ஙனம் சுவாமிகளின் சமுதாய சீர்திருத்த இயக்கம் தாழ்வுற்ற மக்களுக்கு தன்மானம் ஊட்டியது; ஒற்றுமையும் சமத்துவமும் நிலவிட முயற்சித்தது; பெண்கள் முன்னேற்றத்தில் நாட்டம் கொண்டது; தர்மம் நிலைக்க பாடுபட்டது. வரிக்கொடுமையை எதிர்த்து ஆளும் வேந்தனை இடித்துரைத்தது; மொத்தத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக வாழ்வினை புத்தாக்கப்படுத்திட சுவாமிகளின் இயக்கம் முழுமூச்சுடன் செயலாற்றியது எனலாம்.

    வைகுண்ட சுவாமிகள் சமுதாய மறுமலர்ச்சியில் மிக்க நாட்டம் கொண்டவராய் இருந்த போதிலும், சமயத்துறையிலும் சீர்திருத்த பார்வையை காட்ட வேண்டிதாயிற்று. ஏனெனில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இந்தியாவில் சமூக சீர்திருத்தம் சமயவாழ்வின் மாற்றங்களுடன் பின்னி பிணைந்து காணப்பட்டது. உடலுக்கு உயிர் போன்று திருவிதாங்கூர் ஆட்சி பரிபாலனத்தில் சமயமே ஆதாரமாக விளங்கியது. ஆளும் வேந்தர்கள் கூட பிராமணப் புரோகிதர்களின் ஆதிக்கத்தில் அடிமைப்பட்டு கிடந்தனர். இச்சூழ்நிலையை ஊன்றி கவனித்த சுவாமிகள் சமுதாயச் சீர்திருத்தம், சமய சீர்திருத்தத்தின் துணையுடன் தான் நடைபெற முடியும் என்பதை நன்றாக உணர்ந்தார். எனவே அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் சமய வாழ்விலும் மாற்றம் காண முனைந்தார். அதற்கு அவர் செய்தது என்ன? அடுத்த தொடரில் பார்ப்போம்.

    ×