என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் - ஆட்சியர் அறிவுறுத்தல்
    X

    புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் - ஆட்சியர் அறிவுறுத்தல்

    • புதுச்சேரியில் உள்ள 26 படுகை அணைகளும் நிரம்பி வழிந்தது.
    • வதந்திகளை நம்பாமல் அரசு அளிக்கும் செய்திகளை மட்டுமே பின்பற்றுமாறு மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கோடை காலத்தை தாண்டி ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் கடும் வெயில் சுட்டெரித்தது. பகல் நேரங்களில் மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு வெயில் கொளுத்தி வந்தது.

    இந்த நிலையில் கடந்த அக்டோபர் 15-ந் தேதி முதல் வட கிழக்கு பருவமழை தொடங்கியது. அவ்வப்போது மழையும் பெய்தது.

    இதனிடேயே வங்கக்கடலில் அக்டோபர் 27-ந் தேதி மோந்தா புயல் உருவானது. இந்த புயல் புதுச்சேரியை தாக்கும் என வானிலை மையம் எச்சரித்தது. ஆனால் புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்தது.

    இருப்பினும், புதுச்சேரி மற்றும் புதுச்சேரியை சுற்றி உள்ள தமிழக பகுதிகளில் கன மழை பெய்தது. புதுச்சேரியிலும் கனமழை கொட்டியது. இதனால் ஏரி, குளங்களில் வெள்ள நீர் நிரம்பியது.

    அதே நேரம் தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் பெய்த கனமழையால் தென்பெண்ணையாறு, சங்கராபரணி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் புதுச்சேரியில் உள்ள 26 படுகை அணைகளும் நிரம்பி வழிந்தது.

    இந்த மாத தொடக்கத்தில் மழை இல்லை. பகல் நேரத்தில் கடும் வெயில் அடித்தது. ஆனால் இடையில் சில நாட்கள் லேசான மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது.

    இன்று அதிகாலை முதல் அவ்வப்போது விட்டு விட்டு லேசான மழை பெய்து வருகிறது. அதோடு வானம் இருண்டு காணப்படுகிறது.

    இதனிடையே பருவமழையின் தொடர்ச்சியாக இந்திய வானிலை ஆய்வு மையம் வங்காள விரிகுடா கடற்பரப்பின் மீது காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை (திங்கட்கிழமை) கனமழை மற்றும் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் காற்று மணிக்கு 55 கி.மீ. வரை வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

    மேலும் புதுச்சேரி பகுதிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் மிக பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்கும்படியும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    மேலும், அரசு அளித்துள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றுவதுடன், வதந்திகளை நம்பாமல் அரசு அளிக்கும் செய்திகளை மட்டுமே பின்பற்றுமாறு மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் அறிவித்துள்ளார்.

    Next Story
    ×