search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காசி விசுவநாதர் கோவிலில் யோகி ஆதித்யநாத் 100-வது முறையாக சாமி தரிசனம்
    X

    காசி விசுவநாதர் கோவிலில் யோகி ஆதித்யநாத் 100-வது முறையாக சாமி தரிசனம்

    • கடந்த செப்டம்பர் 9-ந் தேதி 100-வது முறையாக வாரணாசி சென்றிருந்தார்.
    • இது அவரது 113-வது வாரணாசி பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

    வாரணாசி :

    உத்தரபிரதேசத்தின் முதல்-மந்திரியாக கடந்த 2017-ம் ஆண்டு பதவியேற்றார் யோகி ஆதித்யநாத். அதுமுதல் சராசரியாக 21 நாட்களுக்கு ஒருமுறை புகழ்பெற்ற காசி விசுவநாதர் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்து வருகிறார். அந்தவகையில் கடந்த 6 ஆண்டுகளில் 100-வது முறையாக நேற்று அவர் சாமி தரிசனம் செய்தார். அங்கு அவர் விசுவநாதருக்கு சிறப்பு வழிபாடும் செய்தார். இதன் மூலம் காசி விசுவநாதர் கோவிலில் 100 முறை சாமி தரிசனம் செய்த முதலாவது முதல்-மந்திரி என்ற பெருமையை யோகி ஆதித்யநாத் பெற்றுள்ளார்.

    யோகி ஆதித்யநாத் மாதத்துக்கு குறைந்தபட்சம் ஒருமுறையாவது காசிக்கு சென்று வருவதுடன், நகரில் நடந்து வரும் வளர்ச்சிப்பணிகளையும் ஆய்வு செய்து வருகிறார். கடந்த செப்டம்பர் 9-ந் தேதி அவர் 100-வது முறையாக வாரணாசி சென்றிருந்தார். அப்போது 88-வது முறையாக விசுவநாதர் கோவிலில் தரிசனம் செய்திருந்தார். தற்போதும் அவர் 2 நாள் பயணமாக வாரணாசி சென்றுள்ளார். இது அவரது 113-வது வாரணாசி பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×