என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
காசி விசுவநாதர் கோவிலில் யோகி ஆதித்யநாத் 100-வது முறையாக சாமி தரிசனம்
- கடந்த செப்டம்பர் 9-ந் தேதி 100-வது முறையாக வாரணாசி சென்றிருந்தார்.
- இது அவரது 113-வது வாரணாசி பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
வாரணாசி :
உத்தரபிரதேசத்தின் முதல்-மந்திரியாக கடந்த 2017-ம் ஆண்டு பதவியேற்றார் யோகி ஆதித்யநாத். அதுமுதல் சராசரியாக 21 நாட்களுக்கு ஒருமுறை புகழ்பெற்ற காசி விசுவநாதர் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்து வருகிறார். அந்தவகையில் கடந்த 6 ஆண்டுகளில் 100-வது முறையாக நேற்று அவர் சாமி தரிசனம் செய்தார். அங்கு அவர் விசுவநாதருக்கு சிறப்பு வழிபாடும் செய்தார். இதன் மூலம் காசி விசுவநாதர் கோவிலில் 100 முறை சாமி தரிசனம் செய்த முதலாவது முதல்-மந்திரி என்ற பெருமையை யோகி ஆதித்யநாத் பெற்றுள்ளார்.
யோகி ஆதித்யநாத் மாதத்துக்கு குறைந்தபட்சம் ஒருமுறையாவது காசிக்கு சென்று வருவதுடன், நகரில் நடந்து வரும் வளர்ச்சிப்பணிகளையும் ஆய்வு செய்து வருகிறார். கடந்த செப்டம்பர் 9-ந் தேதி அவர் 100-வது முறையாக வாரணாசி சென்றிருந்தார். அப்போது 88-வது முறையாக விசுவநாதர் கோவிலில் தரிசனம் செய்திருந்தார். தற்போதும் அவர் 2 நாள் பயணமாக வாரணாசி சென்றுள்ளார். இது அவரது 113-வது வாரணாசி பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்