என் மலர்tooltip icon

    இந்தியா

    பானி பூரி சாப்பிட வாயை திறந்த பெண்.. விலகிய தாடை - திகைத்த மருத்துவர்கள்
    X

    பானி பூரி சாப்பிட வாயை திறந்த பெண்.. விலகிய தாடை - திகைத்த மருத்துவர்கள்

    • பெரிய பானிபூரியை வாயில் வைக்க அவர் வாய் திறந்த நிலையில் அதன் பிறகு மூட முடியவில்லை.
    • இது மிகவும் சீரியசான விஷயம் என கூறி அவரை மற்றொரு மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.

    உத்தரபிரதேசத்தின் அவுரையா மாவட்டத்தை சேர்ந்தவர் இன்கிலா தேவி. இவர் சந்தைக்குச் சென்றபோது ஒரு பானி பூரி தள்ளுவண்டி கடையில் நின்று பானி பூரி வாங்கி சாப்பிட்டுள்ளார்.

    பானிபூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இன்கிலா தேவியின் தாடை எலும்பு இடம்பெயர்ந்தது. பெரிய பானிபூரியை வாயில் வைக்க அவர் வாய் திறந்த நிலையில் அதன் பிறகு மூட முடியவில்லை.

    இதனால் அவர் கடுமையான வலியை சந்தித்தார். உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் இது மிகவும் சீரியசான விஷயம் என கூறி அவரை மற்றொரு மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்.

    எனவே அந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இன்கிலா தேவியின் தாடை எலும்பு இடப்பெயர்வை அங்குள்ள மருத்துவர்கள் நீண்ட முயற்சியின் பின் சரி செய்தனர்.

    Next Story
    ×