என் மலர்
இந்தியா

'ஒரே நாடு, ஒரே வரி' கொள்கை அமல்படுத்தப்படுமா?.. நிர்மலா சீதாராமன் கொடுத்த பதில்
- 12, 28 ஆகிய 2 அடுக்குகளை நீக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்தது.
- அரசாங்கத்தின் வரி குறைப்புகளின் பலன்கள் முழுமையாக நுகர்வோருக்கு பலனளிப்பதை உறுதி செய்ய கடுமையான கண்காணிப்பு இருக்கும்.
நாடு முழுவதும் 'ஒரே நாடு, ஒரே வரி' கொள்கையை அமல்படுத்துவது சாத்தியமில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
4 அடுக்குகளை கொண்ட ஜிஎஸ்டி வரிமுறையில் 12, 28 ஆகிய 2 அடுக்குகளை நீக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒப்புதல் அளித்த நிலையில் 5 மற்றும் 18 ஆகிய 2 அடுக்குகள் மட்டுமே இனி இருக்கும். இந்நிலையில் ஒரே நாடு ஒரே வரியை கொண்டு வரக் கோரி கோரிக்கைகள் எழுந்தன.
இதுகுறித்து தனியார் ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் பதிலளித்த நிர்மலா சீதாராமன், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இடையே பொருளாதார வளர்ச்சியில் கடுமையான வேறுபாடுகள் உள்ளன. இந்த சூழலில் நாடு முழுவதும் 'ஒரே நாடு, ஒரே வரி' கொள்கையை அமல்படுத்துவது சாத்தியமில்லை" என்று தெரிவித்தார்.
ஆடம்பர பென்ஸ் கார் மற்றும் சாமானியர்கள் பயன்படுத்தும் Flip flop செருப்புக்கும் ஒரே வரி விதிப்பது நியாயமற்றது" என்று தெரிவித்தார்.
மேலும் அரசாங்கத்தின் வரி குறைப்புகளின் பலன்கள் முழுமையாக நுகர்வோருக்கு பலனளிப்பதை உறுதி செய்ய கடுமையான கண்காணிப்பு இருக்கும் என்று அவர் உறுதியளித்தார்.






