என் மலர்
இந்தியா

சித்தராமையா முதல்வராக தொடர்ந்தால் என்ன தவறு?- டி.கே. சிவக்குமார் கேள்வி
- முதலமைச்சர் அங்கே இருப்பதில் என்ன தவறு?. அவர் இருக்கட்டும்.
- நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றி வருகிறோம்.
கர்நாடக மாநில முதல்வராக இருக்கும் சித்தராமையா மாற்றப்பட்டு, துணை முதல்வராக இருக்கும் டி.கே. சிவக்குமார் முதல்வராவார் என்ற பேச்சு கர்நாடாக மாநில காங்கிரஸ் தலைவர்களிடையே ஓடிக்கொண்டிருக்கிறது. அதேவேளையில் காங்கிரஸ் கட்சியின் மேல்மட்ட தலைவர்கள்தான் இது குறித்து முடிவு செய்வார்கள். அவர்கள் முடிவே இறுதியானது என சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அம்மாநில மந்திரி பி.இசட். ஜமீர் அகமது கான் சமீபத்தில் சித்தராமையாக 2028-ல் ஐந்து வருடம் முதலமைச்சர் பதவியை நிறைவு செய்த பின்னர் டி.கே. சிவக்குமாரால் முதல்வராக முடியும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் டி.கே. சிவகுமாரிடம் காங்கிரஸ் ஆட்சி இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்துவிட்டதே, சிலர் நவம்பர் புரட்சி என்கிறார்களே? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டி.கே. சிவக்குமார் பதில் அளித்ததாவது:-
மிகவும் மகிழ்ச்சி. முதலமைச்சர் அங்கே இருப்பதில் என்ன தவறு?. அவர் இருக்கட்டும். நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றி வருகிறோம். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். தொடர்ந்து ஒற்றுமையாக இருப்போம்.
இவ்வாறு டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.






