search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வேட்பாளர்களின் சொத்துக்கள் குறித்த முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள வாக்காளர்களுக்கு உரிமை உண்டா?
    X

    வேட்பாளர்களின் சொத்துக்கள் குறித்த முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள வாக்காளர்களுக்கு உரிமை உண்டா?

    • ஒவ்வொரு மற்றும் அனைத்து சொத்துகளையும் முற்றிலுமாக தெரிந்து கொள்ள வாக்களார்களுக்கு முழு உரிமை கிடையாது.
    • வேட்பாளர்களுக்கு தனியுரிமைக்கான உரிமை உண்டு.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அத்துடன் தங்களுடைய அசையும் சொத்து மற்றும் அசையா சொத்துகள், தங்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். ஒருவேளை சொத்துக்களை மறைத்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால் பதவி பறிபோகும் நிலை ஏற்படும்.

    மக்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிபெற்ற பின் பிரமாண பத்திரத்தில் சொத்து மதிப்பை குறைத்து காட்டியது தொடர்பான வழக்குகளை எதிர்கொண்ட சம்பவங்களும் உண்டு.

    வேட்பாளர்களின் பிரமாண பத்திரம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்றம் கூறியதாவது:-

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஒவ்வொரு மற்றும் அனைத்து சொத்துகளையும் முற்றிலுமாக தெரிந்து கொள்ள வாக்களார்களுக்கு முழு உரிமை கிடையாது.

    கணிசமான மதிப்பு அல்லது ஆடம்பரமான வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்காத பட்சத்தில், வேட்பாளர்கள் தங்களுக்கு அல்லது அவர்களது குடும்பத்தினருக்குச் சொந்தமான ஒவ்வொரு அசையும் சொத்துகளையும் வெளியிட வேண்டியதில்லை.

    பொருத்தமற்றது என கருதும் விசயங்களை பொது அலுவலகத்தில் தெரிவிக்காத வகையில் வேட்பாளர்களுக்கு தனியுரிமைக்கான உரிமை உண்டு.

    இவ்வாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×