என் மலர்
இந்தியா

VIDEO: பிள்ளைகளுக்காக வாங்கிய பப்ஸ்-இல் கிடந்த பாம்பு - அதிர்ச்சியில் உறைந்த பெண் - பேக்கரி மீது புகார்
- தனது குழந்தைகளுக்காக ஒரு முட்டை பப்ஸ் மற்றும் ஒரு சிக்கன் பப்ஸ் வாங்கி சென்றார்.
- ஆனால் பேக்கரி உரிமையாளர்கள் அலட்சியமாக பதில் அளித்ததாக தெரிகிறது.
தெலுங்கானாவில் பேக்கரி ஒன்றில் சிக்கன் பப்ஸ் -இல் இறந்த பாம்பு கிடந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தெலுங்கானா மஹபூப்நகர் மாவட்டம் ஜட்சர்லாவில் உள்ளூர் பேக்கரியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஸ்ரீசைலா என்ற பெண் நேற்று அங்கு, தனது குழந்தைகளுக்காக ஒரு முட்டை பப்ஸ் மற்றும் ஒரு சிக்கன் பப்ஸ் வாங்கி சென்றார்.
வீட்டில் சிக்கன் பப்ஸ் பார்சலை திறந்தபோது உள்ளே இறந்த குழந்தை பாம்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அதை எடுத்துக்கொண்டு நேராக பேக்கரிக்குச் சென்று கேட்டுள்ளார். ஆனால் பேக்கரி உரிமையாளர்கள் அலட்சியமாக பதில் அளித்ததாக தெரிகிறது.
உரிமையாளரின் நடத்தையால் கடும் கோபமடைந்த ஸ்ரீசைலா காவல் நிலையத்தி புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






