search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல்- வாலிபர் மீது போலீஸ் வழக்குப் பதிவு
    X

    யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல்- வாலிபர் மீது போலீஸ் வழக்குப் பதிவு

    • உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.
    • விரைவில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கொலை செய்வேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

    சென்னை:

    உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.

    இவரது ஆட்சியில் கடந்த 6 வருடங்களாக உ.பி.யில் ரவுடிகளை ஒழிப்பதற்கு என்கவுண்டர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையொட்டி இதுவரை 183 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

    சமீபத்தில் பிரபல தாதா ஆதித்யா அகமது சகோதரர் அஷ்ரப் அகமது என் கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அரசின் அவசரகால நம்பரான 112 என்ற எண்ணில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத்துக்கு ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் விரைவில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கொலை செய்வேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து லக்னோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் தொடர்பு எண்ணை ஆராய்ந்தபோது மிரட்டல் விடுத்தவர் பெயர் ரீகன் என்பதும் முகப்பில் அல்லா என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்வதற்கு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×