search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உ.பி. படகு விபத்து- பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
    X

    உ.பி. படகு விபத்து- பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

    • யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததும் சிலர் நீந்தி கரையேறினர்.
    • உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் உதவித் தொகை

    பாண்டா:

    உத்தரப்பிரதேசம் மாநிலம், பண்டா நகரத்தில் யமுனை ஆற்றில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நேற்று முன்தினம் மாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அதில் சுமார் 40 பேர் பயணித்தனர். படகு கவிழ்ந்ததும் சிலர் நீந்தி கரையேறினர்.

    தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல் நாளில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மற்றவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் உதவித் தொகை வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×