search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

    • புத்காம் மாவட்ட கோர்ட்டு வளாகம் அருகே பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்தனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புத்காம் மாவட்ட கோர்ட்டு வளாகம் அருகே இன்று காலை பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர்.

    இந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்தனர். அவர்கள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரியவில்லை.

    மேலும் அந்த பகுதியில் வேறு பயங்கரவாதிகள் யாரும் இருக்கிறார்களா என பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×