என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பனி படர்ந்த மலைகளில் தியானம் செய்த யோகி
- இஷ்நாத் இமயமலையில் யோகா பாரம்பரியமான இஷ்புத்ராவை உருவாக்கி வருகிறார்.
- வீடியோ இமாச்சல பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் உள்ள சிராஜ் பள்ளத்தாக்கில் எடுக்கப்பட்டது என்பது தெரிய வந்தது.
இமாச்சல பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தின் பனி படர்ந்த மலை பகுதியில் யோகி ஒருவர் தியானம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், பஞ்சாபை சேர்ந்த சத்யேந்திரநாத் என்ற அந்த யோகியின் ஆடை, தலைமுடி, முகம் என அனைத்தும் பனியால் மூடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்களால் அதை நம்ப முடியாமல் திகைத்தனர். அந்த வீடியோ இமாச்சல பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் உள்ள சிராஜ் பள்ளத்தாக்கில் எடுக்கப்பட்டது என்பது தெரிய வந்தது. இவர் சத்யேந்திரநாத் கவுலாந்தக் பீத் ஆசிரமத்தில் கடந்த 22 ஆண்டுகளாக யோகா பயிற்சி செய்து வருகிறார். இவர் இஷ்நாத் என்ற இமயமலை யோகியை பின்தொடர்ந்து வருகிறார்.
இஷ்நாத் இமயமலையில் யோகா பாரம்பரியமான இஷ்புத்ராவை உருவாக்கி வருகிறார். இஷ்நாத் இமயமலை யோகா யுக்தியின் மையமாகவும், தெய்வீக இடமாகவும் அறியப்படும் கவுலாந்தக் பீடத்தின் தலைவர் ஆவார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்