search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உண்மை எப்போதும் வெல்லும், ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி- ராகுல் காந்தி
    X

    உண்மை எப்போதும் வெல்லும், ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி- ராகுல் காந்தி

    • அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைப்பு.
    • உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவீட்.

    அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததை அடுத்து, உண்மை எப்போதும் வெற்றி பெறும் என்றும், மக்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறுகையில், " இன்று இல்லை என்றால் நாளையோ அல்லது நாளை மறுநாளோ உண்மை எப்பொழுதும் வெல்லும். மக்களின் ஆதரவுக்கு நான் நன்றி கூறுகிறேன்" என்றார்.

    மேலும், ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்," இந்தியா என்ற எண்ணத்தைப் பாதுகாக்கும் எனது கடமை அப்படியே உள்ளது " என்று குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×